அவுஸ்திரேலியாவிலிருந்து மேலும் 33 பேர் திருப்பி அனுப்பிவைப்பு-

அவுஸ்திரேலியாவில் புகலிடம்கோரி அகதிகளாக சென்றவர்களில் மேலும் 33 பேர் இன்று விமானம் ஊடாக நாடுதிரும்பியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து விசேட விமானத்தின் மூலமாக பலத்த பாதுகாப்புடன் இவர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இக்குழுவில் 8 பெண்களும் 25 ஆண்களும் உள்ளதுடன், சிறுவர்கள் எட்டுபேரும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் திருகோணமலையிலிருந்து மீன்பிடி படகுகள் மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாகவும், அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கிடைக்காததையடுத்து திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அவுஸ்திரேலியாவிலிருந்து நேற்றும் 40பேர் திருப்பியனுப்பப்பட்டிருந்தனர்.