பாராளுமன்ற தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை பயன்படுத்துவது தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் அவதானம் செலுத்தியுள்ளன.

அதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி கேட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி ​தெரிவித்துள்ளார்.

குறித்த அனுமதி கிடைத்தால் மாத்திரம் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை நாட்டிற்குள் அழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.