Header image alt text

மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைப்பு, வறிய குடும்பத்திற்கு நிதியுதவி-

malaiநுவரெலியா, தலவாக்கலை லோகித் தோட்டத்தைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் கடந்த 16.01.2015 வெள்ளிக்கிழமை அன்று அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. மேற்படி அப்பியாசக் கொப்பிகள் லோகித் தோட்டத்தின் கோயில் பரிபாலன சபையின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டது. இதேவேளை தலவாக்கலை லோகித் தோட்டத்தைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வறுமைக்கோட்டின்கீழுள்ள நான்கு பிள்ளைகளின் தாயாரான 39வயதுடைய சுரேஸ் பெத்தாயி என்பவருக்கு கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் கடந்த 15.01.2015 வியாழக்கிழமை அன்று 10,000 ரூபாய் நிதியுதவி தலவாக்கலை தோட்ட நிர்வாகத்தின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டது. மேற்படி உதவிகள் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளைத் தோழர்களினால் வழங்கப்பட்ட நிதியிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளன.

malai4malai3malai2malai1

இறுதிக்கிரியை அறிவித்தல்

111645 ஜனனம் : 17 ஏப்ரல் 1968                                           மரணம் : 8 சனவரி 2015

அமரர்  தோழர் ஐயாத்துரை சுகதரன் (வீடியோ சுதா)

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சுகதரன் அவர்கள் 08-01-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிறிஸ்தோத்திரம், ஆங்கிறீஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிறிஸ்டின் அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சினி(சிந்து), கிறிஸ்டின்(சீனு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Read more

ஐ.நா பிரதிநிதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு-

குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் ஆசிய, பசுபிக் பிராந்திய அரசியல் விவகார பணிப்பாளர் மரி யமஷிதா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கள், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று பிற்பகல் அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி சிபினாய் நண்டி மற்றும் ஆலோகர் கிடா ஷபர்வால் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்குபற்றியுள்ளனர். கடந்த ஆண்டிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் மரி யமஷிதா அவர்களும் குழுவினரும் அமைச்சர் ஹக்கீமை சந்தித்து உரையாடியிருந்தனர்.

மின்சார சபைக்கு புதிய தலைவர், உப தலைவர் நியமனம்-

இலங்கை மின்சார சபையின் தலைவராக அநுர விஜேபாலவும் உப தலைவராக நிஹால் விக்ரமசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும் குறித்த துறையில் அதிக அனுபவம் பெற்றவர்கள் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் இதற்கு முன்னரும் இலங்கை மின்சார சபையில் பல பதவிகளை வகித்துள்ளனர். இதேவேளை 3 வருடங்களுக்கு ஒருமுறை தமக்கு கிடைக்கும் வேதன உயர்வு உரிய வகையில் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தி இலங்கை மின்சார சேவையாளர்கள் இன்று இலங்கை மின்சார சபையின் பிரதான காரியாலயம் முன்பாக எதிர்பார்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், மின்சார சபையின் நிர்வாக அதிகாரியின் கையொப்பமில்லாமல் வேதனம் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக இலங்கை மின்சார சேவையாளர்களின் சங்க செயலாளர் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார்.

மேர்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் விசாரணை செய்ய ஹிருனிகா வலியுறுத்தல்-

தனது தந்தையான பாரத லக்ஷமன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த கருத்து பற்றி, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி, மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர முறைப்பாடொன்றை செய்துள்ளார். பொலிஸ் தலைமையகத்திலும் அங்கொடை பொலிஸ் நிலையத்திலுமே இவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இந்த கொலை சம்பவத்துக்கும் ஏனைய முக்கிய சில கொலைகளுக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே ஆசிரியர் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த வாரம் தெரிவித்திருந்தார். கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கடந்த சனிக்கிழமை முறைப்பாட்டை செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியிருந்தார். இதனையடுத்தே தனது தந்தையின் படுகொலை தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரி ஹிருணிக்கா முறைப்பாடு செய்துள்ளார்.

யாழில் இரு சிறுவர்களைக் காணவில்லையென முறைப்பாடு-

தனியார் வகுப்பிற்கு சென்ற சிறுவர்கள் இருவரை காணவில்லை என பெற்றோர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்.பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். யாழ். குருநகர் கடற்கரை வீதியைச் சேர்ந்தவர்களான அன்ரன் அமலராஜ் (வயது 15) மற்றும் அமலதாஸ் துசாந்தன் (வயது 16) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர். இவர்கள் நேற்றுமாலை 4.30 மணியளவில் டேவிட் வீதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு மாலை நேர வகுப்பிற்கு சென்றுள்ளனர். வகுப்பு முடிந்தும் இரவு 10மணி ஆகியும் வீட்டிற்கு இரு பிள்ளைகளும் வரவில்லை என பெற்றோர்கள் தேடி வந்த நிலையில், இரவு 10 மணியளவில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இருவரின் நிலமை தொடர்பில் இன்றுகாலை பல்வேறு முக்கிய இடங்களில் தேடியபோது, இருவரின் துவிச்சக்கர வண்டிகளும் யாழ். புகையிரத நிலையத்தில் பெற்றோரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வகுப்புக்கு சென்றபோது இவர்களிடம் ஆயிரம்ரூபா பணமிருந்ததாகவும் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

பி.எம்.ஐ.சீ.எச் ஆயுத களஞ்சியம் திறப்பு-

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ´ரத்னா லங்கா´ என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆயுத களஞ்சியம் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த களஞ்சிய அறையில் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகவும் அனுமதி இன்றி ஆயுதம் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த களஞ்சிய அறையில் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா-

IMG_5681வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா இன்றுகாலை (19.01.2015) 9மணியளவில் ஆரம்ப பாடசாலையின் அதிபர் திருமதி. கி.நந்தபாலன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான கௌரவ சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வலயக்கல்வி பணிமனையைச் சேர்ந்த திருமதி .N.கிரேனியர், ஆரம்ப பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.சு.தவபாலன், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் செல்வி. உமா இராசையா, பிரதி அதிபர் திருமதி. க.பாக்கியநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். மேற்படி கால்கோள் விழா நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் சமூக ஆர்வலர் திரு. கண்ணதாசன், கோயில்குளம் இளைஞர் கழகத்தின் சஞ்சீ, நிகேதன், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.PhotosRead more

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்-

புதிய அமைச்சரவையின் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர்கள் தமது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.

அமைச்சுக்கள் மற்றும் செயலாளர்களின் விபரம் வருமாறு,

01.மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் – என்.ரூபசிங்க
02.கொள்கை திட்டமிடல், நிதித்துறை, சிறுவர்,இளைஞர் மற்றும் கலாசாரம் – கே.லியனகே
03.பொது பணிப்பு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ அவலுவல்கள் – கே.பி.தென்னகோன்
04.உள்விவகார மற்றும் மீன்பிடி – ஏ.பி.பொரலெஸ்ஸ
05.உணவு பாதுகாப்பு – ஜே.பி.சுகததாஸ
06.வெளிவிவகாரம் – சி.வாகிஸ்வரா
07.புத்த சாசன, பொது நிர்வாகம், மாகாண சபைகள் உள்ளூராட்சி, ஜனநாயக ஆட்சி – ஜே.ததல்லகே
8.பெருந்தோட்டக் கைத்தொழில் – ஏ.எம் ஜயவிக்ரம
09.நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு – கே.ஹெட்டியாராச்சி
10.மின்வலு மற்றும் சக்தி – M.S. பட்டகொட
11.சுகாதார மற்றும் சுதேச – D.M.R.B. திசாநாயக்க
12.நீர்ப்பாசன மற்றும் விவசாயம் – B.விஜேரத்ன
13.நெடுஞ்சாலைகள், உயர் கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு – யு.ஆர்.செனவிரத்ன
14.காணி – I.H.K மஹாநாம
15.வீடமைப்பு மற்றும் சமுர்த்தி – P.H.L. விமலசிறி பெரேரா
16.நீதி மற்றும் தொழில் உறவுகள் – W.F. கமலினி டி சில்வா
17.சுற்றுலா மற்றும் விளையாட்டு – M.I.M.ராபிக்
18.துறைமுக, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து – L.P.ஜயம்பதி
19.கைத்தொழில் மற்றும் வணிகம் – W.H.கருணாரத்ன
20.தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி – வி.சிவஞானசோதி
21.மீள்குடியேற்றம், புனரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் – ஆர்.நடராஜபிள்ளை
22.கல்வி – உபாலி மாரசிங்க
23.வெளிநாட்டு வேலைவாய்ப்பு – G.S.விதானகே
24.சமூக சேவைகள் மற்றும் கால்நடைவளம் – D.K.R. ஏக்கநாயக்க
25.மகளிர் விவகாரம் – திருமதி. W.S. கருணாரத்ன
26.முஸ்லீம் மத அலுவல்கள் & தபால் – அப்துல் மஜீத்

இராஜாங்க அமைச்சுக்கள்

27.கலாச்சாரம் – திருமதி H.D.S. மல்காந்தி
28.கல்வி – டி. நாணயக்கார
29.சிவில் விமான சேவை – டி.சரணபால
30.மின்வலு மற்றும் சக்தி – H.M.B.C.ஹேரத்
31.கடற்றொழில் – நிமல் தர்மசிறி ஹெட்டியாராச்சி
32.சிறுவர் அலுவல்கள் விவகாரம் – எஸ்.எஸ் மியானவல
33.உயர் கல்வி – பி.ரணபெரும
34.பாதுகாப்பு – A.P.G.கித்சிறி
35.பெருந்தோட்டக் கைத்தொழில் – திருமதி ஆர்.விஜயலெட்சுமி
36.இளைஞர் அலுவல்கள் – திருமதி ND.சுகததாச

ஆட்சி மாற்ற அறிகுறி கிழக்கு மாகாணசபையில்

east makanamஇலங்கையில் கிழக்கு மாகாணசபையில் ஏற்படவுள்ள ஆட்சி மாற்றத்தின்போது, முதலமைச்சர் பதவியில் விட்டுக் கொடுப்புக்கு இடமளிக்க வேண்டாம் என்று கிழக்கு மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 11 பேரும் இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்களை கூட்டாக சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
 
கிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றத்திற்காக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. இரு தரப்புக்கும் இடையே இரண்டு தடவைகள் பேச்சுக்கள் நடந்துள்ளபோதிலும், முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ள நிலையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்படுகின்றது. Read more

பைஸர் முஸ்தபா, ரோசி சேனாநாயக்க கடமைகள் பொறுப்பேற்பு-

faiserroshi senanayakeவிமான சேவைகள் இராஜங்க அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார். பத்தரமுல்லை- செத்சிரிபாயவில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கடந்த அரசாங்கத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சராக பைஸர் முஸ்தபா பதவி வகித்திருந்தார். இதேவேளை சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றார். செத்சிரியாபவில் உள்ள சிறுவர் விவகார அமைச்சு அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மேற்கு தொகுதி அமைப்பளராகவும் ரோஸி சேனாநாயக்க செயற்பட்டு வருகின்றார். இதேவேளை ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ எதிர்வரும் 22ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார். பல்வேறு அழுத்தங்கள் வந்தபோதிலும் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளதாக ஊவா முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

கண்காணிப்பு அமைப்புகளுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்க நடவடிக்கை-

எந்த தருணத்திலும் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாக இருந்தால், அதன்பொருட்;டு தேர்தலை கண்காணிக்கும் அமைப்புகளுக்கு அதிக சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் அமைப்புகள் கொழும்பில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆணையாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அடுத்த தேர்தலில் வாக்களிப்பின்போது தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு இதைவிட மேலதிக வாய்ப்புகளை வழங்க முடியும், 100 நாட்கள் அல்ல 10 நாட்களிலும் தேர்தல் நடத்த எம்மால் முடியும். இன்று தேர்தல் வைக்கவேண்டும் என்று கோரினாலும் எம்மால் தேர்தல் ஒன்றுக்கு சொல்ல முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண சபை ஆளுநர் பதவி விலகல்-

மத்திய மாகாண சபையின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் ஆளுநராக 2005ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் அவரது பதவிக்காலம் நிறைவடைகின்றது. டிக்கிரி கொப்பேகடுவ கண்டி மாநகர சபையின் அமைச்சராகவும் இருந்துள்ளார். தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கு தாயார் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது சட்டதிருத்தம் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை-வெங்கையா நாயுடு-

13th amentmentஇலங்கையில் 13-வது சட்டத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து கூறியுள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியாவையும் சீனாவையும் மோதவிட நினைத்தார் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான கருத்து. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பழங்காலம் முதலே நல்ல நட்பு இருந்தது. அது தொடர வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. மேலும் இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், தமிழர்கள் நிலை மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முயற்சியால் ஏற்பட்ட இலங்கையின் 13-வது சட்டத்திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து இந்தியா என்றும் மாறவில்லை என அவர் கூறியுள்ளார்.

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் இடைநிறுத்தம்-

northern highwayவடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த நெடுஞ்சாலைக்கான முழுமையான செலவுகளை ஆராய்ந்து பார்ப்பதற்காவே இந்த பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 750 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் செங்கடகல நுழைவாயிலுக்கான அடிக்கல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாட்டப்பட்டது. 300 கிலோமீற்றர் நீலத்தைக் கொண்ட இந்த நெடுஞ்சாலையானது, நான்கு கட்டங்களாக நிர்மாணிக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. முதற்கட்டமாக, என்டேரமுல்லயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலும், இரண்டாம் கட்டமாக குருநாகல் முதல் பெலெந்தெனிய வரையிலும், மூன்றாம் கட்டமாக தம்புள்ளை வரையிலும் நான்காம் கட்டமாக தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும் நிர்மாணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை அமுலாக்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டதன் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு-

mankala இந்தியாவுக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புதுடில்லி சென்றுள்ளார். இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துக்கொண்ட உயர்மட்டக்குழு கூட்டம் இன்று புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. இவர் நாளையதினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற ஒரு வார காலத்திற்குள், அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப்பயணமாக கருதப்படுகிறது. மேலும் மங்கள சமரவீர மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இடையேயான சந்திப்பின்போதும் இலங்கை இந்தியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய சந்திப்பின்போது மீனவர்கள் விவகாரம், தமிழர்கள் நல்வாழ்வு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா, இலங்கைக்கு பெரிய வாய்ப்பாகும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தமது முதற்பயணமானது இந்தியாவுக்கு முன்னுரிமையை காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் மங்கள தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய மீனவர்கள் 15பேரை விடுதலை செய்துள்ளதாகவும் இந்திய மீனவர்கள் எவரும் இலங்கையில் தடுத்து வைக்கப்படவில்லையெனவும் அமைச்சர் மங்கள தெரிவித்துள்ளார்  .

புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா எதிர்பார்ப்பு

nisa piswalபுதிதாக அமைக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்திடமிருந்து இலங்கை மக்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதனையே நாங்களும் எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்ட தெற்கு மற்றும் மத்திய வலயத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை புதிய அரசு நிறைவேற்ற நாம் ஆதரவளிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் ஜனநாயகம் தொடர்பாக வழங்கப்பட்ட வலுவான தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆட்சி மாற்றம் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிபொறுப்பை ஏற்று, தனது தேர்தல் பிரசாரத்தின்போது அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கியுள்ளது என உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் மேலும் கூறியுள்ளார்.

 
சரத் பொன்சேகாவுக்கு ஜயந்தவின் எம்.பி பதவி

sarath fonsekaஜயந்த கெடகொடவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சரத் பொன்சேகா விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஜயந்த கெடகொட குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பாக பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட சரத் பொன்சோகவின் குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டதனை அடுத்து அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஜயந்த கெடகொடவிற்கு வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை காலி துறைமுகத்தில்

kaliகாலி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மஹநுவர கப்பலில் உள்ள 12 கொள்கலன்கள்களில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் நங்கூரமிடப்பட்டிருந்த மஹநுவர கப்பல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த ஆயுத களஞ்சியசாலை எவன்காட் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது. இத் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினால் குத்தகைக்கு பெறப்பட்டதாகும்.
அதில் ரி-56 ரக துப்பாக்கிகள், மெஷின் கன், 84 எஸ் ரய்பில் எனும் ஆயுதம் மற்றும் தன்னியக்க ஆயுதங்கள், அரைவாசி தன்னியக்க ஆயுதங்கள் உள்ளிட்ட 3,000 ஆயுதங்கள் இருந்ததாக பொலிஸ் தகவல் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதிபெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அதற்குள் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையும் இருந்ததாக அந்த கப்பலுக்கு பொறுப்பாக இருந்தவர் தெரிவித்துள்ளார்.

 இன்னும் இரண்டு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

ஜனாதிபதி மாளிகையிலிருந்த சில பொருட்கள் அடங்கிய இன்னும் இரண்டு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவ்விரு கொள்கலன்களிலும் ஆடைகள், மர தளபாடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இருந்துள்ளன.
பேலியகொடை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த கொள்கலன்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. பேலியகொடை – நீர்கொழும்பு வீதியிலுள்ள ஓரிடத்தில் வைத்தே இவ்விரு கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களுடன் சென்ற அதிகாரிகளிடம் இதுதொடர்பில் விசாரணை நடத்தியபோது, அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய குடும்பத்தின் தனிப்பட்ட பொருட்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இவை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
 
 
நாமல் ராஜபக்ஷ படம் பொறித்த 68,000 சுவர்க்கடிகாரங்கள் மீட்பு

uherமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் முகங்கள் பொறிக்கப்பட்ட 68,000 சுவர்க்கடிகாரங்கள் சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெய்யந்துடுவ, மாபிம பிரதேசத்திலிருந்த களஞ்சியசாலையொன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்காக அச்சடிக்கப்பட்டிருந்த ஒருதொகை சுவரொட்டிகளும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாகவும்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மஹர நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சோதனை விறாந்தின் அடிப்படையிலேயே அந்த களஞ்சியசாலை, நேற்று ஞாயிற்றுக்கிழமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
குறித்த களஞ்சியசாலையானது துறைமுக அதிகாரியொருவருக்கு 15 இலட்சம் ரூபாய் செலுத்தி குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக களஞ்சியசாலையின் உரிமையாளர் தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.