மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வாழைச்சேனை, கருணைபுரத்தினை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை பிள்ளையான் (64 வயது) என்பவரே இவ்வாறு குதித்து உயிரிழந்துள்ளார். Read more
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று காலை 6 மணி முதல் பயணிகளைத் தவிர ஏனையவர்கள் யாரும் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீன பிரஜைகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வீசா வழங்கும் நடவடிக்கைளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
சீனாவில் கல்வி கற்கும் 204 இலங்கை மாணவர் சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் செயற்பாடுகளை முறியடித்தல் செயற்பாடுகளுக்கு பாக்கிஸ்தான் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ வருகையாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
குடிவரவு மற்றும் குடியகழ்வு துறை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.