Header image alt text

D.Sithadtham M.P

வட்டாரப் பங்கீடு மற்றும் உள்ளூராட்சி மன்ற பங்கீடு தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன.

எனினும், தமிழரசுக் கட்சியில் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர்கள் அல்லது மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக இணைந்து கொண்ட தலைவர்களின் நடவடிக்கைகளை அக்கட்சி கட்டுப்படுத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என புளொட் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டாலே வெல்லமுடியும் என்ற நம்பிக்கை வேட்பாளர்களிடம் காணப்பட்டமையே தமிழரசுக் கட்சியுடன் தமது கட்சிக்கு முரண்பாடு ஏற்பட பிரதான காரணம் என்றும் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் குறிப்பிட்டார்.

பல தரப்பினர் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிவீதத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் சித்தார்த்தன் நம்பிக்கை வெளியிட்டார்.  Read more

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வேட்பாளர்களில் ஒரு பகுதியினரை புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது கந்தரோடை இல்லத்திற்கு அழைத்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.

இன்றுமுற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது தேர்தல் சம்பந்தமான விளங்கங்கள் வழங்கப்பட்டதோடு, தேர்தல் பிரச்சாரங்களை எவ்வாறு முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
Read more

வவுனியா மாவட்டம்

வவுனியா நகர சபை

1. சோதிமதி நகுலேஸ்வரம்பிள்ளை
2. சிவலிங்கம் இரவீந்திரன்
3. வேல்நாச்சியாள் துரைராஜா

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை

1. செல்வராணி கமலேஸ்வரன்
2. முகம்மதுமுஸ்தபா குமார்தீன்
3. பழனியாண்டி செல்வகுமார்
4. அகிலாம்பாள் ஆரியசிறி Read more

யாழ். ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறைமுகத்தில் நேற்றுமாலை 05.00 மணியளவில் எழுதாரகை படகு பயணத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

எழுவைதீவு – அனலைதீவு ஆகிய தீவுகளில் வசிக்கும் 453 குடும்பங்களின் நன்மை கருதி அரசினால் 1130 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய படகு சேவை தொடக்கி வைக்கப்பட்டது. வட மாகாண ஆளுநர் றெஜினோல்குரே இதனை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், பிரதேச செயலாளர் மஞ்சுளா, உதவி அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா நகரசபை

1. கனகரட்ணம் சந்திரகுலசிங்கம்(மோகன்) (வட்டாரம் – கோவில்குளம்)
2. சுந்தரலிங்கம் காண்டீபன்(காண்டீ) – (வட்டாரம் தாண்டிக்குளம்(குருமண்காடு)

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை

1. தேவசகாயம் இந்திரமூர்த்தி – (வட்டாரம் – குருக்கள் புதுக்குளம்)
2. திரு புஸ்பராஜா சுஜீவன் – (வட்டாரம் – பாவற்குளம்)
3. சுப்பையா ஜெகதீஸ்வரன்(சிவம்) (வட்டாரம் – பெரியதம்பனை)
4. இரத்தினசிங்கம் பரிகரன் (வட்டாரம் -ஆண்டியா புளியங்குளம்)
Read more

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பிரதேசத்திலுள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலமொன்று, இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தாழங்குடா, மதுராபுரம் கிராமத்தில் வசித்து வந்த நல்லதம்பி செல்வராணி (வயது 57) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. 3 பிள்ளைகளின் தாயான இவரின் சடலம், அவரது வளவிலுள்ள கிணற்றிலிருந்தே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரித்தனர். Read more

மன்னார் நகர சபை

1. சுப்பிரமணியம் பிருந்தாவனநாதன் (வட்டாரம் 05- சின்னக்கடை)

மன்னார் பிரதேச சபை –

1. யேசுதாசன் ஜோன் நிகால் (வட்டாரம் 03- துள்ளுக்குடியிருப்பு)

மாந்தை மேற்கு பிரதேச சபை –

1. முனியசாமி விஜயபாண்டி (வட்டாரம் 02- இலுப்பைக்கடவை)
2. அந்தோனி ஜேம்ஸ் (வட்டாரம் 08- வட்டக்கண்டல்) Read more

மண்முனைப் பற்று

1. செல்லத்துரை மாணிக்கராசா (வட்டாரம் 04- ஆரயம்பதி தெற்கு)
2. தோமஸ் சுரேந்தர் (வட்டாரம் 01- ஆரயம்பதி கிழக்கு)
3. சாம்பசிவம் நகுலேஸ்வரன் (வட்டாரம் 02- ஆரயம்பதி மேற்கு)
4. கணபதிப்பிள்ளை லோகநாதன் (வட்டாரம் 05- செல்வ நகர்)
5. சாமித்தம்பி மகாதேவி (வட்டாரம் 09- கிரான்குளம் வடக்கு)

கோரளைப் பற்று

1. மகாலிங்கம் ஜெயசீலன் (வட்டாரம் 02- கோராவளி)
2. சண்முகம் சவுந்தரராஜன் (வட்டாரம் 14- மொரக்கொட்டான்சேனை)
Read more

புதுக்குடியிருப்பு பிரதேச சபை

1. நந்தகுமார் கேதினி (வட்டாரம் 01 விசுவமடு)
2. சிவசுந்தரம் கணேசபிள்ளை (வட்டாரம் 10 தண்டுவான்)
3. ஜீவரத்தினம் கிருபாஜினி (வட்டாரம் 02 பாரதிபுரம்)

துணுக்காய் பிரதேச சபை

1. தங்கவேல் சிவகுமாரன் (வட்டாரம் 05 மல்லாவி)
2. பாலசிங்கம் கிருஷ்ணகுமார் (வட்டாரம் 02 புத்துவெட்டுவான்) Read more

ஐ.நா.வின் மனித உரிமை விசா­ரணை அதி­காரி தங்கள் நாட்­டுக்குள் நுழைய மியன்மார் தடை விதித்­துள்­ளது. மியன்­மாரில் ரக்கைன் மாகா­ணத்தில் ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீது நடத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும் தாக்­கு­தல்கள் உட்­பட, மியன்­மாரின் மனித உரி­மைகள் குறித்து ஆய்வு நடத்­து­வ­தற்­காக விசா­ரணை அதி­காரி யாங்ஹீ லீ மியன்மார் செல்ல இருந்தார்.

ஆனால், அவர் தனது பணியைச் செய்யும் போது நடு­நி­லை­யாக இல்­லா­ததால் மியன்­மா­ருக்கு வர தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அரசு கூறி­யுள்­ளது. ரக்­கைனில் ஏதோ மோச­மான செயல் நடக்­கி­றது என்­பதை தனக்கு தடை விதிக்­கப்­பட்ட முடிவு காட்­டு­கி­றது என யாங்ஹீ லீ கூறி­யுள்ளார். Read more