யாழ்ப்பாணத்தில் கிருஷ்ணா குழு கைது-
 
  யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தததாக கூறப்படும் கிருஷ்ணா என்ற குழுவைச் சேர்ந்த நான்குபேரை கைதுசெய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொஹான் மகேஷ் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சமூக விரோதச் செயல்களில் கிருஷ்ணாக் குழு ஈடுபட்டு வருவதாகவும் அந்தக் குழு மானிப்பாய் பகுதியை மையமாக வைத்து இயங்கி வருவதாகவும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸார், மானிப்பாய் சந்தைக்கருகில், சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களில் வாள்களுடன் 8 பேர் நிற்பதை அவதானித்தனர். மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிகப் பொலிஸார் வரவழைக்கப்பட்டு, அந்தக் குழு சுற்றிவளைக்கப்பட்டபோது, அவர்கள் தப்பிஓட முயன்றனர். இதனையடுத்து, காலுக்குக் கீழ் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, நால்வர் கைதுசெய்யப்பட்டனர். மிகுதி நால்வரும் தப்பி ஓடியுள்ளனர். இவர்களில், 18, 21, 24 மற்றும் 25 வயதையுடையவர்களே கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 2 துவிச்சக்கர வண்டிகள், 2 வாள்கள், 3 பொல்லுகள், 3 கத்திகள் என்பன மீட்கப்பட்டன. துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சந்தேக நபர்களில் ஒருவர் காயமடைந்ததுடன் அவருக்கு மானிப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய ஏனையோரை கைதுசெய்யும் பணியில் விசேட பொலிஸ் குழு ஈடுபட்டு வருகின்றது என மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தததாக கூறப்படும் கிருஷ்ணா என்ற குழுவைச் சேர்ந்த நான்குபேரை கைதுசெய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொஹான் மகேஷ் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சமூக விரோதச் செயல்களில் கிருஷ்ணாக் குழு ஈடுபட்டு வருவதாகவும் அந்தக் குழு மானிப்பாய் பகுதியை மையமாக வைத்து இயங்கி வருவதாகவும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸார், மானிப்பாய் சந்தைக்கருகில், சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களில் வாள்களுடன் 8 பேர் நிற்பதை அவதானித்தனர். மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிகப் பொலிஸார் வரவழைக்கப்பட்டு, அந்தக் குழு சுற்றிவளைக்கப்பட்டபோது, அவர்கள் தப்பிஓட முயன்றனர். இதனையடுத்து, காலுக்குக் கீழ் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, நால்வர் கைதுசெய்யப்பட்டனர். மிகுதி நால்வரும் தப்பி ஓடியுள்ளனர். இவர்களில், 18, 21, 24 மற்றும் 25 வயதையுடையவர்களே கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 2 துவிச்சக்கர வண்டிகள், 2 வாள்கள், 3 பொல்லுகள், 3 கத்திகள் என்பன மீட்கப்பட்டன. துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சந்தேக நபர்களில் ஒருவர் காயமடைந்ததுடன் அவருக்கு மானிப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய ஏனையோரை கைதுசெய்யும் பணியில் விசேட பொலிஸ் குழு ஈடுபட்டு வருகின்றது என மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுங்க பொருட்களை பெற குறுந்தகவல்-
 இலங்கை சுங்கத்திற்கு வரும் பொருட்களை உரிமையாளர்கள் மீண்டும் பெற்றுக்கொள்ளும் போது குறித்த உரிமையாளர்களுக்கு அது தொடர்பில் குறுந்தகவல் அனுப்பும் முறைமை அறிமுகச் செய்யப்படவுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த செயற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பொருட்களை பெற்றுச் செல்ல முற்படுகின்றனர். இந்த தவாறான மோசடிகளை இதனூடாக குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சுங்கத்திற்கு வரும் பொருட்களை உரிமையாளர்கள் மீண்டும் பெற்றுக்கொள்ளும் போது குறித்த உரிமையாளர்களுக்கு அது தொடர்பில் குறுந்தகவல் அனுப்பும் முறைமை அறிமுகச் செய்யப்படவுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த செயற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பொருட்களை பெற்றுச் செல்ல முற்படுகின்றனர். இந்த தவாறான மோசடிகளை இதனூடாக குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு விபத்தில் ஏழு எருமை மாடுகள் உயிரிழப்பு-
 முல்லைத்தீவு, தட்டாமலை பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 7 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுங்கேணியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான பிக்கப் ரக வாகனம் ஒன்று, வீதியில் கடந்து சென்றுகொண்டிருந்த எருமை மாடுகளை மோதியுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, தட்டாமலை பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 7 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுங்கேணியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான பிக்கப் ரக வாகனம் ஒன்று, வீதியில் கடந்து சென்றுகொண்டிருந்த எருமை மாடுகளை மோதியுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டியில் கெப்ரக வாகனம் திடீரென தீப்பற்றியது-
கொழும்பு, பம்பலப்பிட்டி, கடற்கரை வீதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக வண்டியொன்று தீப்பிடித்துள்ளது. இன்றுகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பம்பலபிட்டி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மடு தலைமன்னாருக்கான புகையிரத சேவை டிசம்பரில் ஆரம்பம்-
மடுவுக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவை, எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்ப்பதாக யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி இன்று தெரிவித்துள்ளார். யாழ் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் இடம்பெற்ற இந்தியாவின் 68ஆவது சுதந்திரதின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய துணைத்தூதரகம் யாழில் திறக்கப்பட்ட்ட 4 வருடங்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, பலருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரக்கூடிய அச்சுவேலி கைத்தொழில் பேட்டை நிர்மாணிக்கப்பட்டு வருதல், வவுனியா வைத்தியசாலைக்கான கட்டிடத்தொகுதி, யாழ் பல்கலைக்கழக விவசாய மற்றும் பொறியியற் பீடங்கள் கிளிநொச்சியில் நிறுவுவதற்கான உதவித்திட்டம், துரையப்பா விளையாட்டரங்கினை புனரமைத்தல், யாழில் கலாசார நிலையமொன்றை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 2012ஆம் ஆண்டு முதல் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டமானது பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதுவரை 14,514 வீடுகள் நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், 19,703 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. நுண்கலைகளை வளர்க்கவும், கலாசார உறவுகளை பலப்படுத்தவும், இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில், நல்லூர் திருவிழாக் காலத்தில் இம்மாதம் 24, 25 ஆகிய திகதிகளில் நடன, இசைக் கச்சேரிகளை சங்கிலியன் தோப்பில் நடத்தவுள்ளோம் என கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
		     பயங்கரவாத தடைப்பட்டியலில் இருந்து தம்முடைய பெயர்களை நீக்கிக்கொள்ள வேண்டுமாயின் அது தொடர்பில் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் தமது பெயர் நீக்கப்பட வேண்டியமைக்கான உரிய காரணத்தை முன்வைக்க வேண்டும் என இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இன்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக, அடையாளம் காணப்பட்டு கடந்த மார்ச் மாதம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 424 நபர்களில் மூன்று நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு சபையின் உறுப்புரைக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ள இப்பட்டியலில் இருந்து தமது பெயரை நீக்குமாறு மூவர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து உண்மைத்தன்மை தொடர்பில் கண்டறியப்பட்ட பின் வெளிவிவகார அமைச்சின் உத்தரவுக்கு அமைய குறித்த மூவரும் நீக்கப்பட்டுள்ளது என பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் கூறியுள்ளார்.
பயங்கரவாத தடைப்பட்டியலில் இருந்து தம்முடைய பெயர்களை நீக்கிக்கொள்ள வேண்டுமாயின் அது தொடர்பில் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் தமது பெயர் நீக்கப்பட வேண்டியமைக்கான உரிய காரணத்தை முன்வைக்க வேண்டும் என இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இன்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக, அடையாளம் காணப்பட்டு கடந்த மார்ச் மாதம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 424 நபர்களில் மூன்று நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு சபையின் உறுப்புரைக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ள இப்பட்டியலில் இருந்து தமது பெயரை நீக்குமாறு மூவர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து உண்மைத்தன்மை தொடர்பில் கண்டறியப்பட்ட பின் வெளிவிவகார அமைச்சின் உத்தரவுக்கு அமைய குறித்த மூவரும் நீக்கப்பட்டுள்ளது என பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் கூறியுள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள மூன்று சட்ட மேதைகளை உள்ளடக்கிய சர்வதேச நிபுணர்கள் குழு நாட்டை வந்தடைந்துள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள மூன்று சட்ட மேதைகளை உள்ளடக்கிய சர்வதேச நிபுணர்கள் குழு நாட்டை வந்தடைந்துள்ளது. உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற கா.போ.த சாதாரண தர மணவர்களுக்கான கொழும்பு அருள் கல்வி வட்டத்தின் இலவச கருத்தரங்கின் போது அங்கு கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மேற்படி கருத்தரங்கை இலவசமாக நடத்தி வரும் சட்டத்தரணி வீ.தேவசேனாதிபதி அவர்கட்கு பேராசான் எனும் கௌரவத்தினை வழங்கி கௌரவித்தார். இவ் நிகழ்வில் மாகாண பிரதிக் கல்விப்பணிப்பாளர் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் ஏறத்தாள வலிமேற்கு பிரதேசத்தின் 1250 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். ஒவ்வொரு மணவர்களுக்கும் சராசரியாக 1500 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மாணவர்களுக்கு நூல்களை வழங்கி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்
உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற கா.போ.த சாதாரண தர மணவர்களுக்கான கொழும்பு அருள் கல்வி வட்டத்தின் இலவச கருத்தரங்கின் போது அங்கு கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மேற்படி கருத்தரங்கை இலவசமாக நடத்தி வரும் சட்டத்தரணி வீ.தேவசேனாதிபதி அவர்கட்கு பேராசான் எனும் கௌரவத்தினை வழங்கி கௌரவித்தார். இவ் நிகழ்வில் மாகாண பிரதிக் கல்விப்பணிப்பாளர் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் ஏறத்தாள வலிமேற்கு பிரதேசத்தின் 1250 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். ஒவ்வொரு மணவர்களுக்கும் சராசரியாக 1500 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மாணவர்களுக்கு நூல்களை வழங்கி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் புதிய மாணவர்களுக்கான அங்குரர்ப்பண கூட்டம் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட லங்கா சித்தமருத்துவ கல்லூரியின் பழைய மாணவியும் தற்போதய வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளருமாகிய திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் புதிய மாணவர்களை வரவேற்றதுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார் தொடர்ந்து உரையாற்றும் போது தாங்கள் இக்கல்லூரியில் கற்ற காலம் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் அக்காலத்தில் மிருந்த நெருக்கடியில் தாங்கள் கற்ற நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். மேலும் இக் கல்லூரியின் தேவைகள் தொடர்பில் உரியவர்களுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். இது மடடுமல்லாது இன்று ஆயுள் வேதத்துறையின் தேவைகள் சமூகத்திற்கு மிக முக்கியமாக உள்ள நிலையையும் எடுத்துக் கூறினார்.
புதிய மாணவர்களுக்கான அங்குரர்ப்பண கூட்டம் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட லங்கா சித்தமருத்துவ கல்லூரியின் பழைய மாணவியும் தற்போதய வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளருமாகிய திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் புதிய மாணவர்களை வரவேற்றதுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார் தொடர்ந்து உரையாற்றும் போது தாங்கள் இக்கல்லூரியில் கற்ற காலம் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் அக்காலத்தில் மிருந்த நெருக்கடியில் தாங்கள் கற்ற நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். மேலும் இக் கல்லூரியின் தேவைகள் தொடர்பில் உரியவர்களுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். இது மடடுமல்லாது இன்று ஆயுள் வேதத்துறையின் தேவைகள் சமூகத்திற்கு மிக முக்கியமாக உள்ள நிலையையும் எடுத்துக் கூறினார். 
 இயங்கும் பட்டப்பளை சர்வதேச முன்பள்ளியின் பரிசளிப்பு விழா பண்டத்தரிப்பு பிரான்பற்று அருள் அமுதேஸ்வரி திருமண மண்டபத்தில் இயக்குனர் திரு.டி.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பண்டத்தரிப்பு ஜசிந்தா பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரிலசர் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன சிரேஸ்ட நிதி ஆலோசகர் திரு.என்.நடராhஜா, வலம்புரி பிரதம முகாமையாளர் திரு.என்.கஜேந்திரன், கலைமாமணி திரு.கே.தெய்வேந்திரம் மற்றும் பண்த்தபரிப்பு கிராம உத்தியோகஸ்தர் கே.பி.சுஜீவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இயங்கும் பட்டப்பளை சர்வதேச முன்பள்ளியின் பரிசளிப்பு விழா பண்டத்தரிப்பு பிரான்பற்று அருள் அமுதேஸ்வரி திருமண மண்டபத்தில் இயக்குனர் திரு.டி.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பண்டத்தரிப்பு ஜசிந்தா பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரிலசர் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன சிரேஸ்ட நிதி ஆலோசகர் திரு.என்.நடராhஜா, வலம்புரி பிரதம முகாமையாளர் திரு.என்.கஜேந்திரன், கலைமாமணி திரு.கே.தெய்வேந்திரம் மற்றும் பண்த்தபரிப்பு கிராம உத்தியோகஸ்தர் கே.பி.சுஜீவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.   இலங்கைக்கு விஜயம் செய்யாது வெளிநாடுகளில் இருந்தவாறே இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐ.நா விசாரணைக்குழு தகவல்களை சேகரிக்க இலங்கைக்குள் வர அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கைக்கு வெளியில் தகவல்களை பெறக்கூடிய சிறந்த வாய்ப்புகள் இருக்கின்றது. விசாரணைக்குழுவினர் நாட்டுக்கு அனுமதிக்கப்பட்டாலும் அனுமதிக்கப்படாவிட்டாலும் ஆதாரங்களை உறுதிப்படுத்துவது சரியான தரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும். வடகொரிய மற்றும் சிரியா ஆகிய நாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் இதற்கு சிறந்த உதாரணமாகும். இந்த இரு நாடுகள் தொடர்பான விசாரணைக்கு இலங்கை சம்பந்தமான விசாரணைக்கும் வித்தியாசங்கள் இருப்பதாக நான் காணவில்லை. இந்தியா மற்றும் தாய்லாந்து வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாக செய்திகளில் உண்மையில்லை. 12 பேர் கொண்ட விசாரணைக்குழு ஜெனிவாவை தளமாக கொண்டு இயங்கும். தேவை ஏற்பட்டால் வேறு நாடுகளுக்கு விஜயம் செய்யும் விசாரணைகளில் அவர்கள் கண்டறியும் விடயங்களை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்பிப்பார்கள். குற்றச்செயல்களுக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பதை கண்டறியவே விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. சமாதானம், நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒரு வழியை உருவாக்கி கொடுக்க இந்த விசாரணையானது சகல இலங்கையர்களுக்கு நன்மையாக அமையும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்யாது வெளிநாடுகளில் இருந்தவாறே இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐ.நா விசாரணைக்குழு தகவல்களை சேகரிக்க இலங்கைக்குள் வர அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கைக்கு வெளியில் தகவல்களை பெறக்கூடிய சிறந்த வாய்ப்புகள் இருக்கின்றது. விசாரணைக்குழுவினர் நாட்டுக்கு அனுமதிக்கப்பட்டாலும் அனுமதிக்கப்படாவிட்டாலும் ஆதாரங்களை உறுதிப்படுத்துவது சரியான தரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும். வடகொரிய மற்றும் சிரியா ஆகிய நாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் இதற்கு சிறந்த உதாரணமாகும். இந்த இரு நாடுகள் தொடர்பான விசாரணைக்கு இலங்கை சம்பந்தமான விசாரணைக்கும் வித்தியாசங்கள் இருப்பதாக நான் காணவில்லை. இந்தியா மற்றும் தாய்லாந்து வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாக செய்திகளில் உண்மையில்லை. 12 பேர் கொண்ட விசாரணைக்குழு ஜெனிவாவை தளமாக கொண்டு இயங்கும். தேவை ஏற்பட்டால் வேறு நாடுகளுக்கு விஜயம் செய்யும் விசாரணைகளில் அவர்கள் கண்டறியும் விடயங்களை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்பிப்பார்கள். குற்றச்செயல்களுக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பதை கண்டறியவே விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. சமாதானம், நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒரு வழியை உருவாக்கி கொடுக்க இந்த விசாரணையானது சகல இலங்கையர்களுக்கு நன்மையாக அமையும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேலும் குறிப்பிட்டுள்ளார். நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 18வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் அர்ஜுன் பீ.தபாவுடன் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார் சார்க் மாநாட்டிற்கான தயார்படுத்தல்களின் தற்போதைய நிலைமை குறித்து பொதுச் செயலாளரால் ஜனாதிபதிக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இளம் சமூகத்தினர்மீது தாக்கம் செலுத்தக்கூடிய விடயங்களை வெளிக்கொணரும் வகையில் பிராந்தியத்தியத்திலுள்ள இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து இளைஞர் மாநாடொன்றை சார்க் அமைப்பு ஏற்பாடு செய்வதன் முக்கியத்தும் குறித்தும் தெற்காசிய பிராந்தியத்திலுள்ள மத மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இடையிலான தொடர்புகளை ஊக்குவிக்கும் அமைப்பொன்றை உருவாக்கும் திட்டத்தையும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளருடனான சந்திப்பின்போது ஜனாதிபதி முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 18வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் அர்ஜுன் பீ.தபாவுடன் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார் சார்க் மாநாட்டிற்கான தயார்படுத்தல்களின் தற்போதைய நிலைமை குறித்து பொதுச் செயலாளரால் ஜனாதிபதிக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இளம் சமூகத்தினர்மீது தாக்கம் செலுத்தக்கூடிய விடயங்களை வெளிக்கொணரும் வகையில் பிராந்தியத்தியத்திலுள்ள இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து இளைஞர் மாநாடொன்றை சார்க் அமைப்பு ஏற்பாடு செய்வதன் முக்கியத்தும் குறித்தும் தெற்காசிய பிராந்தியத்திலுள்ள மத மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இடையிலான தொடர்புகளை ஊக்குவிக்கும் அமைப்பொன்றை உருவாக்கும் திட்டத்தையும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளருடனான சந்திப்பின்போது ஜனாதிபதி முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் மிகவும் அக்கறையுடனும், விரைவான நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டும் வருவதையும்  என்னால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எல்லாப் பக்கங்களினாலும் பாதிக்கப்பட்டு நலிவடைந்திருக்கும் மக்களினுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் அழிக்கப்பட்டிருக்கும் தமிழரின் பூர்வீகத்தை கட்டியெழுப்பவும் அவர்கள்  ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் அந்த வேலைத்திட்டங்களை எவ்வாறு – எதனூடாக செய்வது என்ற குழப்பத்தில் இருக்கும் அதேவேளை, இலங்கையில் தங்களுடைய உதவிகள் வந்து சேர்ந்து அது தமிழரின் நலனுக்கு பயன்படக்கூடியவாறான கட்டுமஸ்தானத்தை  உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார் புளொட் தலைவர் சித்தார்த்தன்.
புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் மிகவும் அக்கறையுடனும், விரைவான நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டும் வருவதையும்  என்னால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எல்லாப் பக்கங்களினாலும் பாதிக்கப்பட்டு நலிவடைந்திருக்கும் மக்களினுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் அழிக்கப்பட்டிருக்கும் தமிழரின் பூர்வீகத்தை கட்டியெழுப்பவும் அவர்கள்  ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் அந்த வேலைத்திட்டங்களை எவ்வாறு – எதனூடாக செய்வது என்ற குழப்பத்தில் இருக்கும் அதேவேளை, இலங்கையில் தங்களுடைய உதவிகள் வந்து சேர்ந்து அது தமிழரின் நலனுக்கு பயன்படக்கூடியவாறான கட்டுமஸ்தானத்தை  உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார் புளொட் தலைவர் சித்தார்த்தன். காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆறாவது அமர்வு நாளையதினம் மன்னாரில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் இந்த அமர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளையும் நாளை மறுதினமும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலும், 11ஆம் திகதி மடு பிரதேச செயலாளர் பிரிவிலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இதுவரையில் 19 ஆயிரத்து 284 காணாமல் போனோர் தொடர்பான முறைபாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆறாவது அமர்வு நாளையதினம் மன்னாரில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் இந்த அமர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளையும் நாளை மறுதினமும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலும், 11ஆம் திகதி மடு பிரதேச செயலாளர் பிரிவிலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இதுவரையில் 19 ஆயிரத்து 284 காணாமல் போனோர் தொடர்பான முறைபாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 