இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு பொருளாதார திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான சந்திப்பொன்று புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ராவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் குறித்த சந்திப்பில் பங்கேற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை இந்தியாவுடன் இணைந்து பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு திட்டங்களை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து இருதரப்பும் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.