கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைரஸ் தொற்றினை கட்டுபடுத்துவதற்கு பல்வேறு வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் பயணிகள் இலங்கை வருகின்றனர். உயிரச்சுறுத்தலாக காணப்படும் கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி மத்திய கிழக்கு நாடுகளையும் தாக்கி வருவதோடு, இலங்கையிலும் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. Read more
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விளக்கமறியலில் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 12 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சிறையில் உள்ள கைதிகளுக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை, மே 6ஆம் திகதி வரை மீண்டும் தடுப்புக் காவலில் வைக்குமாறு, கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது.
இலங்கையில் பணிபுரியும் சீன பிரஜைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் ஒத்துழைப்புடன் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட் ராச்சியத்தில் பணியாற்றும் இலங்கையர்களின் வசதி கருதி தூதரத்துக்கு இலவசமாக தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.
பாகிஸ்தான் கடற்படை மகளிர் அமைப்பின் தலைவரான ஷாஹீனா அப்பாஸி, வெலிசர கடற்படை முன்பள்ளி மற்றும் பகல்நேர பராமரிப்பு மையத்தை நேற்று முன்தினம் பார்வையிட்டார்.
கெரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இரத்தினபுரியைச் சேர்ந்த நபர் ஒருவரின் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளர் அனோஜ் ருத்திகோ தெரிவித்துள்ளார்.
சீனாவில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்கள் 176 பேர் நேற்று இரவு நாட்டுக்கு புறப்பட்டதாக அந்நாட்டின் இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.