சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லுன் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார். சிங்கப்பூர் பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பாணையையேற்று இலங்கைக்கு வரும் சிங்கப்பூர் நாட்டு பிரதமர் லீ சின் லுன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடனும் அரசியல் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடுவார் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.