வட்டுவாகல் சப்த கன்னிகள் ஆலய இராஜகோபுர அடிக்கல் நாட்டு நிகழ்வு-(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் சப்த கன்னிகள் ஆலயத்தின் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றபோது அந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த அடிக்கல் நாட்டு விழாவின்போது சப்த கன்னிகள் ஆலபத்தில் புராதனகால கலைவண்ணத்துடன் கூடிய மண்குடம் ஒன்று பன்னிரெண்டு அடி ஆழத்துக்கும் அப்பால் கண்டு எடுக்கப்பட்டிருந்தது. இது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது.