Header image alt text

யாழ்ப்பாணத்தில் கிருஷ்ணா குழு கைது-

krushna kulu  (1) krushna kuluயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தததாக கூறப்படும் கிருஷ்ணா என்ற குழுவைச் சேர்ந்த நான்குபேரை கைதுசெய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொஹான் மகேஷ் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சமூக விரோதச் செயல்களில் கிருஷ்ணாக் குழு ஈடுபட்டு வருவதாகவும் அந்தக் குழு மானிப்பாய் பகுதியை மையமாக வைத்து இயங்கி வருவதாகவும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸார், மானிப்பாய் சந்தைக்கருகில், சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களில் வாள்களுடன் 8 பேர் நிற்பதை அவதானித்தனர். மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிகப் பொலிஸார் வரவழைக்கப்பட்டு, அந்தக் குழு சுற்றிவளைக்கப்பட்டபோது, அவர்கள் தப்பிஓட முயன்றனர். இதனையடுத்து, காலுக்குக் கீழ் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, நால்வர் கைதுசெய்யப்பட்டனர். மிகுதி நால்வரும் தப்பி ஓடியுள்ளனர். இவர்களில், 18, 21, 24 மற்றும் 25 வயதையுடையவர்களே கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 2 துவிச்சக்கர வண்டிகள், 2 வாள்கள், 3 பொல்லுகள், 3 கத்திகள் என்பன மீட்கப்பட்டன. துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சந்தேக நபர்களில் ஒருவர் காயமடைந்ததுடன் அவருக்கு மானிப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய ஏனையோரை கைதுசெய்யும் பணியில் விசேட பொலிஸ் குழு ஈடுபட்டு வருகின்றது என மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுங்க பொருட்களை பெற குறுந்தகவல்-

sunka porutkalaiஇலங்கை சுங்கத்திற்கு வரும் பொருட்களை உரிமையாளர்கள் மீண்டும் பெற்றுக்கொள்ளும் போது குறித்த உரிமையாளர்களுக்கு அது தொடர்பில் குறுந்தகவல் அனுப்பும் முறைமை அறிமுகச் செய்யப்படவுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த செயற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பொருட்களை பெற்றுச் செல்ல முற்படுகின்றனர். இந்த தவாறான மோசடிகளை இதனூடாக குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு விபத்தில் ஏழு எருமை மாடுகள் உயிரிழப்பு-

mullaitive vipaththail (1)முல்லைத்தீவு, தட்டாமலை பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 7 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுங்கேணியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான பிக்கப் ரக வாகனம் ஒன்று, வீதியில் கடந்து சென்றுகொண்டிருந்த எருமை மாடுகளை மோதியுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டியில் கெப்ரக வாகனம் திடீரென தீப்பற்றியது-

கொழும்பு, பம்பலப்பிட்டி, கடற்கரை வீதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக வண்டியொன்று தீப்பிடித்துள்ளது. இன்றுகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பம்பலபிட்டி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மடு தலைமன்னாருக்கான புகையிரத சேவை டிசம்பரில் ஆரம்பம்-

மடுவுக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவை, எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்ப்பதாக யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி இன்று தெரிவித்துள்ளார். யாழ் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் இடம்பெற்ற இந்தியாவின் 68ஆவது சுதந்திரதின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய துணைத்தூதரகம் யாழில் திறக்கப்பட்ட்ட 4 வருடங்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, பலருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரக்கூடிய அச்சுவேலி கைத்தொழில் பேட்டை நிர்மாணிக்கப்பட்டு வருதல், வவுனியா வைத்தியசாலைக்கான கட்டிடத்தொகுதி, யாழ் பல்கலைக்கழக விவசாய மற்றும் பொறியியற் பீடங்கள் கிளிநொச்சியில் நிறுவுவதற்கான உதவித்திட்டம், துரையப்பா விளையாட்டரங்கினை புனரமைத்தல், யாழில் கலாசார நிலையமொன்றை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 2012ஆம் ஆண்டு முதல் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டமானது பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதுவரை 14,514 வீடுகள் நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், 19,703 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. நுண்கலைகளை வளர்க்கவும், கலாசார உறவுகளை பலப்படுத்தவும், இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில், நல்லூர் திருவிழாக் காலத்தில் இம்மாதம் 24, 25 ஆகிய திகதிகளில் நடன, இசைக் கச்சேரிகளை சங்கிலியன் தோப்பில் நடத்தவுள்ளோம் என கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

யுத்தகால உயிர் – சொத்து சேதம் குறித்த கணக்கெடுப்பு நிறைவு-

இலங்கையில் 30 வருடங்களாக நிலவிய யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து சேதம் குறித்த கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிசன வீட்டு தொகை மதிப்பீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கை எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற மோதலின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து சேதம் குறித்த கணக்கெடுப்பு நடவடிக்கை கடந்த நவம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப்படி இந்த கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் சகல மாவட்டங்களிலும் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் குடிசன வீட்டு தொகை மதிப்பீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் – இந்தியா

இலங்கையின் புனர்வாழ்வு, புனர்நிர்மான மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்காக இந்தியா மேலும் ஒத்துழைப்பு வழங்கும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய தூதரக நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்கா இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய திட்டங்களை சுமூகமான முறையில் முன்னெடுப்பதற்கு உதவியதற்காக இலங்கை அரசிற்கு நன்றி தெரிவித்துள்ள அவர் இந்தியாவும் எப்போதும் தனது நட்புறவையும் ஒத்துழைப்பையும் இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். இரு நாட்டு உறவுகளும் தற்காலத்திற்கு பொருத்தமான சகல துறைகளையும் உள்ளடக்கி தற்போது மேலும் வளர்ச்சி கண்டுள்ளது. இலங்கையுடனான இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பு தனித்துவமானது, அரசியல் ரீதியான புரிந்துணர்வு, பொதுவான சமுக கலாச்சார தொடர்புகள், புவியல் ரீதியிலான நெருக்கம், இலங்கையின் முகவர் அமைப்பகளுடனான ஒத்துழைப்புடன் கூடிய அமுலாக்கம் என்பவற்றினை அடித்தளமாக கொண்டு கட்டியெழுப்;பட்டது. தற்போது வரையில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்காக இந்தியா, 1.3 பில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது என வை.கே.சின்கா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அகதிகள் தொடர்பில் ஆஸி நீதிமன்றம் ஆய்வு-

இலங்கை அகதிகளின் விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் சட்டரீதியாக செயற்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் மேல் நீதிமன்றம் ஆராய்ந்து வருகிறது. மேல் நீதிமன்ற நீதிபதி கென்னீத் ஹெயின் இதனைத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி சென்ற 157 இலங்கை அகதிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் நடுக்கடலில் ஒரு மாத காலம் வரையில் தடுத்து வைத்திருந்தது. இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அவர்களை நாடுகடத்தும் நோக்கில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தமையானது, சட்டத்துக்கு முரணானது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தவேளையில் நீதிபதி இதனைக் கூறியுள்ளார். இதேவேளை இந்திய அரசாங்கத்துடன் அகதிகளை நாடுகடத்துவது தொடர்பில் எந்தவிதமான உடன்படிக்கைகளும் ஏற்படுத்திக் கொள்ளாத நிலையில், அவர்களை தற்காப்பு படகுகளின்மூலம் திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா முயற்சித்துள்ளது. இது அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதோடு, அவர்கள் இந்தியாவை சென்றடைந்திருந்தால், ஐந்து வருடங்கள் வரையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள் என அகதிகள் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு அடுத்தவாரம் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்திய மீனவர்கள் 74 பேரும் விடுவிப்பு-

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தின் தீவகக் கடற்பரப்புக்களில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட 69 மீனவர்களும், படகின்றி நீந்திக் கரை சேர்ந்த 5 மீனவர்களுமாக மொத்தம் 74 மீனவர்கள் இன்று யாழ். நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி நல்லெண்ண அடிப்படையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரிலேயே மேற்படி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜுலை 22ஆம் திகதி எழுவைதீவுக் கடற்பரப்பில் வைத்து 5 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களையும் ஊர்;காவற்றுறை நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று விடுவித்துள்ளார். அத்துடன், யாழ். நயினாதீவுக் கடற்கரையில் ஜுலை 17ஆம் திகதி கரையொதுங்கிய ஐந்து பேரையும் இதன்போது, நீதவான் விடுவித்துள்ளார். அதேபோல், ஜுலை 29ஆம் திகதி நெடுந்தீவிற்கு அண்மிய கடற்பரப்பில் வைத்து 7 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 51 இந்திய மீனவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பொன்னம்பலம் குமாரசாமி இன்று விடுவித்துள்ளார். ஆனால், 69 மீனவர்களின் 12 படகுகளும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களும் தொடர்ந்து தடுத்து வைக்கும்படி நீதவான்கள் உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து, மேற்படி மீனவர்கள் யாழ். இந்தியத் துணைத்தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Read more

தடைப்பட்டியலிலிருந்து மூவரின் பெயர் நீக்கம்-

imagesCA47OAWZபயங்கரவாத தடைப்பட்டியலில் இருந்து தம்முடைய பெயர்களை நீக்கிக்கொள்ள வேண்டுமாயின் அது தொடர்பில் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் தமது பெயர் நீக்கப்பட வேண்டியமைக்கான உரிய காரணத்தை முன்வைக்க வேண்டும் என இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இன்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக, அடையாளம் காணப்பட்டு கடந்த மார்ச் மாதம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 424 நபர்களில் மூன்று நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு சபையின் உறுப்புரைக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ள இப்பட்டியலில் இருந்து தமது பெயரை நீக்குமாறு மூவர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து உண்மைத்தன்மை தொடர்பில் கண்டறியப்பட்ட பின் வெளிவிவகார அமைச்சின் உத்தரவுக்கு அமைய குறித்த மூவரும் நீக்கப்பட்டுள்ளது என பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் கூறியுள்ளார்.

சர்வதேச விசாரணைக் காலக்கட்டம் குறித்து அதிர்ச்சி-பாதுகாப்பு அமைச்சு

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைக் குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக் காலகட்டம் குறித்து பாதுகாப்பு அமைச்சு அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, இராணுவப் பேச்சாளர் ருவாண் வணிகசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு பரிசீலனை நடத்திய காலக்கட்டத்துக்குள்ளேயே விசாரணை நடத்தப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. ஆனால் அதனையும் தாண்டி வேறொரு காலக்கட்டத்தை அடிப்படையாக வைத்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அழகு சத்திர நிலையத்தில் பெண் வைத்தியர் மரணம் ஆண் வைத்தியர் கைது

தனது அழகை மெருகூட்டுவதற்காக பம்பலப்பிட்டி பிரதேசத்திலுள்ள அழகு நிலையமொன்றில், ஊசி ஏற்றிக்கொண்ட நாவலையைச்சேர்ந்த 47 வயதான கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பெண் வைத்தியரான ஈ.ஏ.பிரியங்கா, அழகு சத்திர சிகிச்சை நிலையத்தில் ஊசி ஏற்றிக்கொண்ட நிலையில் உயிரிழந்தார். இந்த மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. இந்நிலையிலேயே, உயிரிழந்தவரின் உடற் பாகங்களை அரச பகுப்பாய்வுக்கு அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்ப உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரியங்கவின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஆண் வைத்தியரான நிமல் கமகேவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, இல-5 நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பொலிஸ் மரணபரிசோதனை நிலையத்தில் இடம்பெற்ற மரண விசாரணைகளை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மூன்று சட்ட மேதைகளை உள்ளடக்கிய சர்வதேச நிபுணர்கள் குழு இலங்கை வந்தடைந்துள்ளது.

Desmonகாணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள மூன்று சட்ட மேதைகளை உள்ளடக்கிய சர்வதேச நிபுணர்கள் குழு நாட்டை வந்தடைந்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் 4.359 ஆம் பந்தியில்  குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஆணையுடன் இந்த விசாரணை ஆணைக்குழு 2013 ஓகஸ்ட் 15ஆம் திகதிய 182342 வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நியமிக்கப்பட்டது.
சேர் டெஸ்மன் டி சில்வா தலைமையிலான இந்தக் குழுவில் சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் பேராசிரியர் டேவிட் எம். கிரேன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இந்த ஆலோசனைக் குழுவிடம் ஆணைக்குழுவின் பணிகளுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக அவர்களது வேண்டுகோளின் பேரில் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஆலாசனை வழங்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையிலான குழுவினரையும் அவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழுவில், திருமதி பிரியந்தி சுரஞ்சனா வைத்தியரத்ன, திருமதி மனோ ராமநாதன் ஆகியோர் இவ்வாணைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பில் பொலிஸ் பொதுமக்கள் மோதல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரங்குடா, பனையறுப்பான் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) இரவு பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சந்தேகத்தின் பேரில் இளைஞர்கள் இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். Read more

வலி மேற்கு பிரதேச சபையின் நிகழ்வுகள்

0109.08.2014 அன்று வலி மேற்கு பிரதேசத்தில் 1உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற கா.போ.த சாதாரண தர மணவர்களுக்கான கொழும்பு அருள் கல்வி வட்டத்தின் இலவச கருத்தரங்கின் போது அங்கு கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மேற்படி கருத்தரங்கை இலவசமாக நடத்தி வரும் சட்டத்தரணி வீ.தேவசேனாதிபதி அவர்கட்கு பேராசான் எனும் கௌரவத்தினை வழங்கி கௌரவித்தார். இவ் நிகழ்வில் மாகாண பிரதிக் கல்விப்பணிப்பாளர் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் ஏறத்தாள வலிமேற்கு பிரதேசத்தின் 1250 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். ஒவ்வொரு மணவர்களுக்கும் சராசரியாக 1500 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மாணவர்களுக்கு நூல்களை வழங்கி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்

06.08.2014 அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள லங்கா சித்த ஆயுள்வேத கல்லூரி மண்டபத்தில் 2புதிய மாணவர்களுக்கான அங்குரர்ப்பண கூட்டம் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட லங்கா சித்தமருத்துவ கல்லூரியின் பழைய மாணவியும் தற்போதய வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளருமாகிய திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் புதிய மாணவர்களை வரவேற்றதுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார் தொடர்ந்து உரையாற்றும் போது தாங்கள் இக்கல்லூரியில் கற்ற காலம் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் அக்காலத்தில் மிருந்த நெருக்கடியில் தாங்கள் கற்ற நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். மேலும் இக் கல்லூரியின் தேவைகள் தொடர்பில் உரியவர்களுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். இது மடடுமல்லாது இன்று ஆயுள் வேதத்துறையின் தேவைகள் சமூகத்திற்கு மிக முக்கியமாக உள்ள நிலையையும் எடுத்துக் கூறினார்.

10.08.2014 அன்று வலி மேற்கு பிரதேசத்தில்

3

4இயங்கும் பட்டப்பளை சர்வதேச முன்பள்ளியின் பரிசளிப்பு விழா பண்டத்தரிப்பு பிரான்பற்று அருள் அமுதேஸ்வரி திருமண மண்டபத்தில் இயக்குனர் திரு.டி.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பண்டத்தரிப்பு ஜசிந்தா பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரிலசர் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன சிரேஸ்ட நிதி ஆலோசகர் திரு.என்.நடராhஜா, வலம்புரி பிரதம முகாமையாளர் திரு.என்.கஜேந்திரன், கலைமாமணி திரு.கே.தெய்வேந்திரம் மற்றும் பண்த்தபரிப்பு கிராம உத்தியோகஸ்தர் கே.பி.சுஜீவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.  Read more

ஜெனிவாவை தளமாக கொண்டே விசாரணைக்குழு இயங்கும் – நவநீதம்பிள்ளை-

navipillai aluvalagamஇலங்கைக்கு விஜயம் செய்யாது வெளிநாடுகளில் இருந்தவாறே இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐ.நா விசாரணைக்குழு தகவல்களை சேகரிக்க இலங்கைக்குள் வர அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கைக்கு வெளியில் தகவல்களை பெறக்கூடிய சிறந்த வாய்ப்புகள் இருக்கின்றது. விசாரணைக்குழுவினர் நாட்டுக்கு அனுமதிக்கப்பட்டாலும் அனுமதிக்கப்படாவிட்டாலும் ஆதாரங்களை உறுதிப்படுத்துவது சரியான தரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும். வடகொரிய மற்றும் சிரியா ஆகிய நாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் இதற்கு சிறந்த உதாரணமாகும். இந்த இரு நாடுகள் தொடர்பான விசாரணைக்கு இலங்கை சம்பந்தமான விசாரணைக்கும் வித்தியாசங்கள் இருப்பதாக நான் காணவில்லை. இந்தியா மற்றும் தாய்லாந்து வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாக செய்திகளில் உண்மையில்லை. 12 பேர் கொண்ட விசாரணைக்குழு ஜெனிவாவை தளமாக கொண்டு இயங்கும். தேவை ஏற்பட்டால் வேறு நாடுகளுக்கு விஜயம் செய்யும் விசாரணைகளில் அவர்கள் கண்டறியும் விடயங்களை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்பிப்பார்கள். குற்றச்செயல்களுக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பதை கண்டறியவே விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. சமாதானம், நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒரு வழியை உருவாக்கி கொடுக்க இந்த விசாரணையானது சகல இலங்கையர்களுக்கு நன்மையாக அமையும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஆலோசனை சபைக்கான அழைப்பை ஏற்றார் இந்திய பிரதிநிதி-

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சர்வதேச ஆலோசனை சபைக்கான அழைப்பை பெற்றுள்ள இந்திய மனித உரிமைகள் செயற்பாட்டாளரான அடாஸ் கௌஷால், அதனை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். த ஹிந்து நாளிதழுக்கு செவ்வி வழங்கிய அவர் இந்த ஆணைக்குழுவில் திருப்தியுடன் இணைந்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமக்கு தனிப்பட்ட முறையில் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய கிராமிய சட்ட உதவி மையத்தின் அரச சார்பற்ற அமைப்பின் தலைவராக அடாஸ் கௌஷால் செயற்படுகிறார். அவர் வட இந்தியாவின் இமாலய அடிவாரத்தில் வசிக்கும் பூர்வீக சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார். காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சர்வதேச ஆலோசனை சபையை மேலும் விரிவுப்படுத்த உள்ளதாக அண்மையில் ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதன்படி மேலும் சர்வதேச ஆலோசகர்கள் மூவரை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் குழுவில் தற்போது சர்வதேச ஆலோசகர்களாக ஸ்ரீமத் டெஸ்மன் டி சில்வா, ஸ்ரீமத் ஜெப்ரி நைஸ் மற்றும் போராசிரியர் டேவிட் கிரேன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சப்ரகமுவ பல்கலை தமிழ் மாணவன்மீது தொடர்ந்தும் விசாரணை-

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற தமிழ் மாணவன் தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இம் மாணவன் தன்னைத் தானே தாக்கி காயத்தை ஏற்படுத்திக் கொண்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். எனினும் சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த போது தம்மை மாணவர்கள் தாக்கியதாக குறித்த மாணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போது தான்னைத் தானே தாக்கியும், கீறியும் காயங்களை ஏற்படுத்திக் கொண்டதாக தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி எதிர்பார்ப்பு-

janathipathi mahinda rajapakseநேபாளத் தலைநகர் காத்மண்டுவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 18வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் அர்ஜுன் பீ.தபாவுடன் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார் சார்க் மாநாட்டிற்கான தயார்படுத்தல்களின் தற்போதைய நிலைமை குறித்து பொதுச் செயலாளரால் ஜனாதிபதிக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இளம் சமூகத்தினர்மீது தாக்கம் செலுத்தக்கூடிய விடயங்களை வெளிக்கொணரும் வகையில் பிராந்தியத்தியத்திலுள்ள இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து இளைஞர் மாநாடொன்றை சார்க் அமைப்பு ஏற்பாடு செய்வதன் முக்கியத்தும் குறித்தும் தெற்காசிய பிராந்தியத்திலுள்ள மத மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இடையிலான தொடர்புகளை ஊக்குவிக்கும் அமைப்பொன்றை உருவாக்கும் திட்டத்தையும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளருடனான சந்திப்பின்போது ஜனாதிபதி முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊவா மாகாண சபை தேர்தல்; தபால்மூல வாக்களிப்பு-

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை செப்டெம்பர் 4 மற்றும் 05ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறியுள்ளார். இதேவேளை, குறித்த தினங்களில் தபால்மூலம் வாக்களிக்க தவறும் பட்சத்தில் செப்டம்பர் 11ஆம் திகதி அலுவலக நேரத்தில் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் வாக்களிக்க முடியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினங்களில் கொழும்பிலுள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்காக தேர்தல்கள் செயலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார். இதேவேளை, ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கும் நடவடிக்கைகளும் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உதவித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் குடும்பங்களின் தேவைகள் தொடர்பில் கணிப்பீடு-

காணாமல் போனோரின் குடும்பங்களின் தேவைகள் தொடர்பில் தரவுகளை சேகரிப்பதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தப் பணிகளை ஒரு வருடத்துக்குள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசிடம் தமது யோசனையை சமர்ப்பித்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக் குழு, மன்னார் மாவட்டத்தில் முன்னெடுத்துள்ள முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. இதன்படி மடு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்றையதினம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்ற தீர்ப்பு, மாகாண சபைக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது -“புளொட்” தலைவர் த.சித்தார்தன் (சிறப்புப் பேட்டி) 
1புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் மிகவும் அக்கறையுடனும், விரைவான நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டும் வருவதையும்  என்னால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எல்லாப் பக்கங்களினாலும் பாதிக்கப்பட்டு நலிவடைந்திருக்கும் மக்களினுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் அழிக்கப்பட்டிருக்கும் தமிழரின் பூர்வீகத்தை கட்டியெழுப்பவும் அவர்கள்  ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் அந்த வேலைத்திட்டங்களை எவ்வாறு – எதனூடாக செய்வது என்ற குழப்பத்தில் இருக்கும் அதேவேளை, இலங்கையில் தங்களுடைய உதவிகள் வந்து சேர்ந்து அது தமிழரின் நலனுக்கு பயன்படக்கூடியவாறான கட்டுமஸ்தானத்தை  உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார் புளொட் தலைவர் சித்தார்த்தன்.
 
ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள புலம்பெயர் தமிழர்களுடன் சந்திப்புகளை நடத்திவிட்டு நாடு  திரும்பிய பின்னர் ஞாயிறு தினக்குரலுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் அண்மையில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் பிரதம செயலாளர் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் ரீதியாக மாகாண சபைக்கு மிகப் பெரியதொரு பின்னடவை கொடுத்திருக்கிறது. எனவே, கசப்புணர்வுகள், பகைமையுணர்வுகள் மறந்து சபையும் அதிகாரிகளும் ஒன்றிணைந்து நலிவடைந்து எல்லா விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
 
அவருடனான நேர்காணல் வருமாறு;.. Read more

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்பு-

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியிலுள்ள பாடசாலையின் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது இன்று முற்பகல் 10.30 அளவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்டுள்ள ஆயுதங்களை கிளிநொச்சி தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய துப்பாக்கி பாகங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு-

கிளிநொச்சி விஸ்வமடு பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலுக்கு அமைய இன்று அதிகாலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்டுள்ள சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஊவா தேர்தல்; தபால் மூலம் வாக்களிப்பதற்கு 41,867 பேர் விண்ணப்பம்-

ஊவா மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 41,867 பேர் விண்ணப்பித்துள்ளனர். கிடைத்துள்ள விண்ணப்பங்கள் குறித்து பரீசிலனை செய்து வருவதாக தேர்தல் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இதன்பிரகாரம் பதுளை மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 25,870 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொனராகலை மாவட்டத்தில் 15,997 தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட்டு , எதிர்வரும் தினங்களில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளவர்களின் விபரங்கள் வெளியிடப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்-

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக மக்கள் விடுதலை முன்னணி இன்று முற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. பாலஸ்தீன்மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களுக்கும்  அதற்கு அமெரிக்கா துணைபுரிவதற்கும்  எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அப்பாவி பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் அடுக்கடி தாக்குதல் மேற்கொண்டு பல உயிர்களை காவு கொண்டுள்ளதுடன் மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் விடுதலை முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் விஷித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அமெரிக்க அரசாங்கம் உதவி புரிவதாகவும் இதற்கு உலக நாடுகள் தமது எதிர்பினை தெரிவித்துவரும் நிலையில் இலங்கை அரசாங்கம் எவ்வித கண்டணங்களை யும் வெளியிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியின் கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று முற்பகல் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

தேர்தல் சட்ட மீறல் குறித்து 9 முறைப்பாடுகள் பதிவு-

ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில் தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறும் வகையில், வாகன தொடரணிகள் மற்றும் பல்வேறு பிரசார நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளமை குறித்து 9 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறியுள்ளார். வெலிமடை, தியத்தலாவை, பண்டாரவளை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளிலேயே தேர்தல் சட்டமீறல்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தமக்கு இரு சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தில் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர கூறியுள்ளார். மொனராகலை மற்றும் பதுளை பிரதேசங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோரின் குடும்பத்தார் குறித்த அறிக்கை-ஐ.சி.ஆர்.சி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரது குடும்பத்தினரின் தேவைகள் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிக்கை ஒன்றை தயாரிக்கவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த பணிகள் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தும் செயற்பாட்டு குழுவின் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நல்லிணக்க பரிந்துரைகளை அமுலாக்க வேண்டிய இடங்களை அடையாளப்படுத்துவதற்கு ஏதுவாக இந்த அறிக்கை தயாரிக்கப்படுவதா

இலங்கை அதிகாரிக்கு எதிராக தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்-

தமிழ்நாட்டில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்திற்கு முன்னால் நேற்றையதினம் சட்டத்தரணிகள் குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது. இந்த நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பங்கு பற்றியிருந்தார். இதற்கு எதிராகவே இந்த ஆர்பு;பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுப் படுத்தும் வகையில் இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளத்தில் வெளியாகி இருந்த ஆக்கம் ஒன்றுக்கு எதிரான கோசங்கள் எழுப்பபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவுக்கு கண்டனம்-

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள இலங்கை அகதிகள் 157 பேரையும் உயிர்காப்பு படகுகளின் மூலம் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா மேற்கொண்ட முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மாதம் பிடிபட்ட குறித்த அகதிகளை, உடனடியாக உயர்காப்பு படகுகளின்மூலம் திருப்பியனுப்ப அவுஸ்திரேலிய அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். இதற்காக அங்கு அகதிகளாக சென்றிருந்த 107 வயதுவந்த அகதிகளில் 15பேரை தெரிவுசெய்து, படகினை செலுத்துவதற்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசு இவ்வாறு செய்ய முற்பட்டதன்மூலம், குறித்த இலங்கை அகதிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்தாக, அவுஸ்திரேலிய மனித உரிமைகள் மத்திய நிலைய நிறைவேற்று பணிப்பாளர் ஹியூஜ் டி க்ரெஸ்டர் தெரிவித்துள்ளார்.

சிங்கள அகதிகள் உணவுத் தவிர்ப்பில்-

அவுஸ்திரேலியாவின் கர்டீன் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிங்கள அகதிகள் சிலர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள 21 சிங்கள அகதிகளில் 11 பேர் இந்த போராட்டத்தை நடத்தி வருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாங்கள் விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. விசாரணைகளை மேற்கொண்டு தங்களுக்கான அகதி அந்தஸ்த்தை வழங்கி குடியேற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணிகளில் இருப்பவர்களை வெளியேற்ற வருகிறது புதிய சட்டம்-

பயங்கரவாதம் மற்றும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டு தமது காணிகளை இழந்தவர்கள் மீள அதை பெற்றுக்கொள்ள வசதியாக காணி ஆட்சியுரிமைச் சட்டமூலத் திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமது சொந்தக் காணிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளவர்கள் தமது காணியில் தற்போது வேறு யாராவது குடியிருந்தால், அவர்களை வெளியேற்றி மீள தமது காணி உரிமையைப் பெற்றுக்கொள்ள இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கும் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் விளக்கியுள்ளார். எனினும் இதற்கான காலம் ஒரு வருடத்திற்கு வரையறுக்கப்பட்டுள்ளதால். இதில் சம்பந்தப்பட்ட மக்கள் தமது கவனத்தை அதிகரிக்கச் செய்வதற்காக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை நீதியமைச்சு மேற்கொள்ளவுள்ளது. ஒருவருட காலஅவகாசமே உள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் தமது காணி உரிமைகள் தொடர்பில் விரைவாக நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். தற்போதுள்ள ஆட்சியுரிமைச் சட்டத்தின் கீழ் 10 வருடங்கள் ஒருவர் ஒரு காணியில் இருந்தால், அதற்கு உரிமைகோர முடியும். யுத்தம் காரணமாக சொந்த இடங்களில் இருந்த பலர் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களின் காணிகளில் வேறு நபர்கள் வசித்து வருவதால் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இது தொடர்பில் நல்லிணக்க ஆணைக் குழுவாலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே காணி உரிமையாளர்களுக்கு அசாதாரணம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஆட்சியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர சட்ட ஆணைக்குழு 2009 ஆம் ஆண்டே சிபாரிசு செய்திருந்தது. இதற்கமைய ஆட்சியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மன்னாரில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை-

kanaamat ponor thodarpanaகாணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆறாவது அமர்வு நாளையதினம் மன்னாரில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் இந்த அமர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளையும் நாளை மறுதினமும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலும், 11ஆம் திகதி மடு பிரதேச செயலாளர் பிரிவிலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இதுவரையில் 19 ஆயிரத்து 284 காணாமல் போனோர் தொடர்பான முறைபாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாகிஸ்தான் விஜயம்-

janathipathi mahinda rajapakseஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தானில் உள்ள இலங்கையின் வெளிவிவகார செயலாளர் ஷேனுகா டி செனேவிரட்ன அங்கு பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார். இது தொடர்பில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் ஜனாதிபதி பாகிஸ்தானுக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகளை நாடுகடத்த 3 மில்லியன் டொலர் செலவு-

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளை நாடுகடத்துவதற்காக, அவுஸ்திரேலியாவின் ரொனி எபட் அரசாங்கம் 3 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸி குடிவரவுத் திணைக்களத்தின் ஆவணங்களை மேற்கோள்காட்டி இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற தீர்மானித்த அகதிகளுக்கே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆவணத்தின்படி, கடந்த வருடம் செப்டம்பர் மாதம்முதல் கடந்த ஜுலைவரையில் ஆயிரத்து 151 அகதிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். இதறகிடையில் அவுஸ்திரேலியாவின் எல்லை பாதுகாப்பு ஆணையாளர் மைக்கேல் நூனன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவர் இலங்கையில் பல்வேறு தரப்பினரை சந்தித்து, அகதிகளின் இடப்பெயர்வை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் கட்டணங்கள் திருத்தியமைப்பு-

திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்றையதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் முதலாம் திகதிமுதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் அரசாங்கத்தினால் தபால் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டன. எனினும் குறித்த கட்டணத் திருத்தம் தொடர்பில் மக்களுக்கு அறியப்படுத்தும் நோக்கில் ஒரு வாரகாலம் அதனை பிற்போட்டதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார். இதன்படி சாதாரண கடிதங்களுக்கான கட்டணம் ஐந்து ரூபாயில் இருந்து 10 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தபால் அட்டைகளுக்கான விலை எட்டு ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மொனராகலை பலத்த காற்றில் 26 வீடுகள் சேதம்-

மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளை ஊடறுத்து வீசிய பலத்த காற்றின் காரணமாக சுமார் 26 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மொனராகலை சிரிகல கீழ்ப்பிரிவு குடியிருப்பின் 26 வீடுகளுக்கு நேற்றையதினம் வீசிய பலத்த காற்றினால் சேதம் ஏற்பட்டுள்ளது. மொனராகலை மஹாநாம தேசிய பாடசாலையின்மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால், பாடசாலையில் இயங்கும் உயர்தர பரீட்சை மத்திய நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. மின்கம்பங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கம்பங்களின்மீது மரம் முறிந்து வீழ்ந்து அவற்றுக்கு சேதம் ஏற்பட்டதுடன், தற்போது வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவால் விசாரணைகளை எடுக்க முடியாது-இராணுவப் பேச்சாளர்-

இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வழக்குத் தொடர அமெரிக்காவால் முடியாதென இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய நேற்றுத் தெரிவித்துள்ளார். ஒரு நபரை கைதுசெய்ய அல்லது விசாரணைக்குட்படுத்த வேண்டுமெனில் விசாரணை செய்யும் தரப்பிடம் அந்நபருக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருத்தல் அவசியமாகும். அதைவிடுத்து ஒருநபரை எவ்வித ஆதாரங்களுமின்றி கைது செய்வதானது சட்டத்திற்குப் புறம்பான காரியமாகும். அதேபோல்தான் இந்த விவகாரமும் காணப்படுகிறது. கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அவருக்கெதிராக சாட்சியங்களும், ஆதாரங்களும் நிச்சயமாக இருக்க வேண்டும். ஆகவே, அமெரிக்காவால் இவருக்கெதிராக வழக்குத்தொடர முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

வலிமேற்கில் – கலட்டிவீதி புனரமைப்பு, சங்கானையில் புதிய நூலகம், குருபூசை நிகழ்வு-

வலி மேற்கில் மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த வட்டுகிழக்கு கலட்டி வீதி வலி மேற்கு பிரதேச சபையின் நிதி 1.5 மில்லியன் ஊடாக புனரமைக்கப்பட்டு வருகின்றது. பெரும்பாலான மாணவர்கள் மக்கள் பயனிக்கும் மிக பிரதான வீதியான இவ்வீதி பல வருடகாலமாக புனரமைக்கப்படாதிருந்து பிரதேச பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வீதி புனரமைப்பு வேலைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இதேவேளை வலி மேற்கு பிரதேச சபையின் புதிய நூலகம் சங்கானை பட்டினசபை வீதியில் துரித கதியில் வேலை நடைபெற்று வருகின்றது. வலி மேற்கு பிரதேச சபை 4 உப அலுவலகங்களை உள்ளடக்கியது. இவ் உப அலுவலகப்பகுதிகளில் ஒன்றாக உள்ளதே சங்கானைப் பகுதியாகும். இப்பகுதியில் இயங்கும் பிரதேச சபையின் நூலகமானது தற்காலிகமான வீடு ஒன்றிலேயே பாதுகாப்பு மிக குறைவான நிலையில் இயங்கி வருகிறறது. இவ்விடயம் தொடர்பில் பொதுமக்களும் நலன் விரும்பிகளும் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளினால் தற்போது ஏறத்தாழ 3.5 மில்லியன் ரூபா செலவில் இவ் நூலகத்திற்கான இரண்டாம்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் சித்தன்கேணி சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் 07.08.2014 அன்று மாலை 2.00 மணிக்கு சுந்தரழூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வு சங்கானை பிரதேச செயலர் திரு. அ.சோதிநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வில் சித்தன்கேணி சிவசிதம்பரேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.சபா.வாசுதேவக்குருக்கள் ஆசியுரையினை வழங்கவுள்ளார். இவ் நிகழவில் பிரதம விருந்தினராக கலாநிதி. ஆறுதிருமுருகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சண்டிலிப்பாய் பிரதேச செயலக சமூகசேவைகள் உத்தியோகஸ்தர் திரு.வே.சிவராஜா, கிராமசேவகர் திரு.சர்வாணந்தன் மற்றும் ஆலய பரிபாலன சபைத்தலைவர் திரு இ.இராஜ்குமார் என்போர்கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

noolagam noolagam1

சாட்சியமளிக்கும் விபரங்களை வெளியிட்டது ஐ.நா-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக்குழுவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ், மற்றும் சிங்கள மொழியிலும் சாட்சியமளிக்கலாம் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது. குற்றச்செயல் இடம்பெற்ற 21.02.2002 முதல் 15.11.2011 வரை (அதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அது தொடர்பாகவும் முறைப்பாடுகள்) தெரிவிக்கலாம். முறைப்பாடுகள் ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படவேண்டும்.
மின்னஞ்சல் மூலம் அனுப்ப: OISL_submissions@ohchr.org  Read more