கட்டணம் சிவனடிபாதமலை பருவகாலம் ஆரம்பித்து 20 நாட்கள் கடந்துள்ள நிலையில், இம்முறை கடந்த காலங்களை விட இம்முறை அதிகளவான யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளனர்.

அத்துடன் சிவனொளிபாதமலையில் காணப்படும் உணவகங்களில் அதிகளவு கட்டணம் அறிவிடுவதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்துவுக்கு கிடைக்கப்பெற்ற புகாரை தொடர்ந்து நுவரெலியா மாவட்ட பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் வாராந்த சுற்றி வளைப்பை மேற்கொள்ள உள்ளதாகவும் இச்சுற்றிவளைப்பில் அதிகளவு கட்டணங்களை அறவிடும் வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.