Header image alt text

அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான பரிந்துரைகள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அரச தொழில்முயற்சி சபை, சட்ட நிறுவனங்கள் மற்றும் அரச வணிக நடவடிக்கைகளுக்குத் தகுந்த நபர்களை நியமிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. Read more

பொலிஸ் ஊடக பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட இடமாற்றங்களில் பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்தி கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காது விடின் தான் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக முப்பது வயது பெண் ஒருவர் 9 மாதக் குழந்தையுடன் வீதியில் தனிநபராக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

கசிப்பினால் என்னைப் போன்ற பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் காணப்படவில்லை, கசிப்பு பாவனையாளர்களால் அச்சமான நிலைமையே ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் நிம்மதியில்லை, Read more

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான ‘இனியபாரதி’ என அழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமாரை, இம்மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மேலதிக நீதவான் பி.சிவகுமார் உத்தரவிட்டார்.

சந்தேகநபர், நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, மேற்படி உத்தரவை நீதவான் பிறப்பித்தார். திருக்கோவில் – ஆலையடிவேம்பு பிரதேசங்களில், Read more

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ முன்வைத்த அரசியலமைப்பின் 21ஆம் 22ஆம் திருத்தச் சட்டமூலத்தில்,

21 வது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் 19 வது அரசியலமைப்பு திருத்தத்தில் சில உறுப்புரைகளை மாற்றியமைப்பதற்கும், 22 வது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்தின் மூலம் 15 வது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்துச் செய்வதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. Read more

என்றும் தோழமையுடனான வணக்கங்களும், வாழ்த்துகளும்.

கழகத்திற்கு காட்டிய வழியிலும், கழகம் காட்டிய வழியிலும், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க புறப்பட்டு தம்முயிரைத் தியாகம் செய்தவர்களின் விபரங்களை ஆவணப்படுத்த வேண்டிய ஒரு நீண்ட செயற்திட்டத்தின் மிகச் சிறிய, பகுதியான முயற்சியே 2020 ற்கான நாட்காட்டி.

இம் முயற்சியில் குறைபாடுகள் நிச்சயமாக இருக்கும். அவற்றை விமர்சிப்பதை விடுத்து நிறைவு செய்வதற்கான வழிவகைகளை கண்டறிவதற்கான செயற்பாடுகளை ஊக்கப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்.

சர்வதேசக் கிளை உறுப்பினர்கள் சிலரின் சிந்தனையில் உருவான முயற்சியெனினும், அனைத்து நாடுகளில் இருந்தும் தாயகத்தில் இருந்தும் நாட்காட்டி தயாரிப்பிற்காக இறுதிக் கட்டங்களில் கிடைத்த ஒத்துழைப்பு மெச்சத்தக்கது. Read more

இலங்கைக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான நல்லுறவு தொடர்ந்தும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து அலுவலகம் கோரியுள்ளது.

இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அலுவலர் ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் சில தளம்பல் நிலை ஏற்பட்டிருந்தது. Read more

2020 ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை ஆரம்பமாகவுள்ளது.

2019 ஆம் ஆண்டு கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள 37 பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. Read more

குவைத்துக்கு வேலைவாய்ப்பிற்காக சென்று அந்நாட்டில் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்து பின்னர் அந்நாட்டு தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்கள் 36 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் அந்நாட்டில் வைத்து தங்களது வீட்டு எஜமான்களினால் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்து குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்றுள்ளனர். Read more

வவுனியா கல்குண்டாமடுவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 4பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த ஹயஸ்ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து குளத்தினுள் விழுந்து மூழ்கியுள்ளது. Read more