தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவும் கௌரவிப்பும் 17.12.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3மணியளவில் கிளிநொச்சி விவேகானந்தநகர் கிழக்கு, கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் விவேகானந்தநகர் கிழக்கு, கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு. கறுப்பையா ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், விசேட விருந்தினராக வட மாகாண மீன்பிடி, கமநல, விவசாய அமைச்சர் கௌரவ கந்தையா சிவநேசன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more