யாழ். சாவற்காடு பகுதியில் மக்கள் சந்திப்பு-

யாழ் சாவற்காடு பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்வொன்று இன்றுமாலை இடம்பெற்றது. பிரதேச சபை உறுப்பினர் திரு. பரமகுரு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. பா. கஜதீபன் ஆகியோரும் பிரதேச சபை உறுப்பினர்களான திரு.கௌரிகாந்தன், திரு.கணேசவேல் ஆகியோரும் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்கள். இதன்போது மக்கள் தங்களுடைய பிரதேசத்தில் நிலவும் தேவைகளையும் குறைகளையும் எடுத்துக் கூறினார்கள். இதன்போது வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன் ஆகியோர் வட மாகாணசபைத் தேர்தலில் தமக்கு வாக்களித்தமைக்கு முதலில் மக்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்கள். அத்துடன் இந்த மாகாணசபையின் அதிகாரங்கள் மற்றும் மாகாணசபைக்கு கிடைக்கக்கூடிய நிதி எவ்வளவு போன்ற விடயங்கள் தெரியாது, அரசு மாகாண சபைக்கு எவ்வளவு கொடுக்குமென்பதும் தெரியாதுள்ளது. இதனைப் பொறுத்தே செயற்பாடுகளை முன்கொண்டு செல்லமுடியும். ஆனால் நிச்சயமாக இந்த குறைபாடுகளையும், தேவைகளையும் நிவர்த்தி செய்ய நாம் முழுமையான முயற்சி எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.