கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக பிரதேச மக்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக பொதுமக்கள் பல்வேறு பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயற்பட்டு வந்த குறித்த பிரதேச செயலகம் 1988களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

1993 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வரும் நிலையில் ஒரு சிலரால் குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகள் தொடர்ச்சியாக பிரயோகிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும் வரையில் தமது அமைதிப் போராட்டம் தொடரும் என பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.