வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்று (30) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 10 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில் குற்றமிழைத்த நாட்டில் எமக்கான நீதி கிடைக்காது. சர்வதேச நீதியினைக்கோரி நாம் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். சர்வதேசம் இனியும் கண்மூடித்தனமாக இருக்காமல் எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும்.

எமது ஆர்ப்பாட்டங்களை நீர்த்துப்போகச் செய்ய பல அமைப்புக்கள் முற்படுகின்றன. குற்றமிழைத்தவர்களை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தி எமக்கான நீதியை வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன்இ கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.