ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

இதன்போது, இரு நாடுகளின் தலைவர்களும் நட்பு ரீதியிலான கலந்துரையாடலில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபஸ்ஸவை க்ளஸ்கோ நகரில் சந்தித்தமை மகிழ்ச்சியளிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.