Header image alt text

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின்; மாபெரும் இரத்ததான முகாம்-

dfddTYNCவவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஓமந்தை இணைப்பாளர் திரு.திவாகரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததான முகாம் நேற்று (21.03.2015) சனிக்கிழமை காலை 09.00மணி தொடக்கம் 12.30மணிவரை நடைபெற்றது. ஓமந்தை வாழ் இளைஞர்களின் பூரண ஒத்துழைப்பிலும் பொதுமக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் பங்களிப்பிலும் வெற்றிகரமாக இவ் இரத்ததான முகாம் நடைபெற்றது. இவ் இரத்ததான நிகழ்விற்கு Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிகள் 26பேர் இன்று பதவிப்பிரமாணம்-

ministers 2015ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். 11 அமைச்சரவை அமைச்சர்கள், 5 இராஜங்க அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்களே இன்றை தினம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இன்று புதிதாக பதவியேற்ற அமைச்சர்களின் பெயர் விவரங்கள்-

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
1. ஏ.எச்.எம்.பௌசி – அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
2. எஸ்.பி.நாவின்ன – தொழிலாளர் அமைச்சர்
3. பியசேன கமகே – தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அமைச்சர்
4. சரத் அமுனுகம – உயர்கல்வி மற்றும் ஆராய்சி அமைச்சர்
5. எஸ்.பி.திசாநாயக்க – கிராமிய விவகார அமைச்சர்
6. ஜனக பண்டார தென்னகோன் – மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற அபிவிருத்தி        அமைச்சர்
7. பீலிக்ஸ் பெரேரா – சிறப்புத் திட்ட அமைச்சர்
8. ரெஜினோல்ட் குரே – விமான சேவைகள் அமைச்சர்
9. மஹிந்த யாப்பாய அபேயவர்த்தன – நாடாளுமன்ற விவகார அமைச்சர்
10. விஜித் விஜயமுனி சொய்ஸா – நீர்ப்பாசன அமைச்சர்
11. மஹிந்த அமரவீர – மீன்பிடித்துறை அமைச்சர் Read more

ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது-ஜனாதிபதி மைத்திரிபால-

presidentவலய நாடுகள் மாத்திரமன்றி, அனைத்து ஐரோப்பிய நாடுகளினதும் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த நாடுகள் புதிய அரசாங்கத்தின்மீது கொண்டுள்ள நம்பிக்கையை, நாட்டு மக்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் சர்வதேசத்திற்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரிவினையை, புதிய அரசாங்கம் நிறைவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொலன்னறுவை வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய குருதி மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்றையதினம் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு, உலக நாடுகள் சில, கடந்த காலங்களில் ஆதரவுகளை வழங்கி வந்ததாகவும் இந்த நிகழ்வின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுப்படுத்தியுள்ளார்.

இலங்கை வருவதற்கு திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா ஆர்வம்-

talai lamaஇலங்கைக்கு வருகை தந்து சிறீதலதா மாளிகை மற்றும் மஹா போதி ஆகியவற்றை தரிசிக்க வேண்டும் என்பதே தனது பிரார்த்தனை என, திபெத்திய ஆண்மீகத் தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை பௌத்த துறவிகளிடையே டெல்லியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை தலாய்லாமாவை பௌத்த யாத்திரீகர் என்ற வகையில் இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய இராஜதந்திரி பந்துல ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இங்கிருக்கும் காலத்தில் அரசியல் பேசக்கூடாது என்ற உறுதியான நிபந்தனையுடனேயே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு நபருக்கும் அவரது மதத் தலங்களில் வழிபாடு செய்ய முடியும் எனச் சுட்டிக்காட்டிய பந்துல ஜயசேகர, இதன்படி தலாய்லாமாவுக்கும் பௌத்த துறவி என்ற அடிப்படையில் கண்டி மற்றும் அனுராதபுரத்திலுள்ள பௌத்த மதத் தலங்களை வழிபட முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பதவியுயர்வு-

sarath fonsekaமுன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பீல்ட் மார்ஷல் தரத்துக்கு இன்று 22ஆம் திகதி பதவி உயர்த்தப்படவுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் மற்றும் முப்படை பிரதானிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜெனரல் சரத் பொன்சேகா, பீல்ட் மார்ஷல் தரத்துக்கு பதவியுயர்த்தப்படவுள்ளார். உலகில் இராணுவ அதிகாரி ஒருவரின் மிக உயர்ந்த பதவியாக பீல்ட் மார்ஷல் காணப்படுகின்றது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட சில நாடுகளில் மாத்திரமே இந்த பதவி காணப்படுவதுடன் இந்த பதவிக்கு தெரிவாகும் முதலாவது இலங்கையர் ஜெனரல் சரத் சரத்பொன்சேகா என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் உருவாக்கப்படும்-அமைச்சர் ராஜித-

rajithaஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது வரையும் எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று முதற் தடவையாக அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அமைச்சரவையிலும் இணைந்துகொள்ளவுள்ளனர், இதனூடாக தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் 54 பேர் கைது-

indian fishermen arrestஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 54 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் ஆகிய கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் ஐந்து படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 21 மீனவர்களும், தலைமன்னார் கடற்பரப்பில் ஐந்து படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 33 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இன்று கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரின் இடமாற்றங்கள் இரத்து-

police ...பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்களை இன்றுமுதல் (22.03.2015) அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளடங்கிய குழு தீர்மானங்களை எடுக்கவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

பஸ் விபத்தில் 20 பேர் காயம்-

accidentஅநுராதபுரம் – தந்திரிமலை பிரதான வீதியில் குப்பிடியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்திரிமலை நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸ_ம் அநுராதபுரத்திலிருந்து வந்த பஸ்ஸ_ம் நேருக்குநேர் மோதி இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள், ஹெலாபத்துவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அதில் 19பேர் வரை மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.