வடக்கு நோக்கி பயணம் மேற்கொண்ட சனல்4 ஊடகவியலாளர்கள் அனுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

2398_content_yarldeviபொதுநலவாய மாநாட்டு செய்தி சேகரிப்பதற்காக இலங்கை வந்துள்ள கெலும் மக்ரே உட்பட சனல்4 ஊடகவியலாளர்கள் இன்று புதன்கிழமை வடக்கிற்கு விஜயத்தை மேற்கொண்டு பயணித்தனர்;. அவர்களை வடக்கிற்கு செல்லவிடாது ஆர்ப்பாட்டகாரர்கள் அனுராதபுரத்தில் அவர்கள் பயணம் செய்த ரயிலை மறித்து  எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கிளிநொச்சி நோக்கி யாழ். தேவி ரயிலில் பயணம் செய்த லண்டன் சனல் 4 குழுவினருக்கு எதிராக அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து, பதற்ற நிலை ஏற்பட்டது.  இறுதியாக சனல் 4 குழுவினர் கொழும்பு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.