சர்வதேசத்துக்கு செவி சாய்க்க வேண்டும்-அலிஸ்டயார் பர்ட்-

சர்வதேச நாடுகள் வலியுறுத்துகின்ற விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் முதலில் செவி சாய்க்க வேண்டும் என பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சின் துணை செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிஸ்டயார் பர்ட் தெரிவித்துள்ளார். இந்த விடயங்களுக்கு செவி சாய்த்ததன் பின்னர், அதனுடன் இணங்கி நடப்பதா? எதிர்ப்பதா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது புலொக் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்க தீர்மானிக்கப்பட்ட கடுமையானது. எனினும் அதுவே சரியான தீர்மானம். இதன்விளைவாகவே இலங்கையின் வடமாகாணத்துக்கு முதன் முதலாக வெளிநாட்டு அரச தலைவர் ஒருவரால் விஜயம்செய்ய முடிந்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்குவது தொடர்பில், சாதகமான பதில் ஒன்றையே இலங்கை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக அமையும் என்றும் அலிஸ்டயார் பர்ட் கூறியுள்ளார். மாறாக சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளை புறக்கணிப்பதால், எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.