Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் 31ஆம் வருட நினைவுதின நிகழ்வு புளொட்டின் பிரான்ஸ் கிளையினரால் பிரான்சில் இன்று 19.07.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் கழகத்தின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் திரு. ரங்கா அவர்களது தலைமையில் நடைபெற்றது. Read more

புளொட் தலைவரும், த.தே.கூ.வின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சித்தர்த்தன் செவ்வி
(நேர்காணல் ஆர்.ராம்)

சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காகவே தமிழ் மக்கள் ஆணை வழங்குகின்றார்கள். அத்தகைய தீர்வினைப் பெறுவதற்காக நாம் தொடர்ந்தும் ஆட்சியில் உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்று புளொட் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான த.சித்தார்த்தன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, Read more

செய்திகள்

Posted by plotenewseditor on 19 July 2020
Posted in செய்திகள் 

1. இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2711 ஆக அதிகரித்துள்ளது. Read more