Header image alt text

அஸ்கிரிய மகாநாயக்கர் இலங்கை சிக்கல்களுக்கு தீர்வுகாண முயன்றவர் – மைத்திரி

asgiri_thero_funeralஇலங்கையின் செல்வாக்கு மிக்க பௌத்த மதப் பீடங்களில் ஒன்றான கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் மறைவு, நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும். 
குருநாகலிலுள்ள ஒரு விகாரையில் வைத்து கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரை கடந்த வாரம் சந்தித்து பேசியபோது, நாட்டிலுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பில் அவர் தன்னுடன் கலந்துரையாடியதாக தேரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். Read more

காங்கேசன்துறையில் 533 குடும்பங்களுக்கு காணிகள் திரும்ப ஒப்படைப்பு

jaffna 01யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 700 ஏக்கர் காணியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணி உரிமையாளர்களிடம் சனிக்கிழமை கையளித்துள்ளார்.

இதனை அடுத்து 533 குடும்பங்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியேற வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் மற்றும் நடேஸ்வரா கல்லூரி ஆகிய இரண்டு பள்ளிக்கூடங்களும் அவற்றின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. Read more

கடற்படையினருக்கு காணி வழங்குவதற்கு கடற்தொழிலாளர்கள் எதிர்ப்பு 

sulipuram1சுழிபுரம் கிழக்கு திருவடிநிலை கடற்கரைப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை கடற்படையினரினருக்கு வழங்குவதற்கு  காணி உரிமையாளர்களின் சம்மதத்துடன் நேற்று10.03.2016 காலை 9.30 மணியளவில் அளவீடு செய்யப்பட்டது. 
கடற்கரைப்பகுதியில் கடற்படை முகாம் அமைந்துள்ள சுமார் ஐந்து ஏக்கர் வரையான நிலப்பரப்பே காணி உரமையாளர்களின் பிரசன்னத்துடன் அளவீடு செய்யப்பட்டது.  காணி அளவீடு தொடர்பாக அறிந்து கொண்ட தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் கடற்படை முகாமிற்கு அருகில் திரண்டு எதிர்ப்பு நடவடிக்கiயில் ஈடுபட்டனர். Read more

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு.

vadduhindu3முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு.

முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தினால் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலக பிரிவுட்குட்ப்டட Read more

எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானதாக இருக்கும் – செய்யித் அல் ஹுசைன்

Zeid Raad al-Husseinநாட்டினுள்ள நிலையான சமாதானம், பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கம் அவர்களுக்கே உரித்தான முறையில் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செய்யித் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இதனுடன் தொடர்புடைய முக்கிய பல நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31வது கூட்டத் தொடரில் உரையாற்றிய ஆணையாளர் இவ்வாறு கூறியுள்ளார். Read more

தமிழ்க் கைதிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளனர்
 
judegeஇலங்கையில் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்க் கைதிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 கைதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அறிவித்ததை அடுத்து, தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கைதிகள் தெரிவித்துள்ளனர். Read more

மங்கையற்கரசி மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
 
mankai -kalaiஇலங்கைத் தமிழ் அரசியலில் பெரும்பங்காற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் காலமானதையிட்டு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இரங்கல் வெளியிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், 

‘தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும், இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான நாவலர் அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு துணைவியார் மங்கையற்கரசி, நேற்றிரவு இலண்டன் மாநகரில் மறைந்து விட்டார் என்ற செய்தியினை இன்று காலையில் திராவிடர் கழகத் தலைவர் இளவல் கி. வீரமணி தொலைபேசி வாயிலாகத் தெரிவித்த போது அதிர்ச்சியடைந்தேன்.

கணவரும் மனைவியுமாக அந்தக் காலத்தில் என்னைச் சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதெல்லாம் நினைவுக்கு வந்தது. நாவலர் அமிர்தலிங்கம் இலங்கையில் கொல்லப்பட்ட பிறகு, அம்மையார் அந்த நாட்டிலிருந்தே வெளியேறி தமிழகத்திலும், லண்டனிலும் வாழ்ந்து வந்தார்.

தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்தித்து உடல் நலம் விசாரித்துச் செல்வார். அம்மையாரின் மறைவுக்காக அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் உண்ணாவிரதம்

Unanavirathamதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஆசிரியர் சங்கம் இணைந்து இந்த அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளனர்.

நல்லிணக்க அரசே மௌனம் சாதிப்பது ஏன்?, அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!, சிறை வாழ்வுதான் தமிழருக்கு தலைவிதியா?, பதவிக்கு வரும்வரை வாக்குறுதி வந்த பின் மௌனம் ஏன்?, அரசியல் கைதிகளுக்கு மரணம் தான் தீர்வா? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் தாங்கியவாறு அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுத்தனர்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக வழக்கு

உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதம் இருக்கும் 13 தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் சிறைச்சாலையினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானது என்பதால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அரச தரப்பு சட்டத்தரணி கூறினார்.

இதன் காரணமாக அவர்களை விடுதலை செய்வதற்கோ பிணை வழங்குவதற்கோ தற்சமயம் தீர்மானிக்க முடியாது என்று அரச தரப்பு சட்டத்தரணி கூறினார்.

நீதிமன்றில் தெரியப்படுத்தப்பட்ட விடயங்களை பரிசீலித்துப் பார்த்த கொழும்பு மேலதிக நீதவான் எரணி ஆட்டிகல, சந்தேக நபர்களை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்; இரண்டு மாதத்துள் 64 பேர் கைது
 
Fisherrஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 64 பேர், கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் மாத்திரம் கைது செய்யப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்சமயம் இந்திய மீனவர்களின் 86 படகுகள் இலங்கை அதிகாரிகளின் பொறுப்பில் இருப்பதாக. கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் கடற்றொழில் கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அதேபோன்று இந்திய கடற்பரப்பில் அத்துமிறி மீன்பிடியில் ஈடுபட்ட 09 இலங்கை மீனவர்கள் அந்த நாட்டு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 12 படகுகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களின் படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் எந்த வகையிலும் விடுவிக்கப்பட மாட்டாது என்றும். சட்டமுறைப்படி அவற்றை அரசுடமையாக்கும் நடவடிக்கைகள் எடுப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்கின்றோம்

Posted by plotenewseditor on 10 March 2016
Posted in செய்திகள் 

துயர் பகிர்கின்றோம்

mangayatkarasi amirthalingamஇலங்கைத் தமிழர் அரசியலில் பெரும்பங்காற்றியவரும் தளபதி என தந்தை செல்வாவாலும் தமிழ் மக்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான மதிப்புக்குரிய அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் இன்று லண்டனில் தனது 82வது வயதில் காலமானார். வட்டுக்கோட்டை தொகுதியில் மூளாய் எனும் கிராமத்தைப் பிறப்பிடமாக கொண்ட மங்கையர்க்கரசி அவர்கள், 1954ல் தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்தார்.

இலங்கைத் தமிழர் அரசியலில் அவரது கணவரின் செயல்பாடுகளுக்கு பெரிதும் துணைநின்ற மங்கையர்க்கரசி, கவிஞர் காசியின் பாடல்களை மேடைகளில் உணர்வுபூர்வமாக பாடி ஆற்றிய எழுச்சியுரைகளும் அன்றைய இளைஞர்கள், யுவதிகள்; தமிழ் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட ஒரு காரணமாகவிருந்தது என்பது மிகையல்ல. 1961ம் ஆண்டு நடந்த அரசுக்கெதிரான சத்யாகிரக நடவடிக்கையில் கைதாகி 6 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்ததுட்பட பல உரிமைப்போராட்டங்களில் மக்களை- குறிப்பாக பெண்களை- ஒன்றிணைத்து தலைமை தாங்கியிருந்தார். ஈழத்தில், தமிழ் தேசிய எழுச்சியிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான ஜனநாயக போராட்டங்களிலும் துணிச்சலுடன் பங்கேற்ற முதல் தமிழ் பெண் போராளியாக அவரை வரலாறு பதிவு செய்கிறது.

ஈழத் தமிழ்இனத்தின் விடுதலைக்காக போராடிய ஒரு முன்னோடி புரட்சிப் பெண்ணாக, மக்களின் மனங்கவர்ந்த – மக்களில் கரிசனைகொண்ட ஒரு அரசியல் பேச்சாளராக, வந்தாரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து வழியனுப்பும் குடும்பத் தலைவியாக, தனது புதல்வர்களுக்கு ஒர் அன்புமிக்க அக்கறையுள்ள தாயாக அவர் பல் பரிமாணங்களை கொண்டவர். தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் சுடப்பட்டு படுகொலை செய்யப்படும்வரை, கணவருடன் சேர்ந்து ஓயாது ஒழியாது தமிழ் மக்களின் அரசியலுடன் தன்னைப் பிணைத்திருந்தார். அவர் வரித்துக்கொண்ட வாழ்க்கையும் அரசியலும் பல்வேறு உளைச்சல்களுக்கு அவரை ஆளாக்கியிருந்தபோதும் அவர் அதுகுறித்து விரக்தியையோ வெறுப்பையோ வெளிக்காட்டியிருக்கவில்லை. மாறாக போர் தின்ற மக்களின் வாழ்வு குறித்து கவலையும் கரிசனையும் கொண்டிருந்தார். அவர்களுக்கு உதவுவதில் தன்னாலான முயற்சிகளை இறுதி நாட்களிலும்கூட செய்துகொண்டிருந்தார் என்பதை நாமறிவோம். அண்மையில் உரையாடியபோதும் அவர் அதுபற்றியே எம்முடன் பேசியிருந்தார். 

இறுதிவரை இனத்தை நேசித்த அன்னாரின் பிரிவு ஆழ்ந்த துயருக்குரியது. அவருக்கு எங்கள் இதயஅஞ்சலிகள். மங்கை அக்கா என அன்புடன் விழிக்கப்பட்ட மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் எமது வரலாற்றில் என்றும் வாழ்ந்திருப்பார். வரலாறு அவரின் வாழ்வை மீட்டுத் தரும்.

-தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
-ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
(10-03-2016)

வடக்கு மக்களின் தங்கம் மீளக் கையளிக்கப்படும்-பிரதமர்-

ranilபுலிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த வங்கிகளில் அடகுவைக்கப்பட்ட பொது மக்களின் தங்க நகைகள் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த வங்கிகளில் அடகுவைக்கப்பட்ட பொதுமக்களின் தங்க நகைகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டன. அவற்றில் சில புலிகளுக்குச் சொந்தமானவை. இராணுவத்தினரால் 150 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டு கட்டம் கட்டமாக மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டது. இவற்றின் பெறுமதி 131 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்ட தங்கம் ஆகியவை தொடர்பில், முரண்பாடான கருத்துக்களே நிலவுகின்றன. இதுகுறித்து தரவுகளை ஆராய்ந்து விரைவில் சரியான தகவலை தெரிவிக்கிறேன். தங்க நகைகளுக்கு சொந்தக்காரர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அது தொடர்பான விபரங்களை அறிவதற்கு முன்னாள் இராணுவ தளபதி என்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் தகவல்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். இராணுவத்தினரிடம் தற்போது சுமார் 80 கிலோ தங்கம் உள்ளது. அவற்றிற்கான உரிமையாளர்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்போம். எஞ்சியவை மத்திய வங்கியிடம் கையளிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு கிராமசேவகர் பிரிவுகளில் பதிவு நடவடிக்கைகள்-

fdfdfdfமட்டக்களப்பில் இடம்பெறும் வன்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிலும் புதிதாக பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் அண்மைக்காலமாக கொள்ளை, கொலை, கடத்தல்கள் சம்பவங்கள் இடம்பெற்று வருவதுடன், எல்லைகள் மீள் நிர்ணயம் தொடர்பில் வன்செயல்கள் இடம்பெற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் சாதாரண தோற்றப்பாட்டுக்கு கீழ் ஒரு குழப்ப நிலைமையும் உருவாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், மட்டக்களப்பில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும், இவற்றால் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். கிராமசேவை உத்தியோகஸ்தர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த பதிவுக்குரிய விண்ணப்பப்படிவங்கள் பொலிஸாருக்கு உரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

நோ பயர் ஸோன் படத்தை மலேஷியாவில் வெளியிட்ட லெனா ஹென்ரி விடுவிப்பு-

rettrtஇலங்கை யுத்த வலயம் தொடர்பான “நோ பயர் ஸோன்” என்னும் ஆவணப்படத்தை மலேசியாவில் காட்சிப்படுத்திய பெண் மனித உரிமை செயற்பாட்டாளர், லெனா ஹென்ரி குற்றமற்றவர் என, அந்தநாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றச்சாட்டுக்கள் உரிய முறையில் நிரூபிக்கப்படவில்லை எனவும் வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் நீதவான் மொஹட் ரிஹெப் மொஹட் அரீஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டிருந்தது. இதனையடுத்து மலேசியாவின் திரைப்படத் தணிக்கை சட்டத்தின் கீழ் ஹென்ரிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதேவேளை, குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருந்தால், லெனா ஹென்ரிக்கு மூன்றாண்டு கால சிறைத்தண்டனை அல்லது 300,000 மலேசிய ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளுமே விதிக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஜெனீவா விசாரணைகளின்போது சர்வதேச கண்காணிப்பு அவசியம்-அமைச்சர் பொன்சேகா-

fonsekaஇலங்கை தொடர்பில் மேற்கொள்ளும் ஜெனீவா விசாரணைகளின்போது சர்வதேச ஆலோசகர்கள் மற்றும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும் என யுத்தத்தை முன்னெடுத்த இராணுவ தளபதி என்ற ரீதியில் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சட்டதிட்டங்களை பின்பற்றியே யுத்தத்தை முன்னெடுத்ததாகவும், சட்டங்களை மீறியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெள்ளைக்கொடி விவகாரத்தில் மூன்று வருடங்கள் தான் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானதாகவும், இந்த விடயம் தொடர்பில் உண்மையை கண்டறிய கட்டாயம் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுக வேலைத்திட்டம் 6 மாத காலத்துக்கு நீடிப்பு-

fort cityஇலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான ஒப்பந்த காலத்தை மேலும் 6 மாதத்துக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சூழலியல் பிரச்சினைகள் தொடர்பில் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டன. பின்னர் அது தொடர்பான முறையான மற்றும் முழுமையான சூழல் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையின் பிரகாரம் சில நிபந்தனைகளின் அடிப்படையிலும், திருத்தி கொள்ள வேண்டிய அம்சங்களுக்கிணங்கவும் மீள ஆரம்பிக்க பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை நிலையியல் குழுவின் சிபார்சு செய்துள்ளது. அதனடிப்படையில் குறித்த குறித்த கம்பனிக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை 2016ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதி முதல் மேலும் ஆறு மாதத்துக்கு நீடிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம்-

journalistகடந்த காலங்களில் துன்புறுத்தல்களுக்கும், கொடுமைகளுக்கும் உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக கண்டறிந்து அவர்களுக்கு நியாயம் வழங்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2005 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரையான காலப்பகுதிக்குள் தொழில்சார் ஊடகவியலாளராக பணியாற்றி அநீதிகள், துன்புறுத்தல்கள் அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகியவற்றை எதிர்கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் இவ் விசேட குழுவின் மூலம் நிவாரணம் வழங்கப்படும். அநீதி இழைக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் தமது தொழில்சார் அடையாளத்துடன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக உறுதிபடுத்தக்கூடிய அனைத்து தரவுகள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றை ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்க முடியும். இவ் அனைத்து தகவல்களும் 2016 ஜுன் 15ஆம் திகதிக்கு முன்னர் எஸ். ரி. கொடிகார ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் மனித உரிமை பேரவையில் அறிவிப்பு-

human raightsஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட்ராட் அல்{ஹசைன், இலங்கை விவகாரம் தொடர்பாக இன்று முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.

ஆணையாளர் அல் ஹ_சைன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இந்த விஜயம் குறித்து ஜெனீவாவில் இன்றையதினம் விளக்கமளிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அல்{ஹசைன் இன்று விடுக்கவிருக்கும் அறிவிப்பு இலங்கை தொடர்பில் சிறந்த விம்பத்தை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துக்கூறும் வகையில் அமையும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுகாதார தொண்டர்கள் கவனவீர்ப்புப் போராட்டம்-

dsfdfddநிரந்தர நியமனம் வழங்கப்படும் என எங்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். விரைவில் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வடமாகாண சுகாதார அமைச்சு உறுதிப்பட (எழுத்து மூலம்) கடிதத்தை வழங்க வேண்டும் என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 34 சுகாதாரத் தொண்டர்களும் தெரிவித்துள்ளனர். தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் எனக்கோரி மேற்படி தொண்டர்கள், பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதாரத் திணைக்கள அலுவலகம் முன்பாக இன்று இரண்டாவது நாளாக கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக 6 மாதகால ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்ட இவர்கள், தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையில் காணப்பட்ட தொண்டர்கள் பற்றாக்குறை காரணமாக ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். 6 மாதகாலம் ஒப்பந்தம் முடிந்த பின்னர், விரைவில் 700 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது. Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ஜேர்மன் கிளையின் அனுசரணையில் சுற்றுலா-(படங்கள் இணைப்பு)

DSCN0126தழிழீழ விடுதலைக் கழகத்தின் பிரித்தானியக் கிளையினரின் உதவியுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக யாழ். சுழிபுரம் பகுதியில் மணவர்களுக்கான இலவசக் கல்வி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் தழிழீழ விடுதலைக் கழகத்தின் ஜேர்மன் கிளையிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய கழகத்தின் ஜேர்மன் கிளை மேற்படி சுற்றுலாவுக்கான நிதி வசதியினை வழங்கியிருந்தது.

இந்நிலையில் கடந்த 06.03.2016 அன்று மேற்படி கல்வி நிலையத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மகிழ்வுடன் பார்வையிட்டிருந்தனர். Read more