வவுனியா சாந்தசோலை ஸ்ரீ இராமர் ஆலய அடிக்கல் நாட்டும் வைபவம்-(படங்கள் இணைப்பு)-

16வவுனியா சாந்தசோலையில் அமைந்துள்ள ஸ்ரீ இராமர் ஆலய ஆஞ்சநேயருக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (12.02.2016) வெள்ளிக்கிழமை ஆலய பரிபாலனசபைத் தலைவர் திரு எஸ்.சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இவ் வைபவத்தில் பிரதம அதிதிகளாக வவுனியா நகரசபையின் முன்னாள் நகர பிதாவும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு. ஜி.ரி.லிங்கநாதன்(விசு), வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவர் திரு. சு.காண்டீபன், கழக உறுப்பினர்களான எஸ்.சுகந்தன், ஜெ.கயூரன் ஆகியோருடன் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், அயற்கிராம ஆலயங்களின் பரிபாலன சபை உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள் பொதுமக்கள் என பெருந்திரளானோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

1 6 7 10 16 19 20 22 23 24 25