சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மதிப்பாய்வுக்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நிதியமைச்சினால் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் உரிய முறையில் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்றூவர் இதன்போது தெரிவித்துள்ளார்.