Header image alt text

தமிழ் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் ஜனன தினம்-

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் 112ஆவது ஜனன தினத்தையொட்டி யாழ். குருநகரில் அமைந்துள்ள அன்னாருடைய உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்றுகாலை இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறில் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வலி மேற்கு பிரதேசசபை தலைவர் நாகரஞ்சினி ஐங்கரன், கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான விந்தன், பரஞ்சோதி ஆகியோரும் ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நினைவுக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பரஞ்சோதி, விந்தன் ஆகியோர் அமரர் ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்களின் சிறப்புப்பற்றி உரையாற்றினார்கள்.

கூட்டமைப்பு பிரமுகர் தம்பிராசாவின் உண்ணாவிரதம் நிறைவுக்கு வந்தது-

யாழ். வலி. வடக்கு மக்களின் வீடுகள் படையினரால் இடித்தழிக்கப்படுவதை கண்டித்தும் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும் நேற்றுக் காலைமுதல் யாழ். கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள முனியப்பர் ஆலயம் முன்பாக இரண்டு நாட்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா இன்றுமாலை 4மணியுடன் தனது போராட்டத்தினை நிறைவுசெய்து கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக முத்தையாப்பிள்ளை தம்பிராசா களமிறங்கியிருந்தார்.

புதுக்குடியிருப்பில் ஆயுதங்கள் மீட்பு-

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச கிணறு ஒன்றிலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 70 அடி வரையிலான ஆழமுடைய இந்தக் கிணறை நேற்று முன்தினம் இறைக்கும்போது, பாவனைக்குட்படுத்தப்படாத ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் அடங்கிய பெட்டி ஒன்றும், 50மில்லிமீற்றர் ரக துப்பாக்கி ரவைகளும் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் குறித்த கிணற்றில் மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பெயரில், இராணுவத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. இதன்படி நேற்றுமாலை அங்கு சென்ற இராணுவத்தினர் உரப்பை ஒன்றினுள் துருப்பிடிக்காதவாறு கிறீஸ் பூசப்பட்ட  நிலையில் வைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.

கல்முனை மேயர் சிராஸ் இராஜினாமா-

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான தனது இராஜினாமா கடிதத்தினை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஹக்கீமின் வீட்டில் வைத்தே தனது இராஜினாமா கடிதத்தினை அவர் கையளித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக அவர் செயற்பட முடியாது எனவும் மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறும் கட்சியின் தலைவர் மேயர் சிராஸ் மீராசாஹிப்க்கு அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேசிய அடையாள அட்டைபெற கால அவகாசம்

இம்முறை க.பொ.த சாஃத பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டைப் பெற்றுக்கொள்ள இரண்டுவாரம் விசேட காலஅவகாசம் வழங்குவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 11ம் திகதி தொடக்கம் இரண்டு வாரத்திற்கு இந்த கால அவகாசம் வழங்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார். அநேகமான மாணவர்களுக்கு தற்போது தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பனங்கட்டிகொட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வெளி மாகாண மீனவர்களின் வருகையினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து மன்னார் பனங்கட்டிகொட்டு மீனவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். பனங்கட்டிகொட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினால் இன்றுமுற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வெளி மாகாண மீனவர்கள் அங்கு வருகை தந்து வாடிகளை அனுமதியின்றி அமைத்து இரவுநேர மீன்பிடியில் ஈடுபடுவதுடன், வேறு தொழில்களில் ஈடுபடுகின்றமையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இந்த மீனவர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். சுமார் 500 மீனவர்கள் இன்றைய தொழில் நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வெளி மீனவர்கள் தமது வாடிகளை அகற்றி, அமைதியான முறையில் தமது வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சூழலை அதிகாரிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என பனங்கட்டிகொட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஜஸ்டின் சொய்ஸா தெரிவித்துள்ளார். மீனவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

மாநாட்டை புறக்கணிக்கும் முடிவு சரியானதே-டேஸ்மன்ட டுட்டு-

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக உலக நாடுகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு நெருக்கடிகளைத் தந்து அந்த நாட்டை சரியான பாதைக்குத் திரும்பச் செய்ய வேண்டும். இலங்கை தீவிரமாக செயற்பட அதற்கு அழுத்தம் கொடுக்க உதவும் என்றால் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்பு செய்யும் முடிவும் சரியானதுதான் என நோபல் பரிசு வென்ற தென் ஆபிரிக்க தலைவர் டேஸ்மன்ட் டுட்டு தெரிவித்துள்ளார். புதுடில்லி சென்றுள்ள டுட்டு, அங்கு  செய்தியாளர்களைச் சந்தித்தபோது பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிப்பது குறித்த விவாதம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அக்கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நல்ல களமாக பொதுநலவாய மாநாடு அமையும் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயம் தமிழ் சமுதாயத்தினரின் உரிமைகள் குறித்தும் அவர்களது மறுவாழ்வு குறித்தும் மறுசீரமைப்பு தொடர்பிலும் இங்கு விவாதிக்க முடியும் தீர்மானங்கள் போட முடியும். Read more

பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சுன்னாகம் வாழ்வகத்திற்கு விஜயம்-

vaazhvaham 07.11.2013. (1) vaazhvaham 07.11.2013. (5) vaazhvaham 07.11.2013. (6)

vaazhvaham 07.11.2013. (7)தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இன்றுமாலை சுன்னாகம் வாழ்வகத்திற்கு விஜயம் செய்திருந்தனர். யாழ். சுன்னாகம் வாழ்வகத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து ஒரு தொகை நிதியினை வழங்கியிருந்தார். இந்த நிதியினைக் கொண்டு செப்பனிடப்பட்ட வாழ்வகத்தின் உள்வீதியினை அ.விநாயகமூர்த்தி அவர்களும், தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் நேரில் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்;த்தி அவர்கள், இந்த வாழ்வகத்தின் பணிகளுக்காக இன்னமும் நிதி உதவிகளை வழங்குவதற்கு எண்ணியுள்ளேன். அதனைக் கொண்டு வாழ்வகத்தின் பணிகளை சிறப்பாக முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். என்று தெரிவித்தார். வாழ்வகத்தின் உள்வீதியைப் புனரமைக்க உதவியமைக்காக வாழ்வக இயக்குநர் ஆ.ரவீந்திரன் அவர்களும், வாழ்வகத்தைச் சேர்ந்த துஷ்யந்தி நாகராஜாவும் இதன்போது நன்றி தெரிவித்து உரையாற்றினார்கள்.

இன்று முதல் அதிவிரைவு தபால் சேவை-

இலங்கை தபால் சேவை வரலாற்றில் முதன்முறையாக அதிவிரைவு தபால் சேவை இன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அதிவிரைவு தபால் சேவை இன்று முற்பகல் 10மணி ஒரு நிமிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதிவிரைவு தபால் சேவையின் ஊடாக 24 மணித்தியாலத்திற்குள் தபாலை உரியவருக்கு சேர்ப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 9 வாகனங்கள் இந்த சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் கிழக்கு மாகாணத்திலும் அதிவிரைவு தபால் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு மாகாண தபால் மாஅதிபர் வாசுகி அருளாராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. குறைந்த கட்டணத்தில் இந்த சேவைகள் முன்னெடுக்கப்படுவதுடன், 20 கிராமிற்கு ஆரம்ப விநியோக வலையத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு 50ரூபா கட்டணம், ஏனைய பகுதிகளுக்கான விநியோகக் கட்டணமாக 60 ரூபாவும் அறவிடப்படவுள்ளது. மேலதிக ஒவ்வொரு 10 கிராமிற்கும் 10 ரூபாவால் கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மாற்றத்தை பார்க்க விரும்புகின்றேன்: ஹேக்-

இலங்கைப் பிரச்சினையை பொறுத்தளவில் எல்லையோரத்தில் நிற்பதனால் ஐக்கிய இராச்சியத்தால் பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது எனவும் இலங்கையில் மாற்றத்தைக் காண விரும்புபவர்களில் தானும் ஒருவர் எனவும் பிரித்தானிய வெளிவிவகார செயலர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாட்டை பகிஸ்கரிப்பது தவறானது. மாநாட்டுக்கு செல்வதே சரியானது. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சர்வதேச சமூகம் இதையே செய்தது. அங்கு செல்வதனால் நிலைமையை நாம் நேரடியாக அவதனிக்க முடியும். சகல தரப்பு மக்களையும் சந்திக்க முடியும். நாம் காணும் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் நேரடியாகவும் வெளிப்படையாகவும் பிரஸ்தாபிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

அடையாள அட்டை விண்ணப்பம்-

இந்த வருடத்திற்காக கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் அடையாள அட்டைகள் இதுவரை கிடைக்காத பட்சத்தில் அது அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு தமது விண்ணப்பங்களை முன்வைக்குமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.சரத்குமார வேண்டுகோள் விடுத்துள்ளார். பெயர், விலாசம், தொலைத்தொடர்பு இலக்கம் மற்றும் விண்ணப்ப இலக்கங்களுடன் துரிதமாக 0112593634 என்ற இலக்கத்திற்கு தொலைநகல் மூலம் அனுப்பிவைக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி சில்வா காலமானார்-

இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபர் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி சி.ஆர்.டி சில்வா இன்றுகாலை காலமானார். சுகயீனமுற்ற நிலையில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் இன்று காலமானார். இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயவென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவராக சி.ஆர்.டி சில்வா செயற்பட்டவர்.

வாக்காளர் பெயர்ப்பட்டியல்; மேன்முறையீடு பரிசீலிப்பு

2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் தொடர்பில் கிடைத்துள்ள மேன்முறையீடுகளை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மட்டத்தில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது, மேன்முறையீடுகள் தொயடர்பில் கிடைத்துள்ள ஆட்சேபனைகள்  தொடர்பிலும் கவனத்திற் கொள்ளப்படவுள்ளது. இம்மாத இறுதிக்குள் அனைத்து மேன்முறையீடுகளையும் பரிசீலனை செய்யவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்பின் 2013ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலை வெளியிட முடியுமெனவும் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இணுவிலில் உயிருள்ளவரை நட்பிருக்கும் குறும்படம் வெளியீடு-கௌரவ விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. பா.கஜதீபன்

1392035_618883394821712_1443595897_n

யாழ். இணுவில் அறிவாலயத்தில் தீபாவளி தினத்தன்று (02.11.2013) காலை குறும்பட வெளியீட்டு நிகழ்வொன்று இடம்பெற்றது. உயிருள்ளவரை நட்பிருக்கும் என்கிற பெயரிலான இந்த குறும்பட வெளியீட்டு நிகழ்வினை திரு. ஞானசூரியர் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். இணுவிலைச் சேர்ந்த திரு. கௌரீசன் அவர்களும் அவருடைய நண்பர்களும் இந்த குறும்படத்தை தயாரித்து இயக்கியிருந்தனர். இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வணிகத்துறை பீடாதிபதி பேராசிரியர் திரு.தேவராஜா அவர்கள் கலந்துகொண்டு மேற்படி குறும்படத்தினை வெளியிட்டு வைத்தார். சிறப்பு விருந்தினராக திரு. கு.விக்னேஸ் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. பா.கஜதீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில்; இளைஞர்கள், பெண்கள் ஊர் பிரமுகர்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர். (இந்நிகழ்வு சம்பந்தமான படங்கள் இங்கு தரப்படுகின்றன).

   1382816_618883728155012_1191960581_n  1385253_618883614821690_1670498497_n 1381565_618883338155051_1179287294_n1395397_618883178155067_1563085995_n1391731_618883554821696_273998781_n1450320_618882974821754_232691083_n

1392035_618883394821712_1443595897_n1450349_618883061488412_251477256_n941809_618883014821750_46036827_n

 

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும், வலி.வடக்கு வீடழிப்பைக் கண்டித்தும் கூட்டமைப்பு பிரமுகர் தம்பிராசா உண்ணாவிரதம்

யாழ். வலி. வடக்கு மக்களின் வீடுகள் படையினரால் இடித்தழிக்கப்படுவதை கண்டித்தும் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும் நாளை உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு பிரமுகர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா இன்று அறிவித்துள்ளார். வலிகாமம் வடக்கிலிருந்து கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இடமபெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றன. அவற்றினை எதிர்க்கும் விதமாக யாழ். நகரில் உள்ள முனியப்பர் ஆலயம் முன்பாக நாளைகாலை 6.15 மணிமுதல் வெள்ளிக்கிழமை வரை உண்ணாவிரத பேராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த வடமாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக தம்பிராசா களமிறங்கியிருந்தார். Read more

கிறீன்கட்சி உறுப்பினர்கள் இலங்கை வர முயற்சி-

அவுஸ்திரேலிய கீரின் கட்சி செனட்டர் லீ ஆர்ஹியான்னோன் இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக பொதுநலவாய நாடுகள் மாநாட்டிற்கு முன்பதாகவே இலங்கை செல்லவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நியூஸிலாந்தின் கீரின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் லோகியும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டிற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய அவர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதேவேளை நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சனல் 4 இயக்குனர் இலங்கை வர அனுமதி-

சனல் 4 ஆவணப்படங்களின் இயக்குனர் கெல்லும் மெக்ரே இலங்கைக்குள் நுழைவதற்கான விஸா வழங்கப்பட்டுள்ளது என ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்காகவே இவருக்கு விஸா வழங்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்காக சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் குழுவினருக்கும் விஸா வழங்கப்பட்டுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களமும் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 
 
மன்மோகன் எதிர்பார்பை நிறைவேற்ற வேண்டும்

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு இந்திய பிரதமர் மன்மோன்சிங் இலங்கை சென்றால், அவர் வடக்கிற்கு செல்வது சிறந்தது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். அது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே, இலங்கை மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்வது தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது இங்கு குறிப்பிட்டத்தக்கது.

புத்தூர் பெண் கொலை தொடர்பில் கவனயீர்ப்பு போhட்டம்-

யாழ். புத்தூர் பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. யாழ். புத்தூர் கிழக்கு பருத்தித்துறை வீதியில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இன்றுகாலை 7 மணிமுதல் 10 மணிவரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.  உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், ஊர்மக்கள் பெண்கள் அமைப்பினர், என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். கடந்த 29ஆம் திகதி புத்தூர் கிழக்கை சேர்ந்த அமிர்தலிங்கம் மைதிலி (வயது 27) எனும் பெண் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.  இந்த பெண் பாலியல் பலாத்தகாரத்திற்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் போடப்பட்டு இருக்கலாம் என ஊர் மக்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக உரிய விசாரணைகள் துரித கெதியில் மேற்கொள்ளப்பட்டு இந்த கொலை குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என கோரியே கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இராணுவத்தினருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் வீடழிப்பு நடவடிக்கையினை தடுத்து நிறுத்தக் கோரியும் எதிர்வரும் 12ஆம் திகதி காலை 8மணி தொடக்கம் மாவட்டபுரம் கந்தசுவாமி கோவில் முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் அறிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பினை மீறி வலிகாமம் வடக்கில் மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் தொடர்ந்து இடித்தழிக்கப்பட்டு வருவதையடுத்தே இந்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக நிற்குமாறு அழுத்தம்-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டில் நியூசிலாந்து, இலங்கைக்கு எதிராக ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான தூதுக்குழு மற்றும் மனு ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை நியூசிலாந்து பாராளுமன்றிற்கு இன்று அனுப்பியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மேற்கொண்டுள்ள மனித உரிமை மீறல்களை நியூசிலாந்து கணக்கிலெடுக்காது இருக்க முடியாது எனவும், எனவே பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின்போது பொதுநலவாய அமைப்பு தலைவர் பதவி இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்படுவதை நியூசிலாந்து எதிர்க்க வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பேச்சாளர் கிராண்ட் பெயில்டோன் கூறியுள்ளார்.

பொதுநலவாயத்தை ஜெயா எதிர்த்தமைக்காக நன்றி தெரிவிப்பு-

பொதுநலவாய மாநாட்டுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பிரிட்டன் முன்னாள் அமைச்சர் ஜோன் மாரி ரெயன நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்து இலங்கை அமர்வுகளில் இந்தியா பங்கேற்கக் கூடாது என கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது. இதற்காக உலகத் தமிழர் பேரவையின் சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் விபத்து, இராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு-

கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் ஒருவரும், அதிகாரி ஒருவரும்  மரணமடைந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்திலிருந்து குருநாகல் இராணுவத் தலைமையகத்திற்கு சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

பொதுநலவாயத்தை முன்னிட்டு புதிய 500 ரூபா நாணயத்தாள் வெளியீடு-

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு புதிய 500 ரூபா நாணயத்தாளை வெளியிடவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்தப் புதிய 500 ரூபா நாணயத்தாளில் பொதுநலவாயம் – இலங்கை என்ற இலச்சினை பொறிக்கப்பட்டிருக்கும் என்பதுடன், இந்த நாணயத்தாள் நவம்பர் 15ஆம் திகதியிலிருந்து சுழற்சிக்கு விடப்படும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் சடலங்கள் மீட்பு

அநுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்களை இன்றுகாலை பொலிஸார் மீட்டுள்ளனர். அநுராதபுரம், ஹல்மில்லகுளம பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே மேற்படி சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

பண்டாரவளை பஸ் விபத்தில் 10 பேர் பலி, 18 பேர் காயம்-

பண்டாரவளை, பூனாகலை, மாபிடிய பகுதியில் பஸ் ஒன்று 350அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்து நேற்றுமாலை 6.50அளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 16வயது சிறுமி உள்ளிட்ட 5 பெண்களும் அடங்குகின்றனர். விபத்தில் பஸ் சாரதி மற்றும் நடத்துநனர் உட்பட மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கைதடி மத்தி விநாயகர் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துரையாடல்-

0

1401519_462913833826353_259321239_o11457721_462151293902607_157866146_n

யாழ். கைதடி மத்தி விநாயகர் சனசமூக நிலையத்தில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உ0றுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியுள்ளார். விநாயகர் சனசமூக நிலையத்தின் தலைவர் செல்லையா மயூரன் அவர்களும், சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்களும், பொதுமக்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். இதன்போது அந்தப் பகுதியின் நிலைமைகள் தொடர்பிலும், பிரதேசத்தில் நிலவும் தேவைகள், குறைபாடுகள் பற்றியும் மாகாணசபை உறுப்பினர் திரு. சித்தார்த்தன் அவர்கள் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. திரு. பிரகாசன் கஜவர்ணன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது வட மாகாணசபையின் அதிகாரங்கள், செயற்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.