அரசாங்க பாடசாலைகளில் அனைத்து வகுப்புக்களும் அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு இம்மாதம் 07 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அனைத்து பாடசாலைகளுக்குமான கல்வி நடவடிக்கைகள்,  மார்ச் மாதம் 07ம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சு மேலும் கூறியுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சைகள், எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பித்து, 22 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இந்நிலையிலேயே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.