Header image alt text

தெல்லிப்பளை மற்றும் தையிட்டி கிராமங்களில் இடம்பெற்ற பிரச்சார கூட்டங்கள்… Read more

கூட்டமைப்பு தான் தமிழர்களின் ஒரே கட்சி..

கூட்டமைப்பு தான் தமிழர்களின் ஒரே கட்சி.. ஒற்றுமையாய் இருந்தாலும் ஈழம் கிடைத்திருக்காது.

Gepostet von Tubetamilfm am Freitag, 10. Juli 2020

மன்னாரில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் திறந்துவைப்பு-தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மன்னார் மாவட்ட தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் மன்னார் வைத்தியசாலை வீதியில் திறந்துவைக்கப்பட்டது.ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அந்தோனிப்பிள்ளை(கொன்சால்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு காரியாலயத்தினைத் திறந்துவைத்தார். நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வன்னி மாவட்ட வேட்பாளர்களான கந்தையா சிவலிங்கம்(இல-4), ஜி.ரி.லிங்கநாதன்(இல-5), கட்சியின் உபதலைவர் வி.ராகவன், கட்சியின் பொருளாளர் க.சிவநேசன், கட்சியின் தேசிய அமைப்பாளர் க.தவராஜா, கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மன்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் து.சுந்தர்ராஜ், வவுனியா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், வவுனியா மன்னார் மாவட்டங்களின் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Gepostet von People's Liberation Organisation of Tamil Eelam – PLOTE am Freitag, 10. Juli 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மன்னார் மாவட்ட தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் மன்னார் வைத்தியசாலை வீதியில் திறந்துவைக்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அந்தோனிப்பிள்ளை(கொன்சால்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு காரியாலயத்தினைத் திறந்துவைத்தார். Read more

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை 2,366 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

கந்தக்காடு பிரசேதத்தில் அமைந்துள்ள போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையத்தில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

வேட்பாளர் கந்தையா சிவலிங்கம் மாஸ்டர் அவர்கள் மக்கள் சந்திப்புகள்… Read more

சண்டிலிப்பாய் பிரதேச முன்பள்ளி ஆசிரியர்கள் சம்மேளனத்தின் பண்டத்தரிப்பு பகுதிக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களை வேட்பாளர் பா.கஜதீபன் அவர்கள் சந்தித்தபோது… Read more

செய்திகள்….

Posted by plotenewseditor on 8 July 2020
Posted in செய்திகள் 

1. இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2093 ஆக அதிகரித்துள்ளது. இன்று சௌதியில் இருந்து வருகை தந்த 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2. பாடசாலை மாணவர்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தும் வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது அவசியம் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

3. எதிர்வரும் பொதுத் தேர்தல் சம்பவங்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்க காவல்துறை 0112472757. 0115978701 ஆகிய தொலைபேசி இலக்கங்களயும் 0112345553 என்ற தொலைநகல் இலக்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. Read more

செய்திகள்

Posted by plotenewseditor on 7 July 2020
Posted in செய்திகள் 

1. கொழும்பு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

2. இன்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2078ஆக உயர்வடைந்துள்ளது. Read more