IMG_3602 - Copyவவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் கலை விழாவும் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (01.12.2017) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கலைமகள் முன்பள்ளியில் முன்பள்ளியின் முகாமைத்துவக்குழு தலைவர் திரு.ப.ரவிசங்கர் அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் திரு செந்தில்நாதன் மயூரன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட பொறுப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா தெற்கு வலய முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் திரு.தர்மபாலன், வன்னி விழுதுகள் பவுண்டேசன் தலைவர் திரு குலேந்திரன் ஆனந்தராசா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். மற்றும் மாணவர்கள், சிறார்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_3543 IMG_3553 IMG_3561 IMG_3565 IMG_3580 IMG_3585 IMG_3591 IMG_3602 IMG_3618 IMG_3624 IMG_3626 IMG_3632 IMG_3639 IMG_3648