கொரோனா சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை நீக்க உள்ளதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இந்த தடை நீக்கப்படவுள்ளதாக  அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளை பஹ்ரைன் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் பஹ்ரைனில் தொழில் அனுமதியை பெற முடியாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது