யாழ். நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று (31.01.2020) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் வித்தியாலய முதல்வர் திருமதி சாந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறபபு விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவரும், பொறியியலாளருமான வி.பராபரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். Read more
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காரினுள் கேரள கஞ்சாவினை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நேற்றிரவு 10.00 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சீனா – வூஹான் நகரிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களில் 14 பேர் மருத்து பரிசோதனைகளை பூர்த்தி செய்துகொண்டதன் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று காலை 7.00 மணிமுதல் இராணுவத்தினர் சோதனைச்சாவடி அமைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பிலிருந்து பயணித்த லொறியொன்று இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இன்று முதல் புதிய விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாதத் தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் 9 மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரிலிந்து 33 இலங்கை வந்த மாணவர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.