Header image alt text

 

 DSC03462தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுபினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழர்களுடன் சுவிஸ் சூர்ச் நகரில் நடாத்திய கலந்துரையாடல்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=D5jPFaRrmZc

நன்றி
ஆதவன் இணையத் தொலைக்காட்சி

images

download (2)downloaddownload (1)

கறுப்பு யூலையின் 31ம் ஆண்டு நினைவுதினம் 23ம் திகதியாகிய இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படுகின்றது. வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ்மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியில் அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. 1983, ஜூலை 23ம் திகதி யாழ். திருநெல்வேலியில் தமிழ் இளைஞர்களின் கெரில்லாத் தாக்குதலில் 13படையினர் பலியானதைத் தொடர்ந்து தமிழ் மக்கள்மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதன்போது ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பெருமளவிலான தமிழ்மக்கள் தமது உடமைகளையும், சொத்துக்களையும் இழந்து அநாதரவாக்கப்பட்டனர். தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட இந்த அவலநிலையைத் தொடர்ந்தே இன விடுதலைப் போராட்ட இயக்கங்களில் பெருமளவு தமிழ் இளைஞர்கள் தம்மை இணைத்துக் கொண்டனர். இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும், இன்னும் பல்வேறு நாடுகளிலும் கறுப்பு யூலை நினைவு தினம் ஆண்டுதோறும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

அராலி வடக்கு திருமகள் விளையாட்டுக்கழக ஆண்டு விழா-

arali vadakku thirumakal (1)arali vadakku thirumakal (2)aral vadakku thirumakalயாழ். அராலி வடக்கு திருமகள் விளையாட்டுக் கழகத்தின் ஆண்டு விழா 20.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இவ் நிகழ்வில்; சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் வெற்றிபெற்ற அணியினருக்கு வெற்றிக் கேடயத்தினை வழங்கிவைத்தார். இவ் நிகழ்வில் கலந்துகொண்ட தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, கடந்த காலங்களில் இவ் அராலிப பகுதியில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். அராலிப் பகுதி இளைஞர்கள் விளையாட்டுத்துறைக்கு மிக அதிகமான முக்கியத்துவம் வழங்குபவர்கள். இதேபோல விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தக்கூடிய ரசிகர்களும் இங்கு அதிகமாக உள்ளனர். கல்விக்கு சமமான முறையிலும் இன்று நாம் விளையாட்டுத்துறையையும் ஊக்குவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்று திட்டமிட்ட வகையில் எமது இளைய தலைமுறையினை சீரழிப்பதற்கான நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டநிலையில் உள்ளது. இளைய சமுதாயத்தினை திசை திருப்புவதற்கு ஏற்ற கவனக்கலைப்பான்கள் தாராளமான வகையில் எமது சமுதாயத்திலே உருவாக்கப்ப்டுள்ளது. இதன் வாயிலாக எமது இளைய சமுதாயத்தினை பலவீனப்படுத்தி கடந்தகால வரலாறுகளை மறக்க மறைக்க நடவடிக்கை ஏற்படுத்த திட்டமிப்பட்டுள்ளது. எமது இனத்தின் வரலாறு மிக நீண்டது. தனித்துவமான ஒன்றாகும். இந்த வரலாறு இன்று சர்வதேசமளவும் பரவுவதற்கு வழிவகுத்தது எமது இளைஞர்களே அன்று காணப்பட்ட கட்டுப்பாடுகள் ஒழுக்கநெறிகள் எமக்கென்ற தனித்துவத்தையும் சிறப்பையும் வழங்கி எமது இனத்தின் பெருமைகளை சர்வதேசத்திற்கும் எடுத்தியம்பியது. இளைஞர்கள் கைகளில் தான் அன்று எம் இனத்தின் மானம் தங்கியிருந்தது. ஆனால் இன்று இவ் நிலையினை மாற்றுவதற்கு எம் இனத்தின் எதிரிகள் எம் இனத்தின் துரோகிகளோடு கூட்டுச்சேர்ந்து பல நடவடிக்கைகளையும் தாய் மண்ணில் அரங்கேற்றுவதில் மிக வேகமாகவே செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறான விடயங்களில் இன்றைய இளைஞர்கள் மிக அவதானமாக செயற்பட்டு எதிரியை விட மோசமான துரோகிகளை களைய முன்வரவேண்டும். எமது இனத்தின் மீதான அழிப்புகளும் ஆக்கிரமிப்புக்களும் இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதற்கு அண்மையில் காரைநகரில் சிறுமிமீது மேற்கொள்ளப்பட் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் நில அபகரிப்பு நடவடிக்கைகள் மிக முக்கியமான ஒன்றாகவே கொள்ளமுடியும். இவ்வாறான விடயங்கள் எமது இனத்தை தொடர்ந்தும் புண்படுத்தும் நிகழ்வாகவே அமைந்துள்ளது. எனக் குறிப்பிட்டார்

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம், கையெழுத்துப் போராட்டம்-

sweerrகறுப்பு ஜூலை தினத்தில் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என கோரி யாழில் இன்று கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்றுகாலை 10 மணிக்கு இப்போராட்டம் ஆரம்பமானது. இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமது கையெழுத்துக்களை இட்டுள்ளனர் இந்நிலையில் இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும் இல்லை என்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ், சிங்கள மொழிகளடங்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடக்கூடியது.

களவத்துறை விளையாட்டுக் கழக ஆண்டு விழாவும், சங்கானை முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு விழாவும்-

gnana vairavar munpalli kalavaththurai vilaiyaatu kalakamகடந்த 20.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அராலி தெற்கு களவத்துறை விளையாட்டுக் கழகத்தின் 67ஆவது ஆண்டு விழாவின்போது வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கழகத்தின் செயற்பாடுகளினை மேலும் வலுவூட்டும் பொருட்டு நடாத்தப்பட்ட துவிச்சக்கரவண்டி ஓட்டத்திற்கு முதற்பரிசு வழங்கும் முகமாக தனது மாதாந்த கொடுப்பனவாகிய ரூபா 10000 ஐ கழகத்தலைவர் திரு.க.குகராஜனிடம் வழங்கினார். தவிசாளர் பதவி ஏற்ற காலம் முதலாக தனது கொடுப்பனவினை தொடர்ச்சியாக பொதுப்பணிக்கு வழங்கி வருவது குறிப்பிக்கூடிய ஒன்றாகும். இதேவேளை கடந்த 19.07.2014 அன்று சங்கானை ஞானவைரவர் முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு விழா நடைபெற்றபோது நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் விளையாட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

17ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வு-

நியாயமான சமூக முறைமைக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் மற்றும் லங்கா சம சமாஜ கட்சியின் தலைவர் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரணவுக்கு இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல், விருப்பு வாக்கு முறையை ரத்து செய்தல் மற்றும் 17ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. குறித்த கலந்துரையாடலில் சட்டத்தரணிகளான எல்மா பெரேரா மற்றும் ஜே.சி.வெல்யமுன ஆகியோரும் தமது யோசனைகளை முன்வைத்திருந்தனர். நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் விருப்புவாக்கு முறை என்பன இலங்கையின் அரசியல் கட்டமைப்புக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக சோபித்த தேரர் சந்திப்பின்போது சுட்டிக்காட்டியுள்ளார் இதேவேளை, 17ஆவது அரசியலமைப்பு திருத்தம் செயலிழக்கச் செய்யப்பட்டதை அடுத்து நிர்வாகம், காவல்துறை சேவை, தேர்தல் நடவடிக்கைகள், நீதிமன்ற கட்டமைப்பு என்பன பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளன. எனவே, இந்த அடிப்படை விடயங்களை ஆராய்ந்து நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். எனினும், இது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கோ, வேறு சதிச் செயல்களுக்கான திட்டமோ அல்லவென நியாயமான சமூக முறைமைக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண, முன்வைக்கப்பட்ட அடிப்படை விடயங்கள், யோசனைகள் தொடர்பில் கூடியளவு இணக்கம் வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார். எனினும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக ஆராயவேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரது வீடு உடைக்கப்பட்டு ஆவணங்கள் எரிப்பு-

chavakachcheri land_docment_fire_002 land_docment_fire_005யாழ். சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீடு இனம்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு அங்கிருந்த அவரது முக்கிய ஆவணங்கள் மற்றும் 11 ஆயிரம் ரூபாய் பணம் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. யாழ். எழுதுமட்டுவாழ் பிரதேசத்தில் காணி சுவீகரிக்கும் நோக்குடன் இன்று காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட இருந்தபோது அதற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இராசையா தெய்வேந்திரம்பிள்ளை என்பவரது வீடே உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த அவரது முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் என்பன எரிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் இராசையா தெய்வேந்திரம்பிள்ளை தெரிவிக்கும்போது, இந்த வீட்டில் நானும் எனது மனைவி மற்றும் மகன் ஆகியோர் வசித்து வருகின்றோம். இன்று எனது மனைவியும் மகனும் கோவிலுக்கு சென்றிருந்தார்கள். நான் வீட்டை பூட்டிவிட்டு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன். போராட்டத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது எனது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து நான் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது எனது முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் இருந்த பையை காணவில்லை அதனை திருடிச் சென்று விட்டார்கள் என எண்ணி வீட்டை சுற்றி பார்த்தபோது வீட்டின் பின்புறம் அவையனைத்தும் தீ மூட்டி எரிக்கப்பட்டிருந்தது. முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் என்பவற்றை எடுத்து சென்று விட்டு ஏனையவற்றையே அவர்கள் தீயிட்டு எரித்திருக்கலாம் என சந்தேகிக்கின்றேன். நான் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னணியிலே இச்சம்பவம் நடைபெற்றிருக்கின்றது என்றே நம்புகின்றேன். இச்சம்பவம் எனது உயிருக்கு அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடாகவே கருதுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்;. இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினரால் கொடிகாம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராணுவ முகாம் காணியை கையளிக்க கோரி போராட்டம்-

iraanuva muhaam kaaniyaiயாழ். எழுதுமட்டுவாழ் பிரதேசத்தில் 52ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள 50 ஏக்கர் காணியினை இராணுவ முகாமுக்கு சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் பணி இன்று காணி உரிமையாளரினால் தடுத்து நிறுத்தபட்டுள்ளது. எழுதுமட்டுவாழ் பிரதேசத்தில் இராணுவத்தின் 52 ஆவது படைப்பிரிவின் முகாம் அமைந்துள்ள காணியினை சுவீகரிபதற்காக அக் காணியை இன்றைய தினம் அளவீடு செய்யவுள்ளதாக காணி உரிமையாளருக்கு நில அளவை திணைக்களத்தால் கடிதம்மூலம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அக் காணி உரிமையாளரான பெண்ணொருவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து காணி அளவீட்டு பணியை முன்னெடுக்க வேண்டாம் என கோரி போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு போராடினர். இவர்களின் போராட்டத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கொடிகாம பொலிசார் காணி உரிமையாளரான பெண்ணிடம் காணி அளவீட்டுக்கு நாம் அனுமதிக்க மாட்டோம் என கூறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு கோரினர். காணி அளவீட்டு பணிக்கு எதிராக காணி உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதனால் நில அளவையாளர்கள் காணி அளவீட்டு பணியை கைவிட்டு திரும்பினர். குறித்த 50 ஏக்கர் காணியும் 1969ம் ஆண்டு தற்போது காணி உரிமையாளராக இருக்கின்ற பெண்ணின் கணவனால் வாங்கப்பட்டு அவரது பெயரில் எழுதப்பட்டது. அதன் பின்னர் அடுத்து வந்த காலப்பகுதியில் அவர் தனது 7 பெண் பிள்ளைகளுக்கும் ஒருவருக்கு தால 5 ஏக்கர் வீதம் 35ஏக்கர் காணியினை எழுதிக்கொடுத்துள்ளார். இவர்கள் 2000ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பின்னர் மீண்டும் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டபோது இவர்களின் காணியில் சில ஏக்கர்களில் இராணுவ முகாம் அமைந்திருந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த 2012ம் ஆண்டு அந்த இராணுவ முகாம் விஸ்தரிக்கப்பட்டு பாரிய படைமுகாமாக அமைக்கப்பட்டது. இப் படைமுகாமினை கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இறையாண்மையோடு வாழும் உரிமையைத்தான் கோருகிறோம்-இரா.சம்பந்தன்-

sampanthanநாட்டின் இறையாண்மையின் கீழ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் வாழ்வதற்கான உரிமையைத்தான் நாம் கோருகின்றோம். நாட்டைப் பிரித்துத் தருமாறு நாம் கேட்கவில்லை. இந்நாட்டின் குடிமக்களுக்குள்ள சுயநிர்ணய உரிமையுடன் தமிழ் மக்களும் வாழ்வதற்கான உரிமையைத்தான் கேட்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் 34 ஆவது வருட சிறப்பு மாநாடு அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் நாம் பிரிவினையைக் கோரவில்லை. அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு தமிழ் மக்கள் தமது நிலங்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையே கோருகின்றோம். சிங்கள மக்களுடன் இணைந்து பெறவேண்டியவற்றை நாம் பெறவேண்டும். அதற்காக விட்டுக்கொடுக்க முடியாதவற்றை நாம் விட்டுக்கொடுக்கவே முடியாது. வன்முறைப் போக்கை நாம் விரும்பவில்லை. எமது மக்கள் வாழ்ந்த இடத்தில் எமது இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கங்கள் பகிரப்பட்டு வாழ அனுமதிக்கப்பட வேண்டும். இதனையே நாம் உறுதியாக கோருகின்றோம். அதிகாரப் பகிர்வில் நாம் இராணுவ அதிகாரத்தையோ அல்லது விமானப்படை அதிகாரத்தையோ, வெளிவிவகார அதிகாரத்தையோ கேட்கவில்லை. எமது நிலம், நீர், சட்டம், விவசாயம், கல்வி, கடற்றொழில், சிறுகைத்­தொழில், பொருளாதாரம் மற்றும் எமது பாதுகாப்பு போன்ற அதிகாரங்களே எமக்குக் கிடைக்க வேண்டும் Read more

கூட்டமைப்பு பதிவு தொடர்பில் இறுதி முடிவு எதுவும் இல்லை-இரா.சம்பந்தன்-

1719856666tna3தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதியப்படுமா என்பதை அதன் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்துவாரென யாழில் நேற்று இடம்பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் சிறப்பு மாநாட்டின்போது எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் அவர் உரையாற்றுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டுமென திருமலை நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் மந்தகதியிலேயே நடைபெற்று வருகிறது. எனவே இப்பதிவு விடயத்தை விரைவுபடுத்த வேண்டும். அதற்காக தமிழ் தேசிய சபையொன்றை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதுபற்றி இரா.சம்பந்தன் அவர்கள் உரையாற்றுகையில், கூட்டமைப்பு பல்வேறு கட்சிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு. இங்கு கருத்து வேறுபாடு இல்லையென நான் கூறமாட்டேன். இருப்பினும் எமக்குள் அதனைப் பேசித் தீர்த்து ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகின்றோம். இந்த ஒற்றுமையின் வெளிப்பாட்டால்தான் சர்வதேச சமூகம் அரசாங்கத்தை எம்முடன் பேசுமாறு கூறியுள்ளது. இவை ஒற்றுமையின் அடைப்படையிலும் தமிழ் மக்கள் விசுவாசம் வைக்கின்ற அமைப்பு இதுதான் என ஜனநாயக ரீதியில் அடையாளம் காட்டியபடியாலும் கிடைத்த வெற்றி. இதனைப் பலப்படுத்த வேண்டியது எமது கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க…… Read more

யாழ். அச்சுவேலியில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்-

yaal achchuveliyil  (1)எமது காணிகளை அளவீடு செய்ய நாம் அனுமதிக்க மாட்டோம் என கூறி நிலஅளவை திணைக்களத்தின் வாகனத்தினை சுற்றிநின்று காணி உரிமையாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர். அச்சுவேலியில் இராணுவ முகாம் அமைப்பதற்காக காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்தது. அச்சுவேலி இராசவீதியில் அமைந்துள்ள பொதுமக்களுக்கு சொந்தமான 53 பரப்பு காணியினையே அளவீடு செய்யும் பணிகள் இன்றுகாலை பொலிஸ் பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட இருந்தது. கடந்த ஜூன் 2ம்திகதி இக் காணிகளை அளவீடுசெய்ய முற்பட்டபோதும் காணி உரிமையாளர்களின் எதிர்ப்பினால் அப் பணிகள் கைவிடப்பட்டன. இந்நிலையில் இன்று மீண்டும் பொலிஸ் பாதுகாப்புடன் நில அளவையாளர்கள் அழைத்துவரப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படவிருந்தது. Read more

பிரான்ஸில் புளொட்டின் 25ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு-

plote.uma-v.m.tதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) பிரான்ஸ் கிளையினரால் நடாத்தப்பட்ட 25ஆவது வீரமக்கள் தினம் கடந்த 17.07.2014 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11மணிமுதல் பிற்பகல் 3மணிவரையில் தோழர் தயா அவர்களின் தலைமையில்  என்னுமிடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. Porte, Ivary 75013 Paris,a France வீரமக்கள் தின ஆரம்ப நிகழ்வாக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தீபச் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மரணித்த அனைவரையும் நினைவுகூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது ஜெர்மனியிலிருந்து தோழர் ஜெகநாதன், லண்டனிலிருந்து தோழர் சிவபாலன் ஆகியோரும் தோழர் ஜோன்சன் உள்ளிட்ட பிரான்ஸ் கிளைத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

FGiHdcmqaJk

 

புளொட் தலைவர் தலைமையில் பிரான்ஸில் விசேட கலந்துரையாடல்-

புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் கடந்த 17.07.2014 வியாழக்கிழமை அன்று மாலை 4மணிமுதல் இரவு 8 மணிவரையில் பிரான்ஸின் பொபினி என்ற இடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்;பெற்றுள்ளது. சுழிநளிநைசசந 93300 Ropespierre 93300 Bobigny France என்னுமிடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல அமைப்புக்களையும், நிறுவனங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும், புளொட்டின் பிரான்ஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்த விசேட கலந்துரையாடலின்போது, வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக புளொட் தலைவர் விரிவாக எடுத்துக் கூறினார். குறிப்பாக அனைத்தையும் இழந்து நிற்கின்ற தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி அவர்கள் தமது சொந்தக் கால்களில் நிற்பதற்கு புலம்பெயர் உறவுகள் உதவி வருவது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட புளொட் தலைவர். அம் மக்களுக்கான உதவிகளை தொடர்ந்தும் வழங்குவது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுமென்று தெரிவித்தார். இதன்போது பல அமைப்புக்களைச் சேர்ந்தவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் மிகவும் தெளிவாக பதில்களை வழங்கியதுடன், தற்போதைய அரசியல் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் குறித்தும் எடுத்துக் கூறினார்.

பிரான்ஸில் வர்த்தகசமூகப் பிரதிநிதிகளுடன் புளொட் தலைவர் சந்திப்பு-

பிரான்ஸின் லாச்சப்பல் பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் மற்றும் பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று கடந்த 18.07.2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1மணிமுதல் மாலை 4மணிவரை பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் இடம்பெற்றது. டுயஉhயிநடடந 75018 என்னுமிடத்தில் Lachapelle 75018 Paris France இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வடகிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் விரிவாகவும், தெளிவாகவும் எடுத்துக் கூறினார். இதன்போது வர்த்தக சமூகப் பிரதிநிதிகளின் பல்வேறு கேள்விகளுக்கும் புளொட் தலைவர் இதன்போது உரிய பதில்களை வழங்கினார்.

மூன்று நாடுகளிலிருந்து இலங்கைக்கு எதிராக விசாரணை-

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவையால் நடத்தப்படும் விசாரணைகள் மூன்று நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படவுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது. நியூயோர்க், ஜெனீவா மற்றும் பாங்கொக் ஆகிய நகரங்களில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அரசாங்கம் மற்றும் புலிகளுக்கு எதிராக இவ்வாறு விசாரணை நடத்தப்படவுள்ளது. இலங்கையில் விசாரணை நடாத்த அனுமதி கோரப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச விசாரணைக் குழுவினர் இலங்கையில் விசாரணை நடாத்த அனுமதியளிக்கப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் நவீன தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச விசாரணைகளில் சாட்சியமளிக்கக் கூடாது என இலங்கையில் எவ்வித சட்டங்களும் கிடையாது என்ற போதிலும், சாட்சிமளிப்போருக்கு தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. சாட்சியமளிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சாட்சியாளர்களின் பெயர் விபரங்கள் இருபது ஆண்டுகளுக்கு இரகசியமாக பேணப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

புளொட் தலைவர் அவர்களுக்கு பிரான்ஸ் விமான நிலையத்தில் வரவேற்பு-

france il france il  (3)

france il (6)france il  (4)

ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கடந்த 16ஆம் திகதி இரவு 10மணியளவில் பிரான்ஸை சென்றடைந்தார். புளொட் தலைவர் தர்மலிங்கம சித்தார்த்தன் அவர்கள் இந்த விஜயத்தின்போது கழகத்தின் பிரான்ஸ் கிளைத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களால் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார். பிரான்ஸில் பல்வேறு சந்திப்புக்களை முடித்துக்கொண்டு இன்றையதினம் சுவிஸ்லாந்து சென்றிருக்கும் புளொட் தலைவர் நாளை சுவிஸ் வாழ் தமிழ் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளார்.

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு-

யாழ். கொய்யாத்தோட்டம் பழைய பூங்கா வீதி சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 19 வயதுடைய அன்ரன் செலஸ்ரா என்ற இளம்பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு 10 மணியளவில் உயிரிழந்ததாக இளம்பெண்ணின் கணவர் பொலிஸாரிற்கு அறிவித்திருந்தார். இதனையடுத்து பொலிஸார் அங்கு உடன் விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கனடாவின் கோரிக்கை இலங்கை நிராகரிப்பு-

கனேடிய அரசாங்கத்தின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை உருவாக்க வேண்டாம் என கனடா கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் இக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள்மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என கனேடிய வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒபராய் கோரியிருந்தார். இவ்வாறான நடவடிக்கைகளின்மூலம் கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுவதுடன் ஜனநாயக நெறிமுறைகள் பாதிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். இதேவேளை இலங்கைக்கான கனேடிய தூதரகத்திற்கு அரச சார்பற்ற நிறுவனங்களே தகவல்களை வழங்கி வருவதாகவும் இந்நிறுவனங்கள் தொடர்பிலான புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளில் 1,405 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு-

இலங்கை கடற்படையினரால் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 1,405 இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 12ம் திகதிவரை 532 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும், 4 மீனவர்களும், 47 படகுகளும் இலங்கை சிறையில் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு மத்திய அரசு மிகவும் முக்கியத்துவம் அளிப்பதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகளையும், பேச்சுவார்த்தைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போர்த்துக்கல் பிரதமர் இலங்கைக்கு விஜயம்-

போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பசோஸ் கொயில்ஹோ நாளையதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரவுள்ள போர்த்துக்கல் பிரதமரை விமான நிலையத்தில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வரவேற்கவுள்ளார். இலங்கைக்கான தமது ஒருநாள் விஜயத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பிரதமர் டி.எம். ஜயரத்ன ஆகியோரை போர்த்துக்கல் பிரதமர் கொயில்ஹோ சந்திப்பாரென கூறப்படுகிறது. அத்துடன் காலி கோட்டைக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

தன்ஸானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

தன்ஸானியாவின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் பேர்னாட் மெம்பியும் நாளை இலங்கை வருகை தரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இவர் தனது இரண்டு நாள் விஜயத்தில், அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடன், வெளிவிவகார அமைச்சில் இருதரப்பு சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார். இதன்போது இலங்கைக்கும், தன்ஸானியாவுக்கும் இடையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் இணை ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்தகட்ட மீனவர் பேச்சுவார்த்தைக்கு இந்தியா இணக்கம்-

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் புதிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான இந்திய – இலங்கை ஒருங்கிணைந்த குழுவின் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து இந்திய புதிய அரசாங்கம் தனக்கு உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் இந்தியாவின் புதிய கடற்றொழில் அமைச்சருடன் இணைந்து இலங்கையிலோ அல்லது புதுடில்லியிலோ மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகுமெனவும்; அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேஷிய விமானத்தில் 295 பேரும் உயிரிழப்பு, யுக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மீது குற்றச்சாட்டு-

malaysia vimaanaththail (4)நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு 15 விமானப் பணியாளர்கள் உட்பட 295 பேருடன் பயணித்த மலேசியன் எயார் லைன்ஸுக்கு சொந்தமான ஆர்17 விமானம், ரஷ்ய எல்லைக்கு அருகே உக்ரைனில் நேற்று ஏவுகணை தாக்குதலுக்கு இலக்காகியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரழந்துள்ளனர். இந்நிலையில் தமது விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்களை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டுமென மலேஷிய பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமது விமானத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் மலேஷிய பிரதமர் நஜீப் ரசாக் கோரியுள்ளார் மேற்படி எம் எச் 17 என்ற போயிங் 777 ரக மலேஷிய விமானம் யுக்ரைனின் கிழக்குப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமையானது ஒரு தீவிரவாத செயல் என யுக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் இதேவேளை விமானம் யுக்ரைன் படையினராலேயே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். குறித்த விமானத்தில் 154 நெதர்லாந்து நாட்டவர்களும் 27 அவுஸ்திரேலியர்களும் 23 மலேஷியர்களும் 11 இந்தோனிஷியர்களும் பயணித்துள்ளதாகவும், மேலும் 14 ஐரோப்பியர்கள் 3 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் மற்றும் ஒரு கனேடிய பிரஜையும் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதுவரை 100 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக யுக்ரைனிய அதிகாரிகள் தெரவிக்கின்றனர்

யுக்ரைனின் கிழக்கு வான் பரப்பை விட்டு விலகி பயணிக்குமாறு அறிவுறுத்தல்-

ukrain kilakku vaan parappaiயுக்ரைனின் கிழக்கு வான் பிராந்தியத்திலிருந்து விலகி பயணத்தை முன்னெடுக்குமாறு இலங்கை விமான சேவைகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று யுக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சீ. நிமல்சிறி கூறியுள்ளார். ஆயினும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே இலங்கை விமானங்கள் அந்த வான் பரப்பைவிட்டு விலகியே பயணங்களை மேற்கொண்டு வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். யுக்ரைனின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்து தமாகவே ஒரு மாதத்திற்கு முன்னர் அந்த வான் பரப்பிலிருந்து விலகி பயணிப்பதற்கான வரையறையை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக இலங்கை விமான சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான எம்.எச். 17 என்ற பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்டதை அடுத்து, அதில் பயணித்த 298 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் 283 பயணிகளும், 15 பணியாளர்களும் இருந்ததுடன், இவர்களில் பெரும்பாலானோர் நெதர்லாந்து நாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசே தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கு! யாழில் போராட்டம்-

dgfgfgfgfdfdfdCaptureயாழ். காரைநகர் ஊரி பகுதியைச் சேர்ந்த 11 வயது மாணவி ஒருவர் கடற்படை சிப்பாயால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிப்புத் தெரிவித்து கண்டன போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. பிரதேச மக்களால் காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக இன்று காலை 11 மணியளவில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காரைநகர் ஊரி பிரதேசத்தினை சேர்ந்த 11 வயதுடைய மாணவி ஒருவரை கடற்படை சிப்பாய் ஒருவர், 11 தினங்களாக பாடசாலை நேரத்தில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்றைய தினம் போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சி.சிறிதரன் வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், சி.சிவமோகன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் ஆ.ஆனைமுகன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இப் போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் ஆ.சிவதட்சணாமூர்த்தியிடம் கையளிக்கப்பட்டது. அதில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய கடற்படை சிப்பாய் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்கள் நடைபெறாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் தமிழ் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இதேவேளை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 07 கடற்படைவீரர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more