Header image alt text

காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு-

Janathipathi anaikulu (2)யுத்தகாலத்தில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் விசாரணை காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன் செயலாளர் எச்.டபிள்யு. குணதாஸ இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மாதம் 15ம் திகதியுடன் இந்த ஆணைக்குழுவின் விசாரணைக் காலம் நிறைவடைவதாக இருந்தது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதன் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தங்களின் விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் காணாமல் போன பொது மக்கள் தொடர்பில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான முறைபாடுகளும், காணாமல் போன இராணுவத்தினர் தொடர்பில் 5 ஆயிரம் முறைபாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்பார்க்கும் இந்தியா-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் செயிட் அக்பருதீன் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15ம் திகதி முதல் 18ம் திகதி வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை இந்திய உறவில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என செயிட் அக்பருதீன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க Read more

ஜெர்மன் புலம்பெயர் உறவுகளின் கல்விக்கு கைகொடுப்போம் நிகழ்ச்சித் திட்டம்-

kalvikku kai koduppom (3)kalvikku kai koduppom (2)ஜேர்மனி நாட்டின் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விக்கு கைகொடுப்போம் 2015ம் ஆண்டுக்குரிய நிகழ்ச்சித்திட்டம் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தலைமையில் கடந்த 24.01.2015 அன்று யாழ். சுழிபுரத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்ச்சித் திட்டம் கடந்த 2014ம் ஆண்டு முதலாக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜேர்மனி நாட்டில் வசித்துவரும் புலம்பெயர் உறவுகள் ஜேர்மன் நாட்டின் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களது தலைமையின் கீழ் இடம்பெற்று வருகின்றது. வறிய மாணவர்களின் மேலதிக கல்விக்கு உதவும் பொருட்டு கடந்த ஆண்டில் 94 மாணவர்கள் வலி மேற்கு பிரதேசத்தில் உதவிகளை பெற்றிருந்தனர் இவ் ஆண்டு 113 மணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கன உதவித்திட்டங்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களின் சார்பில் ஜெர்மன் நாட்டிலிருந்து சபாரட்ணம் ஜெயகுமார் (சாமியார்) கலந்து சிறப்பித்துக்கொண்டார்.

சங்கானையில் ஞானம் பவுண்டேசன் நிறுவனம் தாணா ஓடைக் கிராம மக்களுக்கு உதவி-

P1000845P1000891P1000904lhio_hயாழ். சங்கானை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட து-178 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள தாணா ஓடைக் கிராமத்தில் 05.02.2015 அன்று ஞானம் பவுண்டேசன் நிறுவனத்தினரால் 37 பயனாளிகளுக்கு ஏறத்தாழ 80,000 ரூபா பெறுமதியிலான மலசலகூட வசதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் அதிதிகளாக வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், சங்கானைப் பிரதேச செயலர் ஆ.சோதிநாதன், சங்கானைப் பிரதேச செயலக உதவித் திட்மிடல் பணிப்பாளர் திரு.வீ.சிவகுமாரன், கிராம உத்தியோகஸ்தர் திரு.சிவகுமார், இளைப்பாறிய கிராம உத்தியோகஸ்தர் திரு.ஜெகதீசன் உட்பட பல உத்தியோகஸ்தர்களும் பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர். இதன் ஆரம்ப நிகழ்வாக சங்கானை முருகமூர்த்தி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது தொடர்நது அடிக்கல் நாட்டும் நிகழ்வை உத்தியோகபூர்வமாக அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானைப் பிரதேச செயலர் ஆ.சோதிநாதன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

புதிய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் 163 வாக்குகளால் நிறைவேற்றம்-

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் 163 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது வாக்கெடுப்பின்போது வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 164 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் செலுத்தப்பட்டன. சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார திட்டத்துக்கு எதிராக வாக்களித்தார். கடந்த வாரத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இடைக்கால வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக விவாதங்களும் இடம்பெற்றன

யாழ் இந்துக் கல்லூரியில் இரத்ததான முகாம்-

blutயாழ்ப்பாண இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டினை அடுத்து நாளை அதாவது 08.02.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிமுதல் மாலை 02.00 மணிவரை யாழ் இந்துக் கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெறவுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்களான தமிழ் தேசிய இளைஞர் கழகம் தெரிவித்துள்ளது. இரத்ததானம் செய்ய விரும்பிய கொடையாளர்கள் நாளை மேற்படி இரத்ததான முகாமில் கலந்து கொள்ளமுடியும். அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் இரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் யாழில் பரவலாக மக்களுக்கு வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இரத்ததானம் செய்ய விரும்பியவர்கள் ஒழுங்கமைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ள 076 6644 059, 077 0733 719, 077 5058 572, 071 880 9757, 075 7729 544 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளமுடியும்.

biut

மக்கள் ஆணைக்கு முரணாக முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பு-

2012-ம் ஆண்டு நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே மாகாணசபையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சிமைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் புதிய ஆட்சியமைப்பு நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது என்றும் சம்பந்தன் பிபிசியிடம் கூறியுள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது, அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்திருந்தது. அவ்வாறே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் அரச கூட்டணியிலிருந்து வெளியேறியிருந்த முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியின் வேட்பாளரையே ஆதரித்தது. இந்த சூழ்நிலையில், மீண்டும் அரச கூட்டணியுடன் சேர்ந்து கிழக்கில் ஆட்சியமைத்துள்ளதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படுகின்றது. அரசாங்க கூட்டணியிலும் பார்க்க 6ஆயிரத்து 100வாக்குகளையே குறைவாகப் பெற்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களை வென்றிருந்தது. எம்மைவிட 61 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையே வென்றிருந்தது. கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 2மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே முதலிடத்தைக் கைப்பற்றியிருந்தது. எந்தவொரு மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கவில்லை என இரா. சம்பந்தன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

வவுனியா, பரமேஸ்வரா வித்தியாலய விளையாட்டுப் போட்டியும், பாராட்டு நிகழ்வும்-

parmesvara01நேற்று 07.02.2015 வெள்ளிக்கிழமை வவுனியா, அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியுடன் கூடிய நிகழ்வின்போது சமூக ஆர்வலர் அன்பர் தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார். வவுனியா, அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதி உதவியில் கல்வித் தெய்வம் சரஸ்வதிக்கு சிலை அமைக்கப்பட்டு கடந்த 23.06.2014 புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதன்போது உயர்தரத்திற்கு தகுதிபெற்ற மாணவர்கள் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், வறுமைக் கோட்டின்கீழ் இருந்த மாணவன் ஒருவருக்கான கல்விச் செலவும் தொடர்ச்சியாக வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டு அதற்கான வங்கிக் கணக்கும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் வறுமைக் கோட்டின்கீழ் தமது கல்வியைத் தொடரும் இம் மாணவர்களுக்கு பாதணிகளும் வழங்கி வைக்கப்பட்டது. இவற்றுக்கான நிதிகள் யாவும் அன்பர் தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று 07.02.2015 மேற்படி பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியுடன் கூடிய நிகழ்வின்போது அன்பர் தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் பாடசாலை சமூகத்தினால் வரவேற்கப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

parmesvara02parmesvara03parmesvara01parmesvara04parmesvara07parmesvara06parmesvara05parmesvara08parmesvara09parmesvara10parmesvara11parmesvara12

கிழக்கு மாகாண முதல்வராக ஹாபிஸ் நசீர சத்தியப்பிரமாணம்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமாக இருந்த ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண முதலமைச்சராக இன்றுமாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில், திருகோணமலையில் இந்த சந்திப்பிரமாணம் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற உடன்படிக்கைக்கு அமைய இறுதி இரண்டரை வருடங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சு பதவி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் குறித்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் புலி உறுப்பினர் கைது-

கடத்தப்பட்ட வேன் ஒன்றினை போலியான முறையில் இலக்கம் மற்றும் வர்ணங்களை மாற்றி விற்பனை செய்ய முற்பட்ட முன்னாள் புலிகள் இயக்க (புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலி உறுப்பினர்) உறுப்பினரை மட்டக்களப்பு மாவட்ட விசேட பொலிஸ் பிரிவினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர். யாழ் மானிப்பயை சேர்ந்த குலேநதிரன் கார்த்தீபன் என்ற குறித்த சந்தேகநபர் 56-5647 என்ற வேனைக்கடத்தி அதன் எஞ்ஜின் இலக்கம் மற்றும் வர்ணத்தையும் மாற்றி காத்தான்குடிக்கு எடுத்துவந்து வர்த்தகர் ஒருவருக்கு விற்க முயன்றுள்ளார். குறித்த வேன் தொடர்பில் எழுந்த சந்தேகத்தின்கேரில் விசேட பொலிஸ் பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து குறித்த நபரும் வாகனமும் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.வெதகெரத தெரிவித்துள்ளார்.

2,200 பேருக்கு இரட்டைக் குடியுரிமை, மாவட்டச் செயலர்களுக்கும் இடமாற்றம்

முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் 2,200 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் 1,800 பேருக்கு இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது இவ்விதமிருக்க நாடு முழுவதிலும் கடமையாற்றும் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் இடமாற்றம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றையதினம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின்போது இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அத்துடன் புதிய தபால்மா அதிபராக டீ.எல்.பீ.ஆர். அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

படகு கவிழ்ந்ததில் ஒருவரை காணாவில்லை-

மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களின் படகு கவிழ்ந்ததன் காரணமாக ஒருவர் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை 6.30 மணியளவில் மூன்று பேர் படகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது படகு கவிழ்ந்ததன் காரணமாக மூன்று பேரில் இருவர் தப்பியுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர் மட்டக்களப்பு கறுவப்பங்கேணியை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் விஜயகுமார் (40வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரை தேடும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறைக்கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை-

கடந்த கால யுத்தத்தின் போது, சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 275 பேரில் சிறிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் ஆராய்வதற்காக, மீளமைப்பு தொடர்பான விஷேட ஜனாதிபதி செயற்பாட்டு அணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசின் அடக்குமுறையே இப்போதும் தொடர்வதாக குற்றச்சாட்டு-

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செயற்படுத்தி வந்த அடக்குமுறை சட்டங்களையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தற்போது செயற்படுத்தி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. முப்படையினருக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டமை தொடர்பில், முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜாகொட வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் பொலிஸாரின் அதிகாரங்கள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாட்டின் பல பிரதேசங்களுக்கு இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முழு நாட்டிலும் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தவிர சில மாவட்டங்களின் கரையோர பிரதேசங்களும் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய நிர்வாக மாவட்டங்களுக்கு அருகில் இருக்கும் தேசிய நீர் நிலைகள் இராணுவ அழைக்கப்படும் பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளன. இந்த பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. சாதாரண சட்டத்திற்கு அமைய பிரதேசங்களின் சிவில் நிர்வாகம், சட்டம் மற்றும் அமைதிகாக்கும் பணிகளுக்கு இராணுவத்தை அழைக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை. அவசரகால சட்டத்தின் கீழ் பொலிஸாரின் இந்த சட்டம் முப்படையினருக்கு வழங்கப்பட்டது. கைது செய்தல், வாகனங்களை சோதனையிடுதல், வாகனங்களை நிறுத்துதல், வீடுகளை பரிசோதித்தல், அடையாள அட்டை பரிசோதித்து அடையாள உறுதிப்படுத்தல் போன்ற பொலிஸாரின் அதிகாரங்கள் அவசரகாலச் சட்டத்தின் ஊடாக முப்படையினருக்கு வழங்கப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Sumanthiran_samஇலங்கையின் சுதந்திர தின விழாவில் சம்பந்தர், சுமந்திரன் பங்கேற்பு

கொழும்பிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்ற இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடந்த நான்கு தசாப்தங்களாக இல்லாத வகையில் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் மற்றும் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழர்களின் எதிர்காலம் கருதியே சுதந்திர தின நிகழ்வில பங்கேற்பது குறித்து கவனமாக சிந்தித்த பிறகே தான் முடிவெடுத்ததாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் பிபிசியில் தெரிவித்துள்ளார். Read more