அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தனது யாழ். விஜயத்தின்போது சுன்னாகம் மத்திய சந்தையினை இன்று (10.10.2018) நேரில் பார்வையிட்டார்.
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இடம்பெற்ற முன்னாள் அதிபர் வைஸர் சிவசுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்த நினைவுப்பேருரை ஆற்றவந்த அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் பேருரை நிகழ்த்தியபின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுன்னாகம் மத்திய சந்தைப் பகுதிக்கு சித்தார்த்தன் அவர்களுடன் சென்று மத்திய சந்தையின் நிலைமைகளைப் பார்வையிட்டார். Read more
யாழ். கச்சாய் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் ஸ்தாபகர் இந்துப்போட் அமரர் சு.இராசரத்தினம் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா நிகழ்வு இன்று (10.10.2018) புதன்கிழமை முற்பகல் 9மணியளவில் யா.கச்சாய் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண தேசிய ஓய்வூதியர் தின விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (08.10.2018) இடம்பெற்றது. யாழ். மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது விருந்தினர்கள் கௌரவித்து அழைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது.
இவ் வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மட்டக்களப்பு தாழங்குடா ஸ்ரீவிநாயகர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தெ.திசாந் என்ற மாணவனுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கனடா கிளையின் அனுசரணையில் நேற்று (08.10.2018) திங்கட்கிழமை துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 135ஆவது மாதிர கிராமான நாவலர் கோட்டம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் நேற்று (07.10.2018) காலை 8மணியளவில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
ஸ்கந்தவரோதயன்களின் சங்கமம் என்னும் யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்; ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபர் செல்வஸ்தான் தலைமையில் இன்றுமாலை 5.30மணியளவில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
கோப்பாய் தொகுதிக்கான கிராமிய அபிவிருத்தி மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றுமாலை 4.30 மணியளவில் யாழ். ஊரெழு மேற்கு திலீபன் வீதியில் அமைந்துள்ள பாரதி சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்றது.
யாழ். இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலயத்தின் தேசிய வெற்றியார்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்றுமுற்பகல் வித்தியாலய அதிபர் அருட்சகோதரி சகாயநாயகி பஸ்தியாம்பிள்ளை அவர்களின் தலைமையில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அருட்பணி யேசுரெட்ணம் அடிகளாரின் ஆசியுரையுடன் ஆரம்பமானது.
யாழ். சுன்னாகம் தபால் நிலையத்திற்கான புதிய கட்டிடம் அமைப்பது சம்பந்தமான கூட்டம் இன்றுமாலை 4மணியளவில் சுன்னாகம் நகர அபிவிருத்தி சங்கத் தலைவர் குமாரவேல் அவர்களின் தலைமையில் சுன்னாகம் தபாலகத்தில் இடம்பெற்றது.
மக்கள் இல்லாத வீதிகளுக்கு கிராம அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய உதயன் பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.