பிரித்தானிய தமிழர் தகவல் நடுவத்தின் ஏற்பாட்டில் இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை முன்வைத்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட சந்திப்புக்களும் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் அண்மையில் கார்த்தீபன் யோக மனோகரன் தலைமையில் தங்கவேல் வாகீசன், விஜயராசா பிரதீப், செல்வக்குமரன் சிவானந்தம், திலக் அன்ரூஸ் ஆகியோர் மிச்சம் மற்றும் மோர்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஷியோபன் மக்டொனாளை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இனப்படுகொலை பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கு இழைத்து வரும் துன்பங்கள் பல ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள வேளையில், மனித நேயத்திற்கு மதிப்பளிக்கும் பிரித்தானியா, இலங்கைக்கு ஆயுதங்களை தொடர்ந்து விற்பனை செய்வது ஏற்புடையதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக இந்த ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அரசாங்கம், தமிழர் பிரதேசங்களில் உள்ள தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களை அழித்து அந்தப் பிரதேசங்களை சிங்கள மயப்படுத்துகின்றமையும் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதேசமயம் ஆயத விற்பனையை நிறுத்துதல் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் படியும் கேட்டுக்கொண்டனர். குறித்த விசேட சந்திப்புகளின் பிரதான ஏற்பாட்டாளரான அஷந்தன் தியாகராஜாவும் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.