புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் 2018ஆம் ஆண்டிற்கான தனது விசேட நிதி ஒதுக்கீட்டில் நவாலி வடக்கு J/134 கிராம அலுவலர் பகுதியிலுள்ள குடத்தனைவீதி புனரமைப்புப் பணிகளை 06.01.2018 ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
இதன்போது 2019ஆம் ஆண்டுக்கான பசுமைப் புரட்சி திட்டத்தின்கீழ் இரு வருடங்களில் பயன்தரக்கூடிய 100 மாங்கன்றுகள் முதல் கட்டமாக நவாலி மருதடி விநாயகர் சனசமூக நிலைய முன்றலில் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் ஜெபநேசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Read more
கிளிநொச்சி 155ம் கட்டை மூந்நூறு ஏக்கர் திட்டம் பகுதியில் நேற்று முன்தினம் கிணற்று மண் சரிந்ததால் கிணற்றுக்குள் தவறி விழுந்து புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமி உயிரிழந்தார்.
வலிதெற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட 9ம் வட்டார மக்களுக்கும் புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 07.01.2019 திங்கட்கிழமை மாலை 7மணியளவில் யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள நாடளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில நடைபெற்றது.
இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.