மொட்டுக் கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நாளை (30) தங்காலையில் நடைபெற உள்ளது. பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன கட்சியை மீளக் கட்டியெழுப்பி பலப்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.