Header image alt text

நேபாள நிலச்சரிவின் உயிரிழப்பு 1950ஐயும் கடந்தது-

nepal nepalஆயிரத்து 950ற்கும் மேற்பட்டவர்களை காவுகொண்ட நேபாள பூமி அதிர்வையடுத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 80 வருட கால இடைவெளிக்குப் பின்னர் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை அனர்த்தம் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளன. இதிலிருந்து நேபாள மக்களை வளமை நிலைக்கு கொண்டு வருவதற்கான உதவி மற்றும் ஒத்தாசைகளை வழங்க பல நாடுகள் முன்வந்துள்ளன. இடிபாடுகளுக்கு இடையே இருந்து மேலும் சடலங்கள் மீட்கப்படுவதன் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நில அதிர்வு காரணமாக இமயமலை சாரலில் உள்ள மக்கள் குடியிருப்புக்களை சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1934ஆம் ஆண்டு நேபாளத்தை தாக்கிய நில அதிர்வின் போது, எட்டாயிரத்து 500 பேர் வரை பலியாகியமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை நேபாளத்தில் மீண்டும் 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நேபாளம் தெற்கு கோடாரி எனுமிடத்திலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் 19ம் திருத்தத்துக்கு எதிர்ப்பு-

tna (4)19ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் இந்த கோரிக்கையை கட்சித் தலைமையிடம் முன்வைத்துள்ளனர். தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கம் கொண்டுவரும் திருத்தச் சட்டத்தை ஆதரிக்காது, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிக்க வேண்டும் என இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

முழு தலைகவசம் மீதான தடைக்கு எதிராக போராட்டம்-

helmetமுழுமுகத்தை மூடும் தலைகவசம் அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டத்துக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கண்டி கெட்டம்மே விளையாட்டு மைதானத்தில் இருந்து உந்துருளிகளில் பேரணியாக சென்ற உந்துருளி உரிமையாளர்கள், இந்த போராட்டத்தை நடத்தினர். அவர்கள் முழுமையாக தலைகவசத்தை அணிந்தவாரே இப்போரட்டத்தை நடத்தியிருந்தனர். கடந்த 2ம் திகதி இந்த சட்டம் அமுலாக்கப்பட்டது. எனினும் இந்த சட்டத்துக்கு எதிராக இரண்டு உந்துருளி சாரதிகள் முன்வைத்த மனுவின் அடிப்படையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த சட்டத்திக்கு நாளை மறுதினம் வரையில் இடைக்கால தடை உத்தரவை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு முன்னர் கொழும்பிலும் இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை – அனந்தி சசிதரன்-

ananthiஇலங்கை அரசாங்கத்தின் மீது இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும், தமிழ் மக்களுக்கான குறிப்பிடத்தக்க நன்மைகளை அவதானிக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். போதுமான அளவு காணிகள் விடுவிக்கப்படவில்லை. அரசியல் கைதிகளை விடுவிக்க சற்றேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் புதிய அரசாங்கத்தின் மீது தமக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்-

indian armyஇந்திய இராணுவ தளபதி ஜெனரல் தல்பீர் சிங், நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இராணுவ தளபதி லுத்தினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் அழைப்பின் பேரில், இந்திய இராணுவ தளபதி மற்றும் ஐந்துபேர் கொண்ட குழு இலங்கை வருகின்றது. இலங்கை – இந்தியாவுக்கிடையிலான சகோதரத்துவம் மற்றும் ஒத்துழைப்புகளை மேலும் விரிவாக்கும் வகையில் தல்பீர் சிங்கின் விஜயம் அமையவுள்ளது. இந்த விஜயத்தின்போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ராஜாங்க பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இலங்கைக்கான இந்திய தூதுவர், பீல்ட மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு படைகளின் பிரதானி, விமான மற்றும் கடற்படை தளபதி ஆகியோரை சந்திக்கவுள்ளார். இதனையடுத்து, நாடு முழுவதுமுள்ள பாதுகாப்பு படைகளின் மத்திய நிலையங்கள் சிலவற்றுக்கு அவர் விஜயம் செய்யவுள்ளதுடன் கண்டி, காலி, அநுராதபுரம் பகுதிகளுக்கும் செல்லவுள்ளார்.

நேபாளத்திலிருந்து 35 இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு-

gihan seniviretneநேபாளத்திலிருந்து நாடு திரும்புவதற்கு 35 இலங்கையர்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்களை இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விமானப்படை ஊடக நிறைவேற்று அதிகாரி வின்ங் கொமாண்டர் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஊடகமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, இதனை அவர் கூறியுள்ளார். நாடு திரும்ப விரும்பும் 35 இலங்கையர்களும் அங்குள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். நோபாளத்தில் நேற்று இடம்பெற்ற பூமியதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம், வைத்தியர்கள் மற்றும் முப்படை வீரர்கள் அடங்கிய குழுவுடன் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜே.வி.வி சந்திப்பு-

maithripala3மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை இந்த சந்திப்பு நடைபெற்றதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 19வது திருத்தச் சட்டம் மற்றும் எதிர்வரும் காலங்களில் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக டில்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொது மன்னிப்பு வழங்கியும் சிறையில் வாடும் உதயசிறி-

uthayasiriஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியும் இதுவரை எனது மகள் உதயசிறி விடுதலை செய்யப்படாதது பெரும் கவலையளிக்கின்றது என, சிகிரியா மலையில் எழுதிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் மட்டக்களப்பு – சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறியின் தாய் எஸ்.தவமணி தெரிவித்துள்ளார். சிகிரியா மலையில் எழுதிய குற்றத்திற்காக அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் உதயசிறியை அவரது தாய் தவமணி கடந்த வியாழக்கிழமை சென்று பார்த்தார். இதன்போது தன்னை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என மகள் உதயசிறி தன்னிடம் மன்றாடியதாகவும் தாய் தவமணி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி எனது மகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாக கூறியும் இதுவரை உதயசிறி விடுதலை பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக எந்தவொரு அறிவித்தலும் அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் வரவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்ததாக தாய் தவமணி மேலும் கூறியுள்ளார்.

சி.பி.ரட்னாயக்க மீண்டும் மஹிந்தவுக்கு ஆதரவு-

ratnaikeபொதுநிர்வாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரட்னாயக்க, நேற்று நுவரெலியாவில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்றுள்ளார். முன்னர் அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கினார். பின்னர் தேசிய அரசாங்கத்தின் கீழ் கடந்த மார்ச் மாதத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் புதிய அரசாங்க அமைச்சரவையில் இணைந்து கொண்டார். அதற்கு பின்னர் அவர் மஹிந்தவுக்கு ஆதரவாக முக்கிய நிகழ்வுகள் எதிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நேற்று அவர் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை நுவரெலியாவில் வைத்து வரவேற்றுள்ளார்.

யாழ். வடமராட்சியில் ஒருவர் கொலை-

murderயாழ். வடமராட்சி பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் அல்வாய் வடக்கு நக்கீரன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான செந்தூரன் (வயது44) பொல்லால் கடுமையாக தாக்கியதையடுத்து உயிரிழந்துள்ளார். மேலும் தாக்கப்பட்டவரை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்துள்ளார். சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும், இரு தரப்பினர்களுக்கிடையே நிலவிய நீண்டகால பகையே இக்கொலைக்காண காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

நேபாள நிலநடுக்கத்தில் 1805 பேர் வரை பலி-

nepal nepalநேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக 1805க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது. இதன் பாதிப்பு இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை உதவிக் குழுவை ஏற்றிக் கொண்டு இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானம் இன்று காலை காத்மண்டு நோக்கி புறப்பட்டுள்ளது. இதில் நான்கு வைத்தியர்கள் மற்றும் 46 மீட்புப் படையினரும் உள்ளடங்கியுள்ளனர். 

நேபாளத்திலுள்ள இலங்கையர்கள் பற்றி அறிந்து கொள்ள தொலைபேசி-

6766767நேபாளத்திலுள்ள இலங்கையர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 009779851020057 என்ற இலக்கமே நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவர் அலுவலகத்தால் வௌியிடப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள மக்களுக்கு உதவ விரும்பும் சுகாதார பணியாளர்களுக்கு அழைப்பு

nepal helpநேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்பும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களைத் தொடர்பு கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு உதவ விரும்புபவர்கள் 071- 24 92 484 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று நேபாள ஜனாதிபதி ராம் பெரன் யாதவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை ஜனாதிபதி மற்றும் மக்களின் இரங்களை தெரிவித்தார். மேலும் இந்த துயரமான தருணத்தில் நோபளத்துடன் இலங்கை இணைந்திருக்கும் எனவும், இலங்கையால் முடிந்த உதவிகளை நேபாள மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ரணில் விக்ரமசிங்க நேற்று நேபாளப் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய வேளை, அந்த நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் தேவை என தெரியவந்துள்ளது. இதன்படி சேவையை வழங்க விரும்பும் சுகாதாரத் தொண்டர்கள் 071- 24 92 484 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கொம்மாதுறையில் மோட்டார் குண்டு மீட்பு-

motor shellமட்டக்களப்பு, ஏறாவூர், கொம்மாதுறை படை முகாமுக்கு அருகிலிருந்து இன்றுபகல் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி முகாமுக்கு அருகிலுள்ள சித்தி விநாயகர் வித்தியாலய விளையாட்டுத் திடலைச் சூழவுள்ள முட்கம்பி வேலிப் பற்றைக்குள்ளேயே இந்த மோட்டார் ஷெல் காணப்பட்டுள்ளது. ஷெல் காணப்படுவதாக தங்களுக்கு கிடைத்த தகவலின்படி உடனடியாக ஸ்தலத்துக்குச் சென்று மோட்டார் குண்டை மீட்கும் பணியில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். குண்டு செயலிழக்கச் செய்யும் படை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இந்த மோட்டார் ஷெல் மீட்கப்பட்டது. குண்டு செயலிழக்கச் செய்யும் படையினர் ஷெல்லை மீட்டு, பாதுகாப்பாக செயலிழக்கச் செய்வதற்காக அங்கிருந்து கும்புறுமூலை படை முகாமுக்கு எடுத்துச் சென்றனர். இது விடயமாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நேபாளத்தல் 7.9 ரிச்டர் அளவில் நில நடுக்கம்-

nepal quakeநேபாளத்தில் ஏற்பட்ட 7.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். நேபாள தலைநகரான காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில் 7.9 ரிச்டர் அளவிவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆறு மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம். டெல்லி, சிக்கிம், லக்னோ, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது. டெல்லி புறநகர் பகுதியான நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 வினாடிகள் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் 400ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகின்றது.

கூரையிலிருந்து ரீ56 ரக துப்பாக்கி மீட்பு-

roofகல்முனை நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்தின் உட்கூரைக்குள் இருந்து ரீ56 ரக துப்பாக்கி ஒன்றை, இன்றுகாலை மீட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலைக் கூரையின் உடைந்த ஓடுகளைச் சீர்செய்யும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டிருந்த பொழுது மேற்படி துப்பாக்கி கூரைக்குள் கிடப்பதை தச்சன் தனக்குத் தெரியப்படுத்தியதாக பாடசாலை அதிபர் எஸ். சபாரெத்தினம் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக இவ்விடயம் கல்முனைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கியை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட துப்பாக்கி பழைமைபட்டுப் போயிருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், இது பற்றி மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க க்ரீன்கார்ட் லோட்டரியை பயன்படுத்தி மோசடி-

grren cardஅமெரிக்காவினால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற க்ரீன்காட் லோட்டரி சீட்டிழுப்பை பயன்படுத்தி, மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்தின் சிரேஷ்ட்ட தொடர்பாடல் அதிகரி செலி ஸ்ரேன் இதனை தெரிவித்தார். இந்த சீட்டிழுப்பில் வெற்றிபெற்றதாக கூறி, சிலர் போலியான முறையில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டும், மின்னஞ்சல்களை அனுப்பியும் நிதி மோசடியில் ஈடுபடுகின்றனர். எனினும் இந்த சீட்டிழுப்பில் வெற்றிப்பெற்றுள்ளமை குறித்து றறற.னஎடழவவநசல.ளவயவந.பழஎ என்ற அமெரிக்காவின் க்ரீன்காட் சீட்டிழுப்புக்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மாத்திரமே தெரிந்துக் கொள்ள முடியும். இந்த இணைத்தளத்தை தவிர மாற்று வழிகள் எவையும் இல்லை. எனவே இதனை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்குமாறு அவர் எச்சரித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சு ஒத்துழைக்கவில்லை-ஆணைக்குழு-

missingமுன்னாள் பாதுகாப்பு அமைச்சும், நீதி அமைச்சும் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பில் முறைபாடுகளை பதிவு செய்துவரும் பரணகம ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. காணாமல் போனோர் குறித்த விசாரணையின்போது, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், அகதிகளாக சென்றவர்கள் போன்றவர்களின் தகவல்கள் கோரப்பட்டிருந்தது. எனினும் அது குறித்த தகவல்களை வழங்க இரு அமைச்சுக்களும் தவறியுள்ளதாக அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை வடமாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட முறைபாடுகளில் 60 சதவீதமானவை புலிகளுக்கு எதிரானவை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரகாசமான மாற்றம்-

ban ki moonஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், பிரகாசமான அலையை ஏற்படுத்தி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமனம் பெற்றுள்ள கலாநிதி ரொஹன் பெரேராவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது பான் கீ மூன் இதனைக் கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடனும் ஏனைய சர்வதேச நாடுகளுடன் நல்லுறவை பேணி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இலங்கையின் முக்கிய செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் பான் கீ மூன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்-

aarpattam (2)கிளிநொச்சி மாவட்டதில் இன்று அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இருந்தனர். குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் ஏற்கனவே 300 பேரை ஆட்குறைப்பு செய்திருந்ததாகவும் தற்போது மேலும் 400 பேரை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.

400 இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை-

dual citizenவெளிநாட்டிலுள்ள 400 இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு பொது அமைதிக்கான அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 30ம் திகதி அவர்களுக்கான இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இரட்டை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு மேலும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விசேட குழுவொன்றின் மூலம் குறித்த விண்ணப்பங்கள் பரீசீலிக்கப்படுவதாகவும் பொது அமைதிக்கான அமைச்சர் ஜோன் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்

யாழில் மலசலகூடத்தில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு-

bambயாழ். விக்டோரியா வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து பழைய வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் மலசல கூடத்தினை துப்பரவு செய்யும் போது, பழைய வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டு வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அந்த தகவலின் பிரகாரம் படையினர் விரைந்து வந்து இதனை மீட்டுள்ளனர்.

சித்தன்கேணி தாவளை சைவத்தமிழ் பாடசாலை, வருடாந்த விளையாட்டு விழா-

565656555யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணியில் அமைந்துள்ள தாவளை சைவத்தழிழ் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது இவ் நிகழ்வு குறித்த பாடசாலையின் அதிபர் வ.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். முன்னதாக இவ் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்ட வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் உத்தியோகபூர்வமாக விளையாட்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இவ் நிகழ்வின் இறுதியில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் உரையாற்றுகையில் இன்று பல சிறிய பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் மிக முக்கியளமானதாக அமைவது விளையாட்டு மைதானம் அற்ற நிலை ஆகும் இவ் விடயம் தொடாடபில் குறித்த அதிகாரிகள் ஊடாக அமைச்சுக்கு அறிவிப்பது மிக முக்கியமானது ஆகும் தற்போது பதவி ஏற்றுள்ள புதிய அரசின் 100 நாள் திட்டத்தினுள் இவ் விடயங்கள் அடங்கபட முடியும். இவ் விளையாட்டு என்பது மாணவர்கட்கு மிக இன்றி அமையாத ஒன்றாகவே உள்ளது. முழுமையாக கல்வி என்பது விளையாட்டுடன் கூடிய ஒன்றாகவே அமைய வேண்டும். வெறுமனே புத்தக கல்வி என்பது ஏற்றுக் கொள்ள முடியரது ஓன்றாகும். விளையாட்டு நிகழ்வுகளின்போது மாணவர்கள் பல விடயங்களையும் பெறக்கூடிய நிலை ஏற்படும் இதன் வாயிலாக பல அனுபவங்கள் மற்றும் தேர்ச்சிகளை மாணவர்கள் அடைய முடியும் இவ் பாடசாலை எமது பிரதேசத்தின் பழம் பெரும் பாடசாலை ஆகும் இவ் பாடசாலையில் நவாலியூர் சோம சுந்தரப் புலவர் கற்பித்தாக கூறப்படுகின்றது இவ் மகிமையாலேயே இவ் படசாலைக்கு எமது வட மாகாண கல்வி அமைச்சரை அழைத்துவந்து பாடசாலையைக் காண்பித்தேன் உதவுவதாக உறுதியளித்துளளார். என்னால் இயன்றவரை இவ் பாடசாலையின் வளர்ச்சிக்கான உதவிகளை வழங்குவதற்க தயாராக உள்ளேன். இப் பாடசாலைக்கு முன் பகுதியால் செல்லும் வீதி தொடர்பில் இவ் பகுதி மக்கள் பலரம் கூறியுள்ளனர் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்

20ஆவது திருத்தம் தமிழ், முஸ்லிம், மலையக தமிழ் பிரதிநிதித்துவக் குறைபாட்டை நீக்குவதாக அமைய வேண்டுமென வலியுறுத்தல்-
kumaranகொண்டுவரப்படருக்கும் 20ஆவது திருத்தம் ஒரு முக்கிய விடயம் என்பதால் இந்தத் திருத்தம் தற்போது இருக்கின்ற தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழர் பிரதிநிதித்துவக் குறைபாட்டை நீக்குவதாக அமையவேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொது செயலாளருமான சுசில் பிறேம ஜெயந்தை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து வலியுருத்தியுள்ளனர்.

Read more

யாழ்.மாவட்ட எம்.பிக்கள் 11ஆக அதிகரிப்பு-

rajithaசிறுபான்மைக் கட்சிகளின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும் வகையில் தேர்தல் முறைமையை மாற்ற யோசனை ஒன்று தேசிய நிறைவேற்றுச் சபையில் நேற்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்தவொரு தரப்பும் எதிர்ப்பை வெளியிடவில்லை என்றும், தமது கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தன என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தேசிய நிறைவேற்றுச் சபையில் ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினர் வண. அத்துரெலிய ரட்ண தேரரால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய யோசனையின் பிரகாரம், 225ஆக இருக்கும் எம்.பிக்களின் எண்ணிக்கையை 238ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்போதுள்ள தேர்தல் முறைமையில் மாற்றம் எதுவும் ஏற்படாது. தேர்தல் தொகுதிகளும் அப்படியே இருக்கும் .சகல தேர்தல் தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், பல்லின தேர்தல் தொகுதிகளுக்குமான உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். யாழ் தேர்தல் மாவட்டத்தில் 11 தேர்தல் தொகுதிகள் இருக்கின்றன. எனினும், அங்கு 9 எம்.பிக்களே இருக்கின்றனர். எனவே, 11 தொகுதிகளுக்கு 11 எம்.பிக்கள் என்று எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கண்டி மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகள் இருக்கின்ற நிலையில், 12 எம்.பிக்களே இருக்கின்றனர். அங்கு தொகுதிக்கு ஒரு உறுப்பினர் பிரதிநிதித்துவம் வரும் வகையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிக்கப்படும். பல்லின தேர்தல் தொகுதிகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை 8ஆல் அதிகரிக்கப்படும். இதன்மூலம் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரிக்கும். இந்த உத்தேச திட்டத்தின் மூலம் சிறுபான்மைக் கட்சிகளின் தற்போதைய பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும். தேசிய நிறைவேற்றுச் சபையில் முன்வைக்கப்பட்ட உத்தேச தேர்தல் முறைமை மாற்ற யோசனைக்கு அதில் அங்கம் வகிக்கும் எந்தவொரு கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் காலவரையறையின்றி நீடிப்பு-

Janathipathi anaikulu (2)அரச பதவி வகிப்போர் மற்றும் அரசியல் பதவிநிலையில் இருப்போர் மேற்கொண்ட அல்லது மேற்கொள்கின்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம், காலவரையறையின்றி நீடிக்கப்பட்டுள்ளது. அரசியல் பதவி வகித்த அல்லது வகித்துக் கொண்டிருக்கின்றவர்கள், அரசாங்க ஊழியர்கள் மற்றும் நியதிச் சட்டசபைகளில் சேவையாற்றுபவர்கள் அல்லது சேவையாற்றிக் கொண்டுள்ளவர்களின் மோசடிகள், ஊழல்கள், குற்றவியல் நம்பிக்கை மீறல்கள், சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகளை மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முன்வைக்க முடியும் என அவ்வாணைக்குழுவின் செயலாளர் லெசில் டீசில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதால் அரசாங்கத்துக்கு ஏற்படுத்தப்படும் நட்டங்கள் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளையும் மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இக்குற்றங்களைச் செய்யும் மேற்படி நபர்கள் தொடர்பான முறைப்பாடுகளைச் செய்வதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம், இம்மாதம் 10ஆம் திகதியுடன் நிறைவு பெற்றதால், அதற்கான காலத்தை வரையறையின்றி நீடிக்க மேற்படி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த முறைப்பாடுகளை பதிவுசெய்யப்பட்ட தபாலில், ஆணைக்குழுவின் செயலாளர், 5ஆவது தொகுதி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு-7 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத களஞ்சியசாலையை அப்புறப்படுத்த உத்தரவு-

maithripala3ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வந்த ஆயுத களஞ்சியத்தை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலிருந்து அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனுக்கு உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ பணியாற்றிய காலகட்டத்தில், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆயுத களஞ்சியம் ஒன்றை வைத்திருக்க, ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியிருந்தார். இந்த ஆயுத களஞ்சியம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்பதால், அதனை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த ஆயுத களஞ்சியத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தானியங்கி துப்பாக்கிகள் களஞ்சியப்படுத்தப்பட்டு இருந்ததுடன் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இந்த ஆயுத களஞ்சியம் தொடர்பான தகவல் நாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் பாரதூரமான நிதி மோசடிகள் குறித்து தற்போது விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளின் அடிப்படையில் அடுத்த சில நாட்களின் ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கைது செய்யப்படவிருப்பதாக பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிதக்கின்றன.

அர்ஜுன் மஹேந்திரனை பதவி விலக்குமாறு மகஜர்:

arjuna mahendranஇலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை பதவி விலக்குமாறு கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெப்பமிட்ட மகஜர், சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, திறைசேரியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பில் நிதியமைச்சின் செயலாளரும் மத்திய வங்கியின் ஆளுநருமான அர்ஜுன் மஹேந்திரனுக்கு நேரடியான தொடர்பேதும் இல்லை என்று மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த பொருளாதார நிபுணரான அர்ஜுன் மஹேந்திரன், இவ்விரு பதவிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளராக பதவிவகித்த கலாநிதி பி.பீ ஜயசுந்தர, மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் அப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கே இவர், நியமிக்கப்பட்டார். சட்டவிரோதமான முறையில் திறைசேரி பிணை முறி பத்திரங்களை அர்ஜுன் மஹேந்திரன் வழங்கியுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற ஜே.வி.பி போராட்டம்-

JVPஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாளை (இன்று -24) முதல் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அறிவித்துள்ளது. 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டம், தேசிய நிறைவேற்று சபை உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் தமது கட்சி பங்களிப்பை வழங்கி இருக்கிறது. எனினும், தற்போதைய நிலையில் அதனை நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டு வருகிறது’ என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எனவே, அரசாங்கத்துக்கு எதிராக விசேடமாக ஜனாதிபதி மற்றும் 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆட்சேபிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் குழுவினருக்கு எதிராக கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தவுள்ளதாக அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறினார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தாமதப்படுத்தப்பட்டமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டீ சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தலையீடு உள்ளது என்றும் அவர் இதன்போது குற்றஞ்சாட்டினார். எதிர்வரும் 27ம், 28ம் திகதிகளில் இந்த சட்டமூலம் தொடர்பில் விவாதம் நடத்தி அதனை நிறைவேற்றவில்லையாயின், அதன்பின் அதனை நிறைவேற்றுவதென்பது முடியாத காரியமாகிவிடும் என்றும் திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

புதிய தேர்தல் முறை, எம்.பிக்கள் எண்ணிக்கை விடயத்தில் குழப்பம்-

election boxபுதிய தேர்தல் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகரிக்கப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது நாடாளுமன்றத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். புதிய தேர்தல் முறைமையின் படி, யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 11ஆகவும், கண்டியில் இருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரிக்கப்படவுள்ளது. அதேநேரம் சில பிரதேசங்களில் சில தொகுதிகளில் இரட்டை ஆசன முறைமையில் எட்டு உறுப்பினர்களுக்கு மேலதிகமாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இவற்றின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 238ஆக அதிகரிக்கவுள்ளது. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

டயகமையில் ஏற்பட்ட வெள்ளத்தால் 126 பேர் இடம்பெயர்வு-

dayagamaநுவரெலியா, டயகம வௌர்லி தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 126பேர் இடம்பெயர்ந்துள்ளனர். வேவர்லி தோட்டத்தில் நேற்றுமாலை பெய்த கடும் மழையால் ஆறொன்று பெருக்கெடுத்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைய நுவரெலியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.எச்.எம் மஞ்சுல தெரிவிக்கின்றார். 27 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் வௌர்லி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை தோட்ட முகாமைத்துவமும், இடர் முகாமைத்துவ மத்திய நிலையமும் இணைந்து வழங்கி வருகின்றன. மழைக் காலங்களில் ஆறு பெருக்கெடுப்பதால் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக டயகம வௌர்லி தோட்ட மக்கள் கூறியுள்ளனர் இதேவேளை, இன்றுகாலை 8.30 உடன் முடிவடைந்த கடந்த 24மணித்தியாலங்களில் அதிகூடிய மழை வீழ்ச்சி நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அத்தோடு இன்றுமாலை வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

திருடர்களை பாதுகாக்கும் பாராளுமன்றம் அவசியமில்லை-பிரதமர் ரணில்-

ranil01லஞ்சம் மற்றும் ஊழல் மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலையான அரசாங்கம் ஒன்றுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். திருடர்களை பாதுகாக்கும் பாராளுமன்றம் அவசியம் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு செல்ல மறுப்பது ஏன் என தெரியவில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அன்று ஆகாயத்தில் பறந்தவர்கள் பாராளுமன்றில் ஒருநாள் இரவு தரையில் உறங்கும் அளவிற்கு நல்லாட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். மக்கள் பெற்ற வெற்றியை கொள்ளையடிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என அவர் கூறினார். அடுத்த தேர்தலில் ராஜபக்ஷக்களை விரட்டி புது பாராளுமன்றம் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறியோர் கைதாவர்-பொலிஸ்-

police ...நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவையும் மீறி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்னால் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்கிய அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்வதற்காக மேற்படி ஆணைக்குழு விடுத்திருந்த அழைப்பின் பேரில், அவர் நேற்று அங்கு சென்றிருந்தபோதே அவருக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பொது பல சேனா அமைப்பு மற்றும் இராவணா சக்தி என்ற பௌத்த பிக்குமார்களின் அமைப்புக்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்திருந்தன. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, டலஸ் அலஹப்பெரும, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால முன்னாள் ஜனாதிபதி சந்திப்பு இரத்து-

Mahinda-Maithri-03ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் நடைபெறுவதற்கு திட்டமிட்டிருந்த பேச்சுவார்த்தை இரத்துசெய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேலைப்பளு காரணமாகவே இந்த சந்திப்பு இராஜினாமா செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விருவருக்கும் இடையிலான சந்திப்புக்கு நானே ஏற்பாட்டாளராக இருந்தேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாளை 25ஆம் திகதி இரவு 7 மணிக்கு சந்திப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார். எனினும், மகிந்த ராஜபக்ஷவின் வேலைப்பளு காரணமாக அவரால் சந்திக்க முடியாது என்றும் குமார் வெல்கம எம்.பி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வரவேண்டாம் என்று கூறியும்; வந்தார்-மகிந்த ராஜபக்ச-

mahinda_rajapakseஎனது சகோதரர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருக்கும் போது, அவரைத் தொடர்புகொண்டு நான் கதைத்தேன். அப்போது, இலங்கைக்கு மீண்டும் வர வேண்டாம், அவ்வாறு வந்தால் கைது செய்வார்கள் என்று நான் அறிவுறை கூறினேன்’ என்று முன்னாள் ஜனாதிபதியும் பசில் ராஜபக்ஷவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இருப்பினும், ‘நான் களவு செய்யவில்லை. நான் வராமளிருப்பது மஹிந்த அண்ணான உங்களுக்கு அவமானம். அதனால் நான் இலங்கைக்கு வருவேன்’ என்று அவர் எனக்கு பதிலளித்தார். ஆனால், நான் அவரிடம் சொன்னது போலவே நடந்தேறிவிட்டது’ என்று மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார். ‘இருப்பினும் பரவாயில்லை. நானும் 3 மாதங்கள் சிறையில் இருந்தவன் தான். நாடாளுமன்ற உறுப்பினரொருவர் ஓரிரு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்தால் தவறில்லை’ என்றும் மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரன் தொடர்பில், மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்திருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அனைத்து நகரங்களுக்கும் வழிப்பாதைச் சட்டம் வருகின்றது-

policeநாட்டின் அனைத்து நகரங்களிலும் வழிப்பாதைச் சட்டத்தை அமுல்படுத்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு அவதானம் செலுத்தி வருகின்றது. இது தொடர்பான போக்குவரத்து முகாமைத்துவம் குறித்த கூட்டமொன்று பொது ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் பத்தரமுல்லையில் நேற்று நடத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக கொழும்பு நகரில், மேற்படி வழிப்பாதைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில் அது வெற்றியளித்துள்ளதை அடுத்தே அச்சட்டத்தை நாட்டின் ஏனைய நகரங்களிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ரொஹன் பெரேரா பத்திரங்கள் ஒப்படைப்பு-

rohan pereiraஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் புதிய வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ரொஹன் பெரேரா, நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் தமது தகுதிப் பத்திரங்களை ஒப்படைத்துள்ளார். கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் அவர் இந்த பத்திரங்களை கையளித்ததாக, நியுயோர்க்கில் உள்ள இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியின் காரியாலயம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் அவர்களுக்கு இடையில் சுமூக பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றிருந்தது. இதன்போது இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து இரண்டு தரப்பும் ஆழமாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன – இலங்கை உறவில் பாதிப்பில்லை – சீன தூதுவர்-

sri lanka chinaஇலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீனாவின் தூதுவர் ஈ சியங்லியாங், சீனாவின் சின்ஹ{வா ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் வரலாற்று காலம் தொட்டு நல்லுறவு காணப்படுகிறது. புதிய அரசாங்கத்தின் கீழ் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர ஒத்துழைப்பு உறவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பல இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு எதிர்காலத்திலும் மேலோங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டைப்பற்றி சிந்தித்து 19க்கு கை உயர்த்துங்கள்-ஜனாதிபதி-

maithiriஜனநாயகத்தையும் மக்களுக்கான சுதந்திரத்தையும் எதிர்காலத்திலும் பாதுகாப்பதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். நூறு நாட்கள் திட்டத்தின் நிறைவு நாளான நேற்று இரவு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். Read more

நூறு நாள் வேலைத்திட்டம்! தமிழ் மக்கள் திருப்திப்படக் கூடிய வகையில் எதுவுமே நடைபெறவில்லை-

sithadthanஆட்சிக்கு வந்த புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்டம் முடிவடையவுள்ள நிலையில் தமிழ் மக்கள் திருப்திப்படக் கூடிய வகையில் எதுவுமே நடைபெறவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் புளொட் தலைவருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் நூறுநாள் வேலைத் திட்டம் தொடர்பில் ஊடகவியியலாளர்கள் யாழ் செயலகத்தில் வைத்து சித்தார்த்தன் அவர்களிடம் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் இணைந்து ஆட்சி மாற்றத்தை வேண்டி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து புதிய ஆட்சியமைக்க பெரும் உதவியாக இருந்துள்ளனர். குறிப்பாக கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளின் வெளிப்பாடாகவே மக்கள் மாற்றத்தை வேண்டியிருந்தனர். இதனை ஜனாதிபதித் தேர்தலிலும் வெளிப்படுத்தி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்தனர். இதனால் புதிய ஆட்சியொன்றும் அமைக்கப்பட்டது. அத்தோடு பல்வேறு நம்பிக்கைகளின் அடிப்படையில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியிலேயே தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்திருந்தனர். இந்நிலையில், ஆட்சியமைத்த புதிய அரசும் நூறுநாள் திட்டம் என்று கூறி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. இதில் தென்னிலங்கை மக்களுக்கு அரசாங்கம் பலதைச் செய்திருந்தாலும் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதனையுமே செய்யவில்லை. Read more

வலி மேற்கு பிரதேச செயலகத்தினால் நூல் வெளியீடு-

rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrவலி மேற்கு பிரதேச செயலகத்தினால் பனுவல் எனத் தலைப்பிடப்பட்ட பிரதேச நூல் வலி மேற்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் திரு அ.சோதிநாதன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வட மகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் மறறும் கலாச்சார அமைச்சர் கௌரவ. குருகுலராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துக் கொண்டார். இவ் நிகழவில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கல்வி அமைச்சரின் பிரதேச வருகையின் பொருட்டு சம்பிருதாயபூர்வமாக நிகழ்வில் கலந்து சிறப்பித்துக் கொண்டார்.

அர்ஜுன மகேந்திரன் மீண்டும் பணியில்-

arjuna mahendranசுமார் 5 வருட கால விடுப்புக்குப் பின்னர் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மீண்டும் அலுவலகம் சென்று கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர்மீது குற்றம் சுமத்தப்பட்டதன் பின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அர்ஜுன மகேந்திரன் விடுப்பில் சென்றிருந்தார். விசாரணையில் மத்திய வங்கி ஆளுநர் பிணை முறி மோசடியில் நேரடி தொடர்புபடவில்லை என பிரதமர் நியமித்த விசாரணை குழு அறிவித்தது. இந்த நிலையில் அர்ஜுன மகேந்திரன் மீண்டும் அலுவலகம் திரும்பியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மீன்பிடித்தலில் புதிய சட்டத் திருத்தம் அறிமுகம்-

tna (4)இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி இழுவை படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இது தொடர்பான தனிநபர் சட்டமூலத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றில் சமர்பித்துள்ளார். இந்த சட்டமூலத்தின் பிரகாரம் இலங்கை கடற்பரப்பில் இழுவை படகு பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படவுள்ளது. அடுத்த வாரம் அளவில் இந்த சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு பாராளுமன்றில் விவாதத்திற்கு வரும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பசில் வேண்டுகோள்-

basilமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தன்னை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மே மாதம் 5ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ, சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தன்னை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு அதிகாரசபையை அவர் கோரியுள்ளார். எனினும், சிறைச்சாலை வைத்தியர், பசிலை சோதனை செய்த பின்னரே அவரது கோரிக்கை ஏற்கப்படுமென தெரியவருகின்றது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுடன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க ஆகியோரும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்குமூலம் வழங்க கோத்தபயவுக்கு கால அவகாசம்-

gotabaya......கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் வாக்குமூலத்தை வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆணைக்குழுவின முன்னால் பிரசன்னமாகி இருந்தார். இதன்போது அவர் விசாரணைக்கு உட்படுத்துப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று தடையுத்தரவை பிறப்பித்திருந்த நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்ஷ இன்று வாக்குமூலம் வழங்கியிருக்கவில்லை. தம்மை விசாரிப்பதற்காக அழைக்கப்பட்ட விடயம் பழைய விடயம் என்பதால், அது குறித்து ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், மேலும் கால அவகாசம் வழங்குமாறு ஆணைக்குழுவிடம் அவரின் சட்டத்தரணிகள் கோரினர். இதனை ஆணைக்குழு ஏற்றுக் கொண்டு கால அவகாசம் வழங்கியதைத் தொடர்ந்து அடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகின்றது.

பம்பலப்பிட்டியில் பெண் கொலை, சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்-

killedகொழும்பு, பம்பலபிட்டி சென்ற் பீட்டர்ஸ் கல்லூரியில் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சென்ற் பீட்டர்ஸ் கல்லூரியின் களஞ்சிய அறையொன்றிலிருந்து அங்கு பணியாற்றும் பெண் சிற்றூழியரின் சடலம் அண்மையில் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாடசாலையின் காவலாளியும், அப்பெண்ணை சந்திக்க வந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் அப்பெண்ணை சந்திக்கவந்த நபர் அவருடன் கள்ளத் தொடர்பை பேணி வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணின் அழைப்புக்கமையவே அந்நபர் சம்பவ தினத்தன்று அங்கு வந்துள்ளதாகவும், இதன்போது இடம்பெற்ற வாய்த்தர்கத்தில் அப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

திருகோணமலை நகரசபை ஊழியர்களின் போராட்டம்-

aarpattam (2)திருகோணமலை நகரசபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்களில் குளறுபடிகள் காணப்படுவதாக தெரிவித்து நகரசபையின் சுகாதார ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நகரசபை தலைவரால் தமது நியமனங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், பதவி உயர்வுகளில் குளறுபடிகள் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஊழியர்களின் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என திமலை நகரசபை தலைவர் க. செல்வராசா நேற்று கூறியிருந்தார்.

யாழ் மாவட்ட அபிவிருத்தி உதவியாளர்களின் ஒன்றியம் உதயம்-

8989898பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கும் திட்டத்தின் பிரகாரம் 2005ம் ஆண்டு அரச சேவைக்கு உள்ளீர்ப்பு செய்து நிவாரணம், புனர்வாழ்வளிப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் அபிவிருத்தி உதவியாளராக நியமனம் செய்யப்பட்டு பல்வேறு அமைச்சு மாறுதல்களின் மூலம் தேச நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, பொருளாதார அமைச்சு என மாறுதல்கள் பெற்று தற்போது வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் கீழ் கொள்கை திட்டமிடல் பிரிவுக்கு உள்வாக்கப்பட்டுள்ளோம் என்பதனைத் தங்களுக்குத் தயவுடன் அறியத்தருகின்றோம்.

எமக்கு நியமனங்கள் வழங்கப்பட்டு“10 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலைமையிலும்” சேவைப் பிரமாணங்கள் இயற்றப்படாத நிலையிலும் தற்போது யாழ் மாவட்டத்தில் 73 அபிவிருத்தி உதவியாளர்கள் உள்ள நிலையிலும் மாவட்ட பிரதேச செயலகங்களில் திட்டமிடல் கிளையில் மிகவும் பொறுப்புடன் இந்த மாவட்ட அபிவிருத்தி வேலைகளுக்கும் தேசிய ரீதியிலான வேலைத் திட்டங்களிலும் பெரும் பங்காற்றி வருகின்றோhம். Read more