Header image alt text

சமூக மேம்பாட்டுப் பிரிவு News

31.12.1994இல் கொழும்பில் மரணித்த எமது கட்சியின் முன்னாள் உபதலைவர் தோழர் கரவை அங்கிள் (ஏ.சி. கந்தசாமி- கரவெட்டி) அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
தோழர் கரவை ஏ.சி.கந்தசாமி (கரவை அங்கிள்) அவர்கள்
ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் நீண்டகாலமாக தன்னை இணைத்து செயற்பட்டு வந்தார்.

Read more

புதிய பரீட்சைகள் ஆணையாளராக அமித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன ஓய்வு பெற்றதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மாநகர சபைக்கு முதல்வர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை இன்று (31) இரவு முதல் இராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். Read more

அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை அடுத்த வருடத்திற்கும் செல்லுபடியாகும் வகையில் நிதியமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான செலவினங்களை அங்கீகரிக்கும் மற்றும் பொதுச் செலவினங்களை நிர்வகித்தல் என்ற தலைப்பில் இந்த புதிய சுற்றறிக்கையை நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன வெளியிட்டுள்ளார். Read more