தெற்கு லண்டனில் அண்மையில் தீவிரவாத தாக்குதலை நடத்திய நபர் இலங்கையை பின்புலமாக கொண்டவர் எனத் தெரியவந்துள்ளது. 20 வயதான சுதேஸ் அமான் என்ற நபர், கத்தியைக் கொண்டு நடத்திய குறித்த தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
அவரது தாயும், தந்தையும் இலங்கையை சேர்ந்தவர்கள் என டெய்லி மெய்ல் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேநேரம், அவர் ஏற்கனவே, இஸ்லாமிய தீவிரவாதம் குற்றம் ஒன்றுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. Read more
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள டைக் பீஸ் பகுதியில் மூன்று இளைஞர்கள் நீராடச் சென்ற போது, ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாரென, துறைமுகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். அச்சுவேலி வல்லைப் பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து 5 வயது சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதினால் விபத்துகள் அதிகமாக பதிவாகி வருகின்றது.
இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் பிரதிநிதிகள், பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் கமல் குணரத்விற்கும் இடையில் பாதுகாப்பு செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஶ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு பிடியாணை உத்தரவு பெற்று கைதுசெய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் பணித்துள்ளார்.
தொழில்வாய்ப்பற்ற சகல பட்டதாரிகளுக்கும் இவ்வருடத்தில் தொழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹெமசிறி பெர்ணான்டோ எதிர்வரும் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் உருவாகவுள்ள புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.