அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கிடைக்காவிட்டால், அடுத்த ஆண்டில் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் சில மாதங்களுக்கு தேவையான நிலக்கரி தொகையை உடனடியாக நாட்டிற்கு கொண்டுவ​ர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.