Header image alt text

முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு நில அளவீடு செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பகுதியில் உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணி அளவீடு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அளம்பில் சந்தியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more

முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க அரச மரம் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் 2018ஆம் ஆண்டிற்கான தனது விசேட நிதி ஒதுக்கீட்டில் நவாலி வடக்கு J/134 கிராம அலுவலர் பகுதியிலுள்ள குடத்தனைவீதி புனரமைப்புப் பணிகளை 06.01.2018 ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

இதன்போது 2019ஆம் ஆண்டுக்கான பசுமைப் புரட்சி திட்டத்தின்கீழ் இரு வருடங்களில் பயன்தரக்கூடிய 100 மாங்கன்றுகள் முதல் கட்டமாக நவாலி மருதடி விநாயகர் சனசமூக நிலைய முன்றலில் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் ஜெபநேசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Read more

கிளிநொச்சி 155ம் கட்டை மூந்நூறு ஏக்கர் திட்டம் பகுதியில் நேற்று முன்தினம் கிணற்று மண் சரிந்ததால் கிணற்றுக்குள் தவறி விழுந்து புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமி உயிரிழந்தார்.

அவரது இறுதி நிகழ்வுகள் இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. சிறுமியினுடைய இல்லத்திற்கு இன்று (09.01.2019) சென்றிருந்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர் வே.சிவபாலசுப்பிரமணியம் அவர்கள் சிறுமியின் பெற்றோர்க்கு ஆறுதல் கூறியதோடு, லண்டனில் வசிக்கும் தர்மலிங்கம் நாகராஜா (பொக்கன்) அவர்களால் வழங்கப்பட்ட சிறுதொகை நிதியுதவியையும் கையளித்திருந்தார்.
Read more

வலிதெற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட 9ம் வட்டார மக்களுக்கும் புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 07.01.2019 திங்கட்கிழமை மாலை 7மணியளவில் யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள நாடளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில நடைபெற்றது.

இச் சந்திப்பில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் 9ம் வட்டார உறுப்பினர் திருமதி. யோகாதேவி, நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகறாஜ் ஆகியோரும், சனசமூக நிலைய பிரதிநிதிகள், இளைஞர் கழகத்தினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், மயான அபிவிருத்தி சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். Read more

இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

வீர விக்ரம பதக்கம், ரண விக்ரம பதக்கம், உன்னத சேவைக்கான பதக்கம் ஆகிய பதக்கங்களைப் பெற்றுள்ள சவேந்திர சில்வா 1984ஆம் ஆண்டு கெடெட் அதிகாரியாக சேவையில் இணைந்துகொண்டிருந்தார். அவர் இலங்கை இராணுவத்தின் 53 வது படைப் பிரிவு பிரதானியாக நியமனம் பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் கோணாவில் கிராமத்தில் 05.01.2019 சனிக்கிழமை மாலை 4மணியளவில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. லண்டனில் வசிக்கும் தர்மலிங்கம் நாகராஜா (பொக்கன்) அவர்கள் தனது தந்தையாரான கந்தையா தர்மலிங்கம் அவர்களின் நினைவாக இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்தார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஆதரவாளர் திருமதி ரகுநாதன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது 65 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர்கள் வே. சிவபாலசுப்பிரமணியம், க.மகேந்திரன், கட்சி உறுப்பினர் சந்திரன், Read more

கண்டி யட்டிநுவர வீதியில் ஐந்துமாடி கட்டடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டடத்தில் சிறுவர்கள் முதல் சிலர் இருந்ததாகவும் எனினும் அவர்கள் சிறுகாயங்களுடன் காப்பற்றப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், தற்பொழுது தீயணைப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.

குறித்த கட்டடத்தின் மூன்றாவது மாடியிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதோடு, பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு பிரிவினரின் உதவியோடு தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். குறித்த தீ விபத்தில் காமநாதன் ராமராஜா (வயது 36), தங்கவேலு ராதிகா (வயது 32), காமநாதன் நிசாலன் (வயது 08), காமநாதன் சத்யஜித் (வயது 07), மற்றும் காமநாதன் சஹித்தியன் (வயது 03) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகளினால், விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் கிளைத் தோழர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக, இரு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஐவருக்கு துவிச்சக்கர வண்டிகளும், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்றுசக்கர வண்டி ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இத் திட்டத்தின் கீழ், அளவெட்டி அருணாசலா வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி பயிலும் பத்மநாதன் கம்சிகா என்ற மாணவிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஊடாகவும், கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில் தரம் 8ல் கல்வி பயிலும் ஜூட் குணசீலன் சுலக்சன் என்ற மாணவனுக்கு வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சண்முகலிங்கம் சஜீவன் ஊடாகவும், மேலும் மூவருக்கு தொழில்சார் ஊக்குவிப்புக்காக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஊடாக தலா ஒவ்வொரு துவிச்சக்கர வண்டியும் வழங்கிவைக்கப்பட்டன. மேலும், கந்தரோடையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான சச்சிதானந்தன் ரமேஸ்வரன் என்பவருக்கு மூன்றுசக்கர சைக்கிளும் பாராளுமன்ற உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
Read more

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன், ஸ்கந்தபுரம் கிராமத்தில் 05.01.2019 சனிக்கிழமை காலை 9மணியளவில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

லண்டனில் வசிக்கும் தர்மலிங்கம் நாகராஜா (பொக்கன்) அவர்கள் தனது தந்தையாரான கந்தையா தர்மலிங்கம் அவர்களின் நினைவாக இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஆதரவாளர் நேசன் அவர்களின் இல்லத்தில் அக்கராயன் கிராம சேவையாளர் சபாரத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது 55 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர்கள் வே. சிவபாலசுப்பிரமணியம், க.மகேந்திரன், கட்சி உறுப்பினர் சந்திரன், மகளீர் சங்கத் தலைவி சாந்தி, இளைஞர்கள், பெற்றோர்கள், பயன்பெறும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
Read more