திருகோணமலை, இறக்கக்கண்டி கடற்கரையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கற்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சிலவற்றை கடற்படையினர் கண்டெடுத்துள்ளனர்.
இந்த வெடிபொருட்கள் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே கண்டெடுக்கப்பட்டுள்ளன. 20 வோட்டர் ஜெல் குச்சிகள், 4 பாதுகாப்பு ரவைகள் பின்னப்பற்றிருந்த நூல்கள், 2 மின்னை கடத்தாத டெடனேட்டர்கள் போன்றவையே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வீதிக்கு அருகாமையில் நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த 18 கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் நேற்று வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
அதிக விலையில் முக கவசம் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றைத் தவிர்ப்பதற்காக நிறுவனங்களில் முறையான வேலைத்திட்டங்களை ஏற்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் துறைமுக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவில் இருந்து இதுவரை 488 இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைரஸ் தொற்றினை கட்டுபடுத்துவதற்கு பல்வேறு வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விளக்கமறியலில் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 12 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சிறையில் உள்ள கைதிகளுக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.