Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் எதிர்வரும் 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. Read more

லண்டனில் வசிக்கும் எமது கட்சி செயற்பாட்டாளர் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் தனது தந்தையாரான அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஏழாமாண்டு நினைவை முன்னிட்டு இன்று (11.07.2022) திங்கட்கிழமை மாலை வவுனியா திருநாவற்குளம் கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறுமைக் கோட்டின்கீழான 80 குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணப் பொதிகளை வழங்கியுள்ளார். Read more

லண்டனில் வசிக்கும் எமது கட்சி செயற்பாட்டாளர் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் தனது தந்தையாரான அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஏழாமாண்டு நினைவை முன்னிட்டு இன்று (11.07.2022) திங்கட்கிழமை கிளிநொச்சியில் தெரிவுசெய்யப்பட்ட வறுமைக் கோட்டின்கீழான 53 குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கியுள்ளார். Read more

ஜூலை 15 ஆம் திகதி பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிபிசியிடம் தெரிவித்துள்ளார். அருகிலுள்ள நாட்டில் தங்கியிருக்கும் அவர், புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் என்றும்  சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் சீர்குலைந்த காரணத்தால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நான்கு ஆண்டுகள் தேவைப்படும் எனவும் முதல் வருடம் மிக மோசமானது என சர்வதேச நாணய நிதியம்  குறிப்பிட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். Read more