Header image alt text

மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை மூடுமாறு கோரியும் காணாமல்போனவர்கள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தியும் நேற்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. முன்பாக கவன ஈர்ப்பு பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு நகர் ஊடாக சென்று மட்டக்களப்பு மத்திய வீதியில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more

கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பெனிஸ்டர் உபயோகித்த தற்போது நீதிமன்றின் பொறுப்பில் இருக்கும் கைபேசியை அரச இரசாயன பரிசோதனைக்கு ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.

19வது திருத்தச்சட்ட மூலத்துக்கமைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம், நீதித்துறை உள்ளிட்டவற்றின் உயர் பதவிக்கான நியமனங்கள் பற்றிய தீர்மானத்தை அரசியலமைப்பு பேரவையே எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் இன்றுகாலை ஒன்றுகூடிய மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், கையெழுத்துப்பெறும் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில், வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் உடன் அரச நியமனத்துக்குள் உள்வாங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியே, இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை, நெடுங்குளம் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அரச மயப்படுத்துவதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த காணிகள் தனியாருக்கு சொந்தமானது என கூறி அந்த பிரதேச மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கொழும்புத்துறை – நெடுங்குளம் பகுதியில் உள்ள காணிகளை அளவீடு செய்வதற்காக யாழ் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை அப்பகுதிக்கு சென்றிருந்தனர். Read more

மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள பனந்தும்பு உற்பத்தி நிலைய பெயர்ப்பலகையில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் பனந்தும்பு உற்பத்தி நிலையம் கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் விமல் வீரவன்ச, பனந்தும்பு உற்பத்தி நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வத்தார். Read more

இலங்கை உள்ளிட்ட 13 நாடுகள், தங்களது நாட்டுக்கு அனுப்பிவைத்த பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 150 கொள்கலன்களை, அந்த நாடுகளுக்கு மீள அனுப்பிவைக்க உள்ளதாக மலேசிய நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் யெவோ பீ யின் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டை கழிவுகளை வெளியேற்றும் இடமாக்குவதற்கு சில நாடுகள் மேற்கொள்ளும் முயற்சி கனவு மாத்திரமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதியை சீனா கடந்த 2018 ஆம் ஆண்டு நிறுத்தியதை அடுத்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இருந்து கழிவுகள் வர தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில், புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபரை 6 வருடங்கள், 10 மாதங்கள் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. Read more

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து, முதலாம் வருட, இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இத் தாக்குதலில், இரண்டு 1ஆம் ஆண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்தப் பல்கலைக்கழகக் கலைப்பீட 1ஆம் ஆண்டு மாணவர்கள், ‘வன்முறையற்ற மாணவர் அமைப்பு’ என, பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஒர் அமைப்பை உருவாக்கிச் செயற்படுத்தி வந்துள்ளனர். Read more

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்காக அரசியல் கட்சிகளினால் பிரேரிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான அனுமதி இன்று பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இன்று மதியம் ஒரு மணிக்கு நாடாளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதுடன், இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் தெரிவுக்குழுக்கள் தொடர்பான பெயர்ப்பட்டியல் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் 9 உறுப்பினர்களினதும் எதிர்க்கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களினதும் பெயர்ப்பட்டியல், நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Read more