Posted by plotenewseditor on 1 August 2020
Posted in செய்திகள்
1. நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. அதற்கமைய, பிரசார கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் சென்று பிரசாரங்களில் ஈடுபடல், துண்டுபிரசுரங்களை விநியோகித்தல், தேர்தல் பதாகைளை உப அலுவலகங்களில் காட்சிப்படுத்தல், சுவரொட்டி, விளம்பரம், பதாகைளை காட்சிப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளதென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2. இம்முறை பொதுத்தேர்தலில் புள்ளடியிடுவதற்கு தேவையேற்படின் பேனாவைக் கொண்டு சென்று பயன்படுத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நீலம் அல்லது கறுப்பு நிற குமிழ்முனைப் பேனாவை வாக்காளர்கள் பயன்படுத்த முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. Read more