காங்கேசன்துறை துறைமுகத்தின் முழுமையான அபிவிருத்திக்காக 61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதனை அறிவித்துள்ளார். இந்த அபிவிருத்திப் பணியின் மூலம், துறைமுகத்தினை 30 மீற்றர் ஆழப்படுத்தவும், காங்கேசன்துறை துறைமுகத்தில் பெரிய கப்பல்களை தரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.