இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்க இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. உயர்ஸ்தானிகராலயம், இன்று (22) வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. Read more
		    
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5, இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) போன்ற சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைக்கிறது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். 
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு கவலை தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைத் தடை குறித்து சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய தகவல்களையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிக்க பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 
ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு வகையிலும் தேர்தல் நடத்தப்பட்டால், இந்நாட்டில் கிட்டத்தட்ட 3 இலட்சம் மக்கள் வாக்குகளை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக, ஒக்டோபர் 31 ஆம் திகதி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. 
அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (சிபெட்கோ) தொழிற்சங்கங்கள், நாளை (22) எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். 
மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹசாந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை தடுத்து வைக்கும் உத்தரவுகளில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 
அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “நான் அரசியலில் இருப்பேன். உரிய நேரத்தில் தான் ஓய்வு பெறுவேன். அதுவரை நான் போகமாட்டேன்” என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் யுயுகி யோகோஹரி நேற்று முன்தினம் (19) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.