சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைதுசெய்ய சென்றபோது பொலிஸார்மீது மணல் கடத்தல்காரர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (14-01-2019) 7 மணியளவில் தென்மராட்சி – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கெற்பேலி கிராமத்தில் வழமை போன்று நேற்று மாலை கொடிகாமம் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் உழவியந்திரத்தில் மணல் கடத்தி சென்றுள்ளனர். Read more