Header image alt text

வலிமேற்கில் ஜேர்மன் புலம்பெயர் உறவுகளின் உதவித் திட்டங்கள்-

germanyயாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஜேர்மனி புலம்பெயர் உறவுகளின் உதவிகள் மற்றும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரின் உதவிகள் என்பன இடம்பெற்று வருகின்றன. கடந்தகால கொடிய போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு இவ் உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ் உதவித் திட்டத்தில் வலி மேற்கு பிரதேசத்தில் போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டில் புனரமைப்பு பணிகளை ஜேர்மன் புலம்பெயர் உறவுகள் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர் இணைந்து மேற்கொண்டபோது புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நேரடியாக சென்று பாhவையிட்டதுடன் ஜேர்மன் புலம்பெயர் உறவுகட்கும் நன்றி தெரிவித்தார். இவ் நிகழ்வின்போது வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ.த.சசிதரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

காணி உரிமையை உறுதி செய்ய புதிய சட்டத் திருத்தம்-

wijayadasa rajapakse30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது காணிகளை விட்டு இடம்பெயர்ந்துள்ள பிரஜைகளின் காணி உரிமையை உறுதிசெய்யும் நோக்கில் ஆட்சி உரிமை விசேட ஒழுங்குகள் சட்டமூலம் எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 1993 மே 1ம் திகதி தொடக்கம் 2009, மே 1ம்திகதி வரையான காலத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் காணி உரிமையை உறுதி செய்யும் நோக்கில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுவதாகவும் முன்னர் அக்காணியில் இருந்தவர்களுக்கு காணி சொந்தமாகும் என்ற திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள ஆட்சியுரிமை சட்டத்தின்படி 10 வருடங்களுக்கு குறையாமல் ஒரு காணியில் இருப்பவர்களுக்கே அக்காணி சொந்தம் என்ற சரத்தினால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அநீதி ஏற்படும் என்றும் அதனை தவிர்க்கவே விசேட திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் மத நல்லிணக்கத்திற்கான சர்வமத குழு வடக்கு கிழக்கு மக்களின் காணி உரிமையை உறுதிசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலி மேற்கு தவிசாளரால் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சருக்கு கடிதம்-

mrs ainkaran (7)யாழ். வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் கௌரவ. சஜித் பிரேமதாச அவர்கட்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் விடயம் வருமாறு, கடந்த பல காலத்திற்கு முன்னதாக நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மறைந்த கௌரவ பிரேமதாச அவர்களால் வலி மேற்கின் பென்னாலைப் பகுதியில் வீடமைப்புத் திட்டம் ஏற்படுத்தப்பட்டு அங்கு மக்கள் வசித்தனர். பின்னர் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகள் காரணமாக அங்கு மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து வீடுகள் கைவிடப்பட்டன. தற்போது பிரதேசத்தில் பலர் வீடுகளற்ற நிலையில் உள்ளனர். எனவே மீளவும் அங்கு வீட்டுத் திட்டத்தினை 100நாள் திட்டத்தின் வாயிலாக ஏற்படுத்தித் தாருங்கள் என கோரப்பட்டுள்ளது.

இலங்கைக்கான திட்டங்கள் குறித்து ஐ.நா ஆராய்வு-

un repஆசியாவிற்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவி செயலாளர் நாயகம் ஹவோலிங் சூ ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஆறு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள இவர்கள் நேற்றுக்காலை நிதியமைச்சர் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து உரையாடியுள்ளனர். இதன்போது, ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு மேலதிகமாக வழங்க உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அவர்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் செயலகம் கூறியுள்ளது,

இலங்கை திட்டமிடல் சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் அமைப்பு-

sri lanka (4)இலங்கை தி;ட்டமிடல் சேவையின் உத்தியோகத்தர்கள் தமக்கான தொழிற்சங்கம் ஒன்றினை அமைபப்தற்காக கடந்த 26.03.2015 அன்று கொழம்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் ஒன்றுகூடி தமது தொழில் ரீதியாக ஏற்படுகின்ற தடங்கல்கள் தொடர்பாக கலந்துரையாடி தமககான புதிய நிர்வாகத்தினையும் தெரிவுசெய்துளளனர். இதில் உப தலைவர்களில் ஒருவராக சி.இராமமூர்த்தி (பணிப்பாளர், கால்நடை மற்றும் விவசாய அமைச்சு) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அடுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் இணைப்பாளர்கள் தெரிவு இடம்பெற்றது. இpதில வடககு மாகாண இணைப்பாளராக தெல்லிப்பளை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சி.சிவகுமார் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட ஒளிபரப்பாளர் கமலினி செல்வராஜன் காலமானார்-

kamaliniசிரேஷ்ட ஒளிபரப்பாளரும் நடிகையுமான கமலினி செல்வராஜன் இன்றுகாலை காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்றுகாலை காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. அன்னாரது உடல் நாளை காலை 8.30 மணிமுதல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நண்பகல் 12 மணி அளவில் இறுதிக்கிரியைகள் இடம்பெறும் என அவரது குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சுமார் 1.30 மணியளவில் அன்னாரின் பூதவுடல் பொரள்ளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. இவர் இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளைக்கும் வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாவர். கமலினி இலங்கைத் தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகையுமாவார். இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றிபெற்ற ‘கோமாளிகள்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ‘ஆதர கதாவ’ என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்; பெண்மணியாக நடித்திருந்தார் கமலினி. வானொலி தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளரும் ஆவார். இவர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவி ஆவார். சுமார் 30வருடங்கள் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக கடமையாற்றினார். பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தூய நீர் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி போராட்டம்-

chunnakamயாழ் சுன்னாகம் பகுதிக்கு தூய நீர் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்றுகாலை 10 மணியளவில் அமைதிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்” என்ற தொனிப்பொருளில் தூய நீர் இன்றி பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியத்தினால், இந்த அமைதிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 78 மணித்தியாலத்திற்குள் தங்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் யாழ். மக்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை, வழங்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் தீர்வு வழங்கப்பட வேண்டும் என கோரி சிலர் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்டிருந்தாக தெரியவருகின்றது.

வட்டுக்கோட்டையில் மூதாட்டி அடித்துக் கொலை-

dead.bodyநேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பண்ணாகம் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் இனந்தெரியாத நபர்களல் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மூதாட்டி வீட்டில் தனித்து இருந்த நிலையில் வீட்டில் அவரைக் காணவில்லை என கடந்த 02.04.2015ல் வட்டுக்கோட்டை பொலிசில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் பின்னர் மூதாட்டி வாழ்ந்த வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஆட்களற்ற வீடு ஒன்றில் இருந்து மூதாட்டி சடலமாக மீட்கப்படடுள்ளர்ர். தொடர்ந்து பொலிஸ் மற்றும் ஏனைய அமைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டதனை அடுத்து மரண விசாரணையின் பொருட்டு சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் மரண விசாரண அதிகாரி அதிக இரத்தப் போக்கே இறப்பிற்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குறித்த மூதாட்டியின் முகப் பகுதியில் பலத்த காயம் காணப்பட்டமை குறிப்பிடக்கூடியதாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் ஜனாதிபதி சந்திப்பு-

maiththiriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நூன் ஹ_சைனை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையில் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இரு தலைவர்களிடையேயும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இலங்கை ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என பாகிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பாகிஸ்தான் ஜனாதிபதி வழங்கிய விருந்துபசார நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்றுள்ளார்.

தினேஸ் குணவர்த்தனவை தலைவராக நியமிக்குமாறு கோரிக்கை-

dineshமுன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 50 எம்.பிக்கள் சபாநாயகருக்கு கடிதமொன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்க்கட்சி தலைவராக தினேஸ் குணவர்தனவை நியமிக்க வேண்டும் என ஒரு சாரார் கோரிவருகின்ற போதும், சம்பிரதாயபூர்வமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நியமிக்க வேண்டும் என்று ஒரு சாரார் கோரி வருகின்றனர். இரா.சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக்க ஜே.வி.பி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தமது ஆதரவையும் வெளியிட்டுள்ளன.

கொட்டகத்தெனவில் விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு-

ladyகொட்டகத்தெனவில் காணாமற்போன பெண்ணின் சடலம் நேற்று மீட்கப்பட்டதை தொடர்ந்து அப்பிரதேசத்தின் பாதுகாப்புக்காக விசேட அதிரடி படையைச் சேர்ந்த 50 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கஹவத்தை, கொட்டகத்தெனவில் கடந்த ஞாயிறன்று காணாமல்போன பெண், நேற்று அப்பிரதேசத்திலுள்ள நீரோடையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது பிரேத பரிசோதனை, இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளது. இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும்நிலையில் பிரதேச மக்கள் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பிரதேசத்தின் பாதுகாப்பு கருதி விசேட அதிரடிப்படையினர் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கொட்டகத்தெனவில் இதுவரை 18 பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.

மகாவலி கங்கையில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு-

90909மஹாவலி கங்கையில் நீராடச்சென்று காணாமல் போன சிறுவன் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படையினரின் உதவியுடன் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிறுவன் நீராடிய இடத்திலிருந்து 30 மீற்றர் தொலைவில் சடலம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவன் தனது நண்பர்களுடன் நேற்று நண்பகல், மஹாவலி கங்கையில் நீராடச் சென்று காணாமல் போயிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இச்சிறுவனுடன் நீரில் மூழ்கிய மேலும் இரு சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றில் தரம் 8இல் கல்வி கற்கும் மாணவர்கள் மூவரே மஹாவலி கங்கையில் நீராடச் சென்றிருந்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூட்டான் பிரதமரின் இலங்கை விஜயம்-

bhutan primeபூட்டான் பிரதமர் சேரிங் டொப்கே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. மூன்று நாள் விஜயமாக அவர், எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை வரும் பூட்டான் பிரதமர், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து உரையாடவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். அபிவிருத்தி உதவியாளர்களுக்கான கலந்துரையாடல்-

meetingஎதிர்வரும் 11.04.2015 அன்று யாழ் மாவட்டத்தில் பணியாற்றிவரும் அபிவிருத்தி உதவியாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பஸ்டியன் விருந்தினர் விடுதியில் நடைபெற உள்ளதாக ஏற்பாடடாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பில் குறித்த அபிவிருத்தி உதவியாளர்கள் 2005ம் ஆண்டில் அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டவர்கள் தொடர்ந்து கடந்த 10 வருடங்களாக அபிவிருத்தி உதவியாளர்களாகவே கடமையாற்றி வருகின்றனர் என்பதுஇங்கு குறிப்பிடக்கூடிய விடயமாகும்.

இராணுவத்தைச் சேர்ந்தவர் தற்கொலை-

suicide17ஆவது கெமுணு படைமுகாமில் கடமையாற்றிய இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள கெமுணு படை முகாமில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். பதுளை பகுதியைச் சேர்ந்த வீரசிங்க (வயது27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இராணுவத்தைச் சேர்ந்தவரது சடலம் படை முகாமில் இருப்பதாகவும், நீதிபதி வந்;தபின் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படுமெனவும் கூறப்பட்டிருந்தது.

தொல்புரம் சர்வோதய மண்டபத்தில் மகளிர்தின நிகழ்வு-

ssdfdfdfdயாழ். தொல்புரம் மாதர் சங்கத்தினரால் தொல்புரம் சர்வோதய மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்டது. இவ் நிகழ்வின்போது வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் சிறப்பு அததிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார். இவ் நிகழ்வின் குறித்த மாதர் சங்க அமைப்பினரால் தவிசாளரின் தன்னலமற்ற அர்ப்பணிப்புடனான சேவை தொடர்பில் மாதர்சங்க அமைப்பினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இவ் மகளிர் தினம் எமது பிரதேசத்தில்; பரவலான வகையில் தற்போது மேற்கொள்ளப்படுவதே மகளிர் ஆகிய எமக்கு கிடைத்த பெரு வெற்றி என்றே கூற வேண்டும். இவ்வாறான நிகழ்வுகள் ஊடாக மகளிர் தொடர்பிலான விழிப்புணர்வு பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும். இதுவே எமது இலக்கு நோக்கிய பயணத்தின் வெற்றிக் கல்லாக அமையும். இன்று பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் மீது சமூகம் கொண்டுள்ள பற்றுறுதியின் நிலையில் மேலும் பல மாற்றங்கள் இடம்பெற ;வேண்டும். இவ்வாறான மாற்றம் என்பது அடிமட்டத்திலிருந்து நாட்டின் சகல மட்டங்களிலும் ஏற்பட வேண்டும். இன்று இவ் நாட்டில் 50 வீதத்திற்கும் அதிகமாக பெண்களே காணப்படுகின்றனர் Read more

காணாமற்போனோர் குறித்த ஆணைக்குழுவின் அமர்வு-

missingகாணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இன்று அம்பாறையில் ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைய அம்பாறையில் இன்றுமுதல் எதிர்வரும் 9ம் திகதிவரை சாட்சி விசாரணைகள் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்துள்ளார். 10 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் 300 முறைப்பாட்டாளர்களுக்கு இம்முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இன்று மற்றும் நாளை கல்முனை பிரதேச செயலகத்திலும், 08 மற்றும் 09ஆம் திகதிகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளது. இந்த அமர்வுகளின்போது புதிய முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இடம்பெற்ற ஆணைக்குழுவின் அமர்வுகளில் இதுவரை 2ஆயிரத்து 350க்கும் அதிகமானவர்களிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. காணாமற்போனோர் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எதிர்க்கட்சி தலைவர் பதவி அறிவிக்கப்பட்டால் செயற்படுவோம்-இரா.சம்பந்தன்-

Sampanthan (3)எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு எமக்கு முறையாக அறிவிக்கப்பட்டால், நாம் உண்மையாக செயற்படுவோம். மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையகக் கட்சிகள் எமக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை அழைத்து கலந்துரையாடியமை பற்றி கூறும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும், எமது செயற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் நேர்மையானதாக இருக்கும். கடந்த செவ்வாய்க்கிழமை சபாநாயகர் என்னை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். கட்சித் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் இது அமைந்திருந்தது. இவ்வேளையில் எதிர்க்கட்சி தலைவர் விவகாரமும் அங்கு பேசப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் சபாநாயகரும் நானும் கலந்துரையாடினோம். எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுமானால், அதுகுறித்து ஆச்சரியப்படவோ, அன்றேல் வழங்கப்படாவிட்டால் அதுகுறித்து கவலைப்படவோ போவதில்லை. எவ்வாறெனினும், நாம் உண்மையாக செயற்படுவோம் என்றார். இந்நிலையில், சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதற்கு ஏப்ரல் 7ஆம்திகதி முடிவு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது

வடக்கு முதல்வர் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு-

sfdddஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் முதலமைச்சர் அலுவலகத்திலே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பில் வட மாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அவுஸ்திரேலிய அரசாங்கம் எந்த அளவுக்கு வடமாகாணத்தில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுத்து வருவது தொடர்பாக ஆராய்வதற்கே அவர் இங்கு வருகை தந்திருந்தார். மேலும் அவரிடம் தனித்துவமாக பேச வேண்டிய அவசியம் இருக்கவில்லை.. அரசியல் மாற்றம் என்ன மாதிரியாக நன்மை தீமைகளை மக்கள் மத்தியில் கொண்டு வந்துள்ளது என்பது தொடர்பில் என்னிடம் கேட்டறிந்து கொண்டார். மேலும் அரசுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு தமது நாடு பாடுபடும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்.ஆயர் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு-

67676அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி மற்றும் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆகியோர்ககிடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.ஆயர் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. அண்மைக்கால அரசாங்க மாற்றத்தின் பின்னர் யாழ்.மண்ணில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் யாழ்ப்பாணத்திற்கு என்ன உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி ஆயரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆயர் பதிலளிக்கையில், முன்னைய ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சி மாறி தற்போது மைத்திரி ஆட்சி உருவெடுத்துள்ளது. எனினும் மைத்திரி ஆட்சியிலும் சிறிய மாற்றங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரதமர் ரணிலுக்கும் இடையில் முரண்பாடுகள் உண்டு அவர்களுக்கிடையில் இணக்கப்பாடு அவசியம் என தெரிவித்தார். மேலும் றொபின் மூடி யாழ் மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தம்முடைய அரசால்; பல வகையிலான உதவிகளை செய்ய முடியும். என தெரிவித்துள்ளார்.

கட்சி ஒழுக்கத்தை மீறுவோருக்கு எதிராக தீர்மானம்-

chandrikaகட்சியின் ஒழுக்கத்தை தொடர்ச்சியாக மீறுவோருக்கு எதிராக விரைவில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின்போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். கட்சியின் ஒழுக்கத்திற்கு முரணாக செயற்படுவோர் தொடர்பில் ஜனாதிபதி தீர்மானங்களை மேற்கொள்வாரெனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆட்சியின்போது அனைவரும் குற்றங்களை இழைத்தார்கள் என்ற அடிப்படையில் குற்றங்களை இழைத்த சிலரும் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். எனினும் அவர்கள் தாம் செய்த தவறுகளை உணர்ந்து மாற்றமைடய முயற்சிக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு-

suicideயாழ். ஏழாலை தெற்கு மயிலங்காட்டை சொந்த இடமாகக் கொண்ட தச்சுத் தொழிலாளி இன்றுகாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்றுகாலை 7.45 மணியளவில் மயிலங்ககாடு அம்மன் கோவிலில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 7பிள்ளைகளின் தந்தையும், 69வயதுமான வைரமுத்து சண்முகலிங்கம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் நேற்று இரவு வீட்டுக்குச் சென்று இரவு உணவு உட்கொண்டுள்ளார். பின்னர் காலை எழுந்து பார்க்கும்போது அவர் வீட்டில் இருக்கவில்லை. பிள்ளைகளும், மனைவியும் வேலைக்குச் சென்றுவிட்டதாக எண்ணி அவரைத் தேடவில்லை இருப்பினும் காலை மயிலங்காடு அம்மன் கோவிலடியால் வந்த சிலர் தூக்கில் தொங்கியநிலையில் சடலம் ஒன்று இருப்பதாக சுன்னாகப் பொலிஸாருக்கு அறிவித்தனர். அதன்படி சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மரணமானவர் நீண்டகாலமாக இதயநோய் தாக்கத்திற்குள்ளாகியிருந்ததாக கூறப்படுகின்றது.

புத்தளம், புளிச்சாங்குளம் விபத்தில் மூவர் உயிரிழப்பு-

accidentபுத்தளம், முந்தல், புளிச்சாங்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பலியானவர்களில் 9 மாத குழந்தை, பெண்ணெருவர் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி அகியோர் உள்ளடங்குவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த முச்சக்கர வண்டியில் 5பேர் பயணம் செய்தநிலையில், கடுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ள மேலும் இருவர் முந்தல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்கான அவர்கள் சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹாவலி கங்கையில் நீராடச்சென்ற சிறுவனைக் காணவில்லை-

90909மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற 13 வயது மாணவனொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் அம்மாணவனுடன் நீரில் மூழ்கிய மேலும் இரு மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றுமாலை காணாமல் போன மாணவனை மீட்கும் பணியில் பிரதேசவாசிகளும் சுழியோடிகளும் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றில் தரம் 8ல் கல்வி கற்கும் மாணவர்கள் மூவரே இவ்வாறு நீராடச் சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருந்தபோது இவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் இவர்களில் இருவரை பிரதேசவாசிகள் உடனடியாக மீட்டுள்ளனர். மற்றைய சிறுவனை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காணாமல் போன கஹவத்தை பெண் சடலமாக மீட்பு-

ladyஇரத்தினபுரி, கஹவத்தை, கொடகெதன பிரதேசத்தில் காணாமல் போன பெண்ணினுடையது என நம்பப்படும் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் வைத்தே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர். சந்திராணி சுவர்ணலதா என்ற 39வயதுடைய பெண் கடந்த 5ஆம் திகதி காணாமல் போயிருந்தார். சடலம் அவரது வீட்டிலிருந்து சுமார் 500-600 மீற்றர் தூரத்திலிருக்கும் வாய்க்காலிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்திலிருந்து இதுவரையிலும் கொட்டகெத்தனையிலிருந்து 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கொள்ளை-

robbery (4)எல்பிட்டிய – பிட்டிகல வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று அதிகாலை கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகத்தில் வந்தவர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ளவர்களது கை கால்களை கட்டிவிட்டு, பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளையிடப்பட்ட பணத்தின் பெறுமதி இதுவரையில் கணக்கிடப்படவில்லை. இந்நிலையில், கொள்ளையர்களை கைதுசெய்ய எல்பிட்டிய காவல்துறையினர் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் கொலை-

murderபண்டாரகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துரையிலுள்ள அவரது வீட்டிலேயே இன்றுகாலை இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

யோசித்த பயிற்சிபெற 210 லட்சம்; செலவு-

yosithaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வாரன இலங்கை கடற்படையின் லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ, வெளிநாட்டில் பயிற்சி பெற்றதற்காக 210 இலட்சம் ரூபாய், கடந்த அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவர், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டதன் பின்னர் நீக்கப்பட்டார். ஜனாதிபதி பாதுகாப்பாளராக அவருக்கு அந்தளவுக்கு பயிற்சியளிக்கப்படவில்லை என்றும் யோசித்த ராஜபக்ஷ, கடற்படையில் இணைந்துகொள்வதற்கான நடைமுறைகள் பின்பற்றவில்லை என்றும் அவர் பயிற்சிபெற்றமை தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பமைச்சினால் கடற்படை தலைமையகத்துக்கு கிடைத்த பணிப்புரைக்கு அமையவே யோசித்த ராஜபக்ஷ, இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அவருடைய கல்விச் சான்றிதழ்கள் தொடர்பிலான ஆவணங்கள் அவருடைய தனிப்பட்ட கோப்புகளில் இல்லை என கூறப்படுகிறது.

காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு-

body foundயாழ். தொண்டைமானாறு அக்கரை கடலில் நேற்று) நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமற்போன இளைஞனின் சடலம், இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தூர் வடக்கைச் சேர்ந்த கருணாணந்தன் மிதுலன் (வயது 22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக கடலுக்கு சென்ற 12 நண்பர்களும் கடலில் குளித்த பின்னர் கேக் வெட்டுவதற்காக அனைவரையும் அழைத்தபோது, நண்பர்களில் ஒருவர் மட்டும் கரைக்கு வரவில்லை. இதனையடுத்து, இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் மீனவர் மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், காணாமற்போனவர் மீட்கப்படவில்லை. ஏனைய 11 நபர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர். காணாமற்போன இளைஞன், இன்று சடலமாக மிதந்த நிலையில் மீனவர்கள் சடலத்தை மீட்டுள்ளனர்.

மொரட்டுவை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது-

arrest (30)மொரட்டுவை பிரதேசத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியுடன் நுழைந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹபரகட பகுதியில் வைத்து சந்தேகநபர் கைதுசெய்யயப்பட்டுள்ளார். கைதுசெய்யும்போது சந்தேகநபரிடமிருந்து டி56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்குரிய ரவைகள் 20 மற்றும் 75 கிராம் தங்க ஆபரணங்கள் என்பன என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 17ம்திகதி, குறித்த நிதி நிறுவனத்துக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட சம்பவத்துடன் இரு சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஹோமாகம பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்;.

மலையக ரயில் சேவைகளில் பாதிப்பு-

train_lanka_கண்டி, நாவலப்பிட்டியிலிருந்து நுவரெலியாவின் ஹற்றனை அண்மித்துள்ள கொட்டகலைக்கு எண்ணெய் கொள்கலன்களை ஏற்றிச்சென்ற ரயில் வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று அதிகாலை 2.05 மணியளவில் தடம்புரண்டுள்ளது. இதனையடுத்து மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பில் இருந்து பதுளை நோக்கியும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில்கள் வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளன. தடம்புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலம் மீட்பு-

dead.bodyகிளிநொச்சி, கந்தசுவாமி ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள 58ஆவது இராணுவ படைப்பிரிவில் பணியாற்றும் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர், இன்றுகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியை சேர்ந்த எச்.எஸ்.மதுசங்க (வயது 25) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார். இவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, 17 பேர் காயம்-

accidentமரண வீட்டுக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற வான், வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பலியானதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 12பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தேகொடையிலிருந்து அநுராபுரத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அநுராதபுரம்- பெனிதெனிய வீதியில் திவுலுவ-கலகமுவ எனுமிடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது சம்வத்தில் காயமடைந்தவர்கள் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு விஜயம்-

presidentஜனாதிபதி மைத்திபால சிறிசேன, இம்மாதம் இறுதியில் ஜப்பானுக்கு விஜயம் செய்யவிருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் அவர், அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இந்தியா, பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளதுடன் பாகிஸ்தானுக்கு இன்றையதினம் விஜயம் செய்யவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்க இராஜாங்க செயலர் ஜூனில் இலங்கைக்கு விஜயம்-

john heryஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, ஜுன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவர் இலங்கைக்கு இறுதியாக 1982ஆம் ஆண்டே வருகைதந்திருந்தார். புதிதாக இலங்கையில் தெரிவாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கூறியிருந்தார்.

வைரவர் சிலையினை விற்க முற்பட்டவர் கைது-

viravarssss13 கிலோ நிறையும் 1.5அடி உயரமுமுடைய வைரவர் சிலையை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு திருமலை வீதியிலுள்ள கடையொன்றில் குறித்த சிலையை விற்பனை செய்ய முயன்றுள்ளார். மட்டக்களப்பு கொத்துகுளத்து வீதியைச் சேர்ந்த பத்மநாதன் ஜெகதீஸ்வரன் என்ற குறித்த நபர் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்து ஆலயமொன்றிலிருந்து குறித்த சிலை திருடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட நபர் மட்;டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

தலாய் லாமாவுக்கு அனுமதி மறுப்பு, சீனா வரவேற்பு-

sri lanka chinaதிபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவிற்கு இலங்கை அழைப்பு விடுக்காமையானது, சீனாவிற்கு மதிப்பளித்துள்ளமையை எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அரசாங்க பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி த ரொய்டர்ஸ் இணைத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தலாய்லாமா இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக முன்னர் தகவல் வெளியாகி இருந்தன. எனினும் இந்த தகவலை இலங்கை அரசாங்கம் நிரகரித்திருந்தது. இதன் மூலம் ஒரே சீனா என்ற கொள்கையை இலங்கை தொடர்ந்தும் பின்பற்றுகின்றமை உறுதியாகி இருப்பதாக சீனாவின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இனவாத – மதவாத தண்டனை சட்டத்தை வரவேற்கிறேன்-மனோ-

manoஇனவாதம் எது, மதவாதம் எது, இனவுரிமை எது, மதவுரிமை எது என்பன பற்றி இந்நாட்டு அரசியல், மத தலைவர்கள் குறிப்பாக பெரும்பான்மை தரப்பை சேர்ந்தவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். தட்டிபறிக்கப்படும் நமது உரிமைகளுக்காக தமிழ் பேசும் மக்கள் குரல் எழுப்புவது, போராடுவது, எழுதுவது இனவாதமல்ல. அடுத்த இனத்தின் உரிமைகளை தட்டிபறிப்பது, வெட்டிக்குறைப்பது தான் இனவாதமாகும். இந்த தெளிவு அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியிலும் இருக்கும் பெரும்பான்மை கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் இருக்கவேண்டும். இந்த தெளிவுடன்தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இந்த சட்டம் நல்லது. ஆனால், இந்த தெளிவு சிலருக்கு இல்லை. ஆகவே இனவாதம், மதவாதம் பேசினாலோ, எழுதினாலோ 2 வருடம் சிறைதண்டனை என குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்திருப்பதை எச்சரிக்கையுடன் வரவேற்கின்றேன் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு கனடா தொடர்ந்தும் உதவி-

canadaஇலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக கனடா அறிவித்துள்ளது. சர்வதேச நிலக்கண்ணி விழிப்புணர்வு மற்றும் உதவிவழங்கல் தினத்தை முன்னிட்டு கனடாவின் உயர்ஸ்தானிகரம் இந்த அறிக்கையை விடுத்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின், கனடா இலங்கையில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு உதவிவழங்கி வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 8 லட்சத்து 50 ஆயிரம் டொலர்களை வழங்கவிருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அரசாங்கத்தின் 35 வேலைத்திட்டங்கள் மீளாய்வு-

sri lanka (4)முன்னாள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 35 வேலைத்திட்டங்கள் மீளாய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரவிக்கின்றன. அவற்றில் 28 வேலைத்திட்டங்கள் சீனாவினால் நிதியிடப்பட்டவை என்று கூறப்படுகிறது. இந்த வேலைத்திட்டங்களின் பெறுமதி, ஊழல் மோசடிகள் மற்றும் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் குறித்தே மீளாய்வு செய்யப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் தமிழ் மொழி புறக்கணிப்பு-

tamilமிழ்மொழி அரச கரும மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் திருகோணமலை மாவட்ட அரச கரும நிர்வாகத்தினர், திணைக்களங்கள் அதுவிடயத்தில் அசமந்தப் போக்கில் செயற்படுகின்றன. இவ்வாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரனி ஜே. எம்.லாஹிர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாணசபை அமர்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எமது மாகாண வீதி அபிவிருத்தி காணி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி சிங்களப் பெண்மணியாவார். சகோதரி தனது அமைச்சு கோவைகளை எமக்கு தமிழிலே அனுப்பி வைக்கிறார். அதற்காக இந்தச் சபையிலே அவரைப் பாராட்டுகின்றேன். இதுதான் நல்லாட்சிக்கான முன்னுதாரணங்கள். ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் அரசகரும நிருவாகத்தினர், திணைக்களங்கள் தமிழ் மொழி விடயத்தில் அசமந்தப் போக்கிலேயே செயற்படுகின்றன. என்று அவர் குற்றஞ்சாட்டினார். பெரும்பாலான பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்கள மொழியிலேயே முறைப்பாடுகள் பதியப்படுகின்றன. பயங்கரவாத குற்றத்தடுப்பு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கூட சிங்கள மொழில் பதியப்படுவதால் ஒரு நிரபராதிகூட எதிரியாகமாறுகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது. Read more

சந்திரிகா தலைமையில் ஒற்றுமைக்கான அலுவலகம்-

chandrikaமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில், தேசிய ஒற்றுமைக்கான அலுவலகம் அமைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு நல்லிணக்கத்தையும், தீர்வையும் அடைவதற்கான பரிந்துரைகளை இந்தச் செயலணி முன்வைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் அலுவலகத்தில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை வெளிவந்ததும் அதனை உள்ளக விசாரணை பொறிமுறை செயற்பாட்டிற்காக நாங்கள் கவனத்தில் கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். உள்ளக செயற்பாட்டை மேற்கொள்ளும் நோக்கில் அரசு ஏற்கனவே பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சில் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆனைக்குழுவின் 19ஆவது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில், 81.5 வீதமான மக்கள் தமது வாக்குக்களைப் பயன்படுத்தியிருந்தனர். இலங்கையின் வரலாற்றில் இது மிகப்பெரிய வாக்களிப்பு வீதமாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெரிவுசெய்வதில் நாட்டின் அனைத்து சமூகங்களும் ஐக்கியமடைந்தன. ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்துதல் கருத்து சுதந்திரம், சட்டத்தை ஆட்சிப்படுத்துதல், நல்லாட்சி, மனித உரிமையை பாதுகாத்தல் ஆகிய அபிலாசைகளை அடைந்து கொள்வதற்காக மக்கள் சிறிசேனவிற்கு வாக்களித்தனர். புதிய அரசு பதவியேற்றதிலிருந்து ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல்,

Read more

இனவாத கருத்துக்களை வெளியிட்டால் இரண்டு வருட சிறை-

jail.......இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிடுவோருக்கு தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டக்கோவையில் திருத்தத்தைக் கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பில் இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெளிவுபடுத்தியுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு அமைவாக, இனவாதம் மற்றும் மதவாதம் போன்றவற்றைத் தோற்றுவிக்கும் வகையிலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டால் அது தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் குற்றமாகக் கருதப்படும். அந்த தவறை செய்பவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐ.நா உதவி பொதுச் செயலாளர் இன்று இலங்கைக்கு விஜயம்-

un repஐ.நாவின் உதவி பொதுச்செயலாளர் ஹவுலியேங் ஷ_ இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஹவுலியேங் ஷ_ எதிர்வரும் 10ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார் என இலங்கைக்கான ஐ.நா அலுவலகம் தெரிவிக்கின்றது. இந்த காலப்பகுதியில், புதிய அரசியல் சூழ்நிலையின்கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கான தேவைகளை அடையாளம் காண்பதற்காக அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடவுள்ளார். ஐநா உதவி பொதுச் செயலாளர், வட மத்திய மற்றும் வட மாகாணங்களுக்கும் விஜயம் செய்வதற்கு எண்ணியுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் குறிப்பிடுகின்றது. இதன்போது, அந்த மாகாணங்களிலுள்ள அரச உயரதிகாரிகள், பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் பயனாளிகளையும் ஹவுலியேங் ஷ_ சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது-

fising (1)தமிழகத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைதாகியுள்ளனர். அவர்களின் 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை வடமாகாண மீனவர்களின் பிரதிநிதிகளும், வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சரும் கடந்த தினம் ஜனாதிபதியை சந்தித்து தமிழக மீனவர்களின் பிரசன்னம் குறித்து முறையிட்டிருந்தனர். இதனையடுத்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக கூறப்பட்டிருந்தது. இது குறித்த தமிழக மீனவர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். இவ்விடயம் தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளையும் பாதிக்கும் என அவர்கள் கூறியிருந்தனர்.

தலாய்லாமா இலங்கை வருவதற்கு சீனா எதிர்ப்பு-

talai lamaதிபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா இலங்கைக்கு வருவதற்கான விசாவினை வழங்குவது தொடர்பில் சீனா தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் தலாய்லாமாவை இலங்கைக்கு வருமாறு அழைத்தமைக்கும் சீனா எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நட்பு நாடு என்ற ரீதியில் இலங்கை சீனாவின் கோரிக்கைக்கு இணங்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பிரிவினைகள் வெற்றிகொள்ளப்படவில்லை-அமெரிக்கா-

tom malinowskyயுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் திணைக்களத்துக்கான உதவி செயலாளர் டொம் மாலினோஸ்கி இதனைக் கூறியுள்ளார். 30 வருடங்களாக இலங்கையில் இடம்பெற்று வந்த யுத்தம் கடந்த 2009ம் ஆண்டு நிறைவுக்கு வந்தது. இதன்பின்னர் நாட்டில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, நாட்டில் ஜனநாயகத்தையும், மீளமைப்பையும் உறுதிபடுத்தி இருக்க முடியும். ஆனால் இலங்கையின் முன்னைய அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை. கடந்த 150 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா பெற்ற அனுபவத்தை போன்றே இலங்கையரசு 5 வருடங்களுக்கு முன்னர் பெற்றிருந்தது. எந்த ஒரு நாட்டிலும் சிவில் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆனால் இலங்கையில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், பிரிவினைகள் வெற்றி கொள்ளப்படவில்லை. கடந்த 5 வருடங்களாக இலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் இடையில் பதட்டமான நிலைடையே தொடர்ந்து நிலவியது. ஆனால் தற்போது இலங்கையில் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சுமுக நிலை உருவாகியுள்ளது என டொம் மாலினோஸ்கி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடலுணவுப் பொருட்களின் இறக்குமதி தடை மீளாய்வு-

euroepean unionஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கடலுணவுத் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய முகாமைப் பணிப்பாளர் ஊகோ எஸ்டுடோ இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார். சர்வதேச சட்டத்திட்டங்களை பின்பற்றாத காரணத்தினால் முந்திய ஆட்சியின்போது இலங்கையில் இருந்து கடலுணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்திருந்தது. எனினும் தற்போது புதிய அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளின் அடிப்படையில், இந்த தடைகுறித்து எதிர்வரும் மேமாதம் மீளாய்வு செய்யவிருப்பதாக அவர் கூறியுள்ளார். அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பான விசாரணைகள் முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையை ஆறு மாதங்களுக்கு பிற்போடுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரவு வழங்கியிருந்தன. இலங்கையில் உள்நாட்டு பொறிமுறை ஒன்றை அமைத்து, யுத்தக்குற்றங்கள் குறித்து விசாரணை செய்யவும், பொறுப்புடைமையை நிறைவேற்றி நியாயம் வழங்கவும் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டமையை முக்கியமானதாக கருதுகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மன்னார் மாவட்ட நிலங்களை கையளிப்பது தொடர்பில் கலந்துரையாடல்-

maiththiriமன்னார் மாவட்டத்திலுள்ள நிலங்களை மீண்டும் மக்களுக்கு கையளிப்பது தொடர்பிலும் மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது. நிலங்கள் அடையாளம் காண்பதை முக்கிய இலக்காக கொண்டு, ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுஇந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. மாவட்ட செயலகங்களுக்கு கீழ் உள்ள நிலங்களை இந்த நடவடிக்கைக்காக பயன்படுத்துமாறும் ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நிலங்களை பகிர்ந்தளிக்கும் போது வளங்களை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். சுமார் 1734 குடும்பங்கள் மன்னார் மாவட்டத்தில் நிலம் தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்ததுடன் அவற்றில் 902 குடும்பங்கள் நிலங்களை பெறுவதற்கு உரித்துடையனவாகியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் பலி-

accidentகிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் முரசுமோட்டை பகுதியில் கெப் வண்டி மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். முரசுமோட்டை சிவன் கோவில் பகுதியில் நடந்துச் சென்றவர் மீது இன்று அதிகாலை கெப் வண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து இடம்பெற்றதன் பின்னர் கெப் வண்டி பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இயக்கச்சி பகுதியை சேர்ந்த 85 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், கிளிநொச்சி தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை வேன் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை-

school vanபாடசாலை சேவையிலீடுபடும் வேன்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றமை குறித்து முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிடுகின்றது. இத்தகைய செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்நாட்டு போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரன் தெரிவித்துள்ளார். பொலிஸ் அறிக்கையில்லாமல் பாடசாலை சேவையிலீடுபடும் வேன்களுக்கு சாரதிகளை இணைத்துக்கொள்வதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது. சிறுவர்களுக்கு நேருகின்ற துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக, பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சாரதிகளை இணைத்து வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெண் பராமரிப்பாளர் ஒருவருடன் வேன்களில் சிறுவர்களை அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறைகளில் 1000ற்கும் அதிகமான மரணதண்டனை கைதிகள்-

jailமரண தண்டனை விதிக்கப்பட்ட 1050 கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு இலக்கான 9,700 கைதிகள் சிறைச்சாலையில் காணப்படுவதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார குறிப்பிடுகின்றார். 34வீதமான கைதிகள் போதைப்பொருள் குற்றச்சாட்டிற்கு இலக்கானவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு இலக்கான சந்தேகநபர்கள் 22 வீதமானோரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். இதன் காரணமாக சிறைச்சாலைகளில் நெருக்கடி தோன்றியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளவத்தையில் இந்திய தம்பதியினரின் சடலங்கள் மீட்பு-

deathகொழும்பு, வெள்ளவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து இந்திய தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான முறையில் உயரிழந்த இவர்களின் சடலங்களை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கண்டெடுத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 36 மற்றும் 37 வயதுடைய ஆண்,பெண்ணின் சடலங்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த இருவரின் மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விருவரினதும் சடலங்கள், வெள்ளவத்தை, 40ஆவது ஒழுங்கையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையிலிருந்து நேற்றரவு மீட்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மானிப்பாயில் கைக்குண்டுகள் மீட்பு-

granadeயாழ். மானிப்பாய் பகுதியில் வெற்றுக்காணியில் இருந்து எஸ்.எஸ். ஈ 87 ரக இரண்டு கைக்குண்டுகள் மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டு, இராணுவத்தினரால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன. மானிப்பாய் கட்டுடை பகுதியில் நேற்று வியாழக்கிழமை குறித்த கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதே இடத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது தோட்டக்காணிக்கு பக்கத்தில் உள்ள வெற்றுக்காணிக்குள் சென்றபோது, அங்கு இரண்டு கைக்குண்டுகள் இருப்பதை கண்டு, மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பிரகாரம், நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக நேற்று இரவு இராணுவத்தினர் குறித்த கைக்குண்டினை செயழிலக்க செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

யேமனிலிருந்து மூன்று இலங்கையர்கள் அழைத்துவரப்பட்டனர்-

yemen sri lankanயேமனில் இடம்பெறும் மோதலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் மூவர் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தோனேஷிய படகினால் குறித்த இலங்கையர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் இலங்கையர்கள் ஐவரை பாதுகாப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.