Header image alt text

சிறிய குற்றச்சாட்டுகளின் கீழ் மிக நீண்ட நாள்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

கொலை, போதை வர்ததகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களைத் தவிர சிறிய குற்றச்சாட்டுகளின் கீழ் மிக நீண்ட நாள்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக, நீதிமன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் 50 பேரளவில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சின் செயலாளர் பந்துல ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊரெழு KMI மற்றும் உரும்பிராய் லோகா அகடமி இணை நிறுவனங்களின் பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும் (21.10.2018) பிற்பகல் 3.30மணியளவில் இணை நிறுவனங்களின் ஆசிரியர் மு.கயூரகன் தலைமையில் ஊரெழு KMI முன்றலில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ். கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் அ.சுபாகரன், வலிகாமம் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் க.சந்திரலிங்கம் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர் திருமதி மிமலாதேவி விமலநாதன், உரும்பிராய் இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி பொன்மலர் தர்மலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

Read more

யாழ். மூளாய் இந்து இளைஞர் சங்கத்தின் 75ம் ஆண்டு நிறைவு பவள விழா இன்று (21.10.2018) பிற்பகல் 2.30மணியளவில் மூளாய் இந்து இளைஞர் மன்றத் தலைவர் சி.யனாத்தனன் தலைமையில் மூளாய் பிரசாத் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்வின் முதன்மை விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அவர்களும், விசேட விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி இ.விக்கினேஸ்வரன், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், பூநகரி பிரதேச செயலாளர் ச.கிரு~னேந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக ஆலய வழிபாடு இடம்பெற்று, விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு மங்கல இசையுடன் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட மன்றக் கட்டிடத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் வைபவ ரீதியாக திறந்துவைத்தார். Read more

யாழ். ஏழாலை மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று (21.10.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 9மணியளவில் சங்கத்தின் தலைவர் திருமதி மைதிலி சிவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், உடுவில் பிரதேச செயலர் சிவராஜசிங்கம் ஜெயகாந், வடமாகாண திட்டமிடல் பிரதிப் பிரதம செயலர் ஆர்.உமாகாந்தன், கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாணப்  பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ், மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் நா.பஞ்சலிங்கம் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் க.தர்சன், வலிவடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன்,

Read more

யாழ். குப்பிளான் தாயகம் கல்வி நிலையத்தின் வாணிவிழா-2018 நிகழ்வு இன்று (20.10.2018) மாலை 3மணியளவில் தாயகம் முன்றலில் தாயகம் கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் திரு. றயந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபர் க.கராளசிங்கம் ஆகியோரும், கௌரவ விருந்தினராக கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத்தலைவர் சோ.பரமநாதன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

யாழ். கோண்டாவில் நாராயணா சனசமூக நிலையத்தினால் கிராமத்திலுள்ள ஆசிரியர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு கடந்த 12.10.2018 வெள்ளிக்கிழமை மாலை சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்களும், அக் கிராமத்திலிருந்து ஆசிரியர்களாக பணியாற்றுகின்ற சுமார் 30 ஆசிரியர்கள் ஆலய முன்றலில் இருந்து மங்கள வாத்தியங்களின் இசையுடன் விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டார்கள். Read more

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தின்கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தென்னிலங்கை இளைஞர், யுவதிகள் அநுராதபுரம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். இவர்களுக்கும் யாழ். கோப்பாய் பிரதேசத்தின் உரும்பிராய் பகுதி இலக்குமி இளைஞர் கழக உறுப்பினர்களுக்குமிடையிலான இளைஞர் பரிமாற்ற நிகழ்வுத் திட்டம் இடம்பெற்றது.

இதன்கீழ் தென்னிலங்கை இளைஞர் யுவதிகள் இங்குள்ள கோப்பாய், உரும்பிராய் பகுதியிலுள்ள இளைஞர், யுவதிகளின் வீடுகளில் ஐந்து நாட்கள் தங்கிநின்று இங்குள்ள உணவுப் பழக்கவழக்கங்கள், இங்குள்ள கலாச்சாரம் என்பவற்றைப் பகிர்ந்துகொண்டு இங்குள்ள சுற்றுலா மையங்களையும் சென்று பார்வையிட்டிருந்தனர். மேற்படி நிகழ்விற்கான இறுதி வைபவமும், அவர்களை வழியனுப்புகின்ற நிகழ்வும் 14.10.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். Read more

யாழ். குப்பிழான் சிங்கப்பூர் திரு. கந்தையா கிருஸ்ணர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நிதிப் பங்களிப்பில் வருடாந்த உதவிகள் வழங்கும் நிகழ்வு குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் 17.10.2018 புதன்கிழமை மாலை 3மணியளவில் நடைபெற்றது.

குப்பிழான் வடக்கு கிராம முன்னேற்றச் சங்கத் தலைவரும், ஆசிரியருமான திரு. தி.சசீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக சுன்னாகம் பிரதேச சபை தவிசாளர் கருணாகரன் தர்ஸன், யாழ். இந்து கலாச்சார அமைச்சின் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் சிவ மகாலிங்கம், சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க ஓய்வுபெற்ற பொது முகாமையாளர் ந.சிவலிங்கம், எழுத்தாளர் ஐ.சண்முகலிங்கன் ஆகியோரும், Read more

யாழ். இந்துக் கல்லூரியில் உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை எனும் நடமாடும் சேவை 13.10.2018 சனிக்கிழமை இடம்பெற்றது. கல்லூரி வளாகத்தில்; நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அவர்களின் தலைமையில் காலை 9.00மணியளவில் மேற்படி நடமாடும் சேவை ஆரம்பமானது.

ஜனாதிபதியின் பணிப்புரையின்கீழ் பிரதமரின் வழிகாட்டலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சீ. அலுவதுவெல, திருமதி அலுவெதுவல, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி கொடகந்த, மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன், விஜயகலா மகேஸ்வரன், யாழ். மாநகர மேயர் இ.ஆர்னோல்ட், மாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், அ.பரஞ்சோதி, கே.சயந்தன், யாழ். மாநகரசபை உறுப்பினர் தர்சானந்த், Read more

யாழ். விடத்தற்பளை கமலாசனி வித்தியாலய கலையரங்க மண்டப திறப்பு விழாவும் பரிசில் நாள் நிகழ்வும் இன்று (18.10.2018) வியாழக்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் வித்தியாலயத்தின் முதல்வர் இரத்தினம் நாகேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தர்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி கோட்டக்கல்விப் பணிப்பாளர் வல்லிபுரம் நடராசா, தென்மராட்சி பிரதேசசபையின் உதவி தவிசாளர் செல்வரத்தினம் மயூரன் ஆகியோரும், மதிப்புறு விருந்தினர்களாக வீரகத்தியார் காசிநாதர், வைத்திலிங்கம் கிரு~;ணபிள்ளை, கந்தையா நாகலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். Read more